ஷ்யாம் நியூஸ்
25.07.2022
தூத்துக்குடியில் வழிமறித்து தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுபடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பிரேமானந்தன் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அண்ணா நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில், அவர் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் மகாகிருஷ்ணன் (எ) மந்திரி (25) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட மகாகிருஷ்ணன் (எ) மந்திரி மீது ஏற்கனவே தென்பாகம் மற்றும் சிப்காட் ஆகிய காவல் நிலையங்களில் 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.