முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவு

 ஷ்யாம் நீயூஸ்

15.07.2022

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவு


 தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைநீர் வடிகால், சாலைப்பணிகளை விரைந்து முடித்திட மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாநகரில் உலக பிரதிபெற்ற பசிலிக்கா பேராலயமான பனிமய மாதா பேராலய ஆலயத்திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி நிறைவடையும்  விழாவிற்கு மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி, வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாகும்.

   இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.1000கோடி திட்ட மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அடிப்படையில் பனிமய மாதா ஆலயம் மற்றும் ஆலயத்தை சுற்றியுள்ள ரோடுகள், முக்கிய தெருக்களில் மழைநீர் வடிகால்கள் அமைத்தல், கழிவுநீர் கால்வாய்களை மேம்படுத்துதல், புதியதாக தார் சாலை, சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

   இப்பணிகள், ஏற்கனவே தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், பனிமய மாதா திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இதனையறிந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி அதிகாரிகள் குழுவினருடன் ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மேயர், திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாத வகையில் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்திடவேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.

  ஆய்வுப்பணிகள் குறித்து, மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி கூறுகையில் தூத்துக்குடி மாநகரில் அனைத்து மத, இன மக்களும் வழிபடும் கருணைக்கடலாக அன்னை பனிமய மாதா ஆலயம் அமைந்துள்ளது. பனிமய மாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 இந்நிலையில், இரண்டு வருட கொரோனா கால கட்டத்திற்கு பிறகு இந்த வருடம் நடைபெறும் திருவிழாவினை சிறப்பாக நடத்திட ஆலய நிர்வாகத்தினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்தவகையில், திருவிழாவிற்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட மாநகராட்சி நிர்வாகம் தகுந்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தவகையில், வெளியூர்களில் இருந்து வந்து செல்லும் பக்தர்கள் மற்றும் பக்தர்கள் வந்து செல்லும் வாகனங்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ஆலயத்தின் சுற்றுப்பகுதியான தெற்கு காட்டன் ரோடு, ஜார்ஜ் ரோடு, தண்டல் சந்து, மறக்குடி தெரு உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிப்பதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்கள் அமைத்தல், தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட இப்பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் நாள்தோறும் தவறாமல் கண்காணித்து பணிகளை விரைவில், தரமாக முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்து எட்டயபுரம் சாலையில் கலைஞர் அரங்கத்திற்கு அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து, மேயர் ஜெகன்பெரியசாமி குறிஞ்சி நகர் டவர் சாலை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதிகளில் மழைநீர் தேங்கதாவாறு டவர் அருகில் இருக்கும் நான்கு சாலைகளிலும் மழைநீர் வடிகால் குழாய் அமைக்கவும், அவற்றை அருகிலுள்ள மின்மோட்டார் அறையுடன் இணைக்கும்படி பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இதன்மூலமாக வரும் காலங்களில் இப்பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு தடுக்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொதுமக்களிடம் மேயர் தெரிவித்தார். ஆய்வின்போது, வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், நேர்முக உதவியாளர்; ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரபாகர், ஜோஸ்பர்,  மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனர்.

இதற்கிடையில் மாதா கோவில் பங்குதந்தை மேயரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து திருவிழாவிற்கான காலக்கட்டத்தில் மாநகராட்சி சார்பில் சில பணிகளையும் உதவிகளையும் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாநகராட்சி அலுலகத்தில் ஆணையர் சாருஸ்ரீ மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருடன் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் பணிகளை விரைவாக முடித்திடவும் பல்வேறு வளர்ச்சிகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொண்டார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...