முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மணல் புதர் செடிகள் அகற்றும் பணியை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.

 ஷ்யாம் நீயூஸ்

20.07.2022

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மணல் புதர் செடிகள் அகற்றும் பணியை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 60வது வார்டுகளிலும் உள்ள தேவையற்ற ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி விரிவான சாலைகளையும் பொதுமக்களையும் நடைபாதைகளாகவும் சீர் செய்து வருகின்றன. பல சாலைகளில் தேவையற்ற மணல்களும் சில பகுதிகளில் முட்புதர் உள்ளிட்ட செடிகள் வளர்ந்த நிலையில் காணப்பட்டன. இதை அப்புறப்படுத்த வேண்டும் என்று பல்வேறு பொதுநல அமைப்புகளும் சில பகுதிகளில் வியாபாரிகள் சங்கத்தினரும் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து மாநகராட்சியால் 15வது நிதிக்குழு மாணியம் திட்டத்தின் கீழ் புதிதாக வாங்கப்பட்ட ஜேசிபி வாகனம் மூலம் தெற்கு கடற்கரை சாலை பகுதியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக காணப்பட்ட மணல் குவியல்கள் மற்றும் செடிகளை அகற்றும் பணியை சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் ரெக்ஸின், மாநகர திமுக மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், பிரதிநிதி பிரபாகர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் வளர்ந்து வரும் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை முழுமையாக செய்து கொடுக்க வேண்டும். என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்கள். அதனடிப்படையில் 60 வார்டு பகுதிகளிலும் மழைகாலத்திற்கு முன்பு தண்ணீர் தேங்காத வகையில் கால்வாய் புதிதாக சில அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதே போல் தார்சாலையும் பல பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது பல சாலைகளில் தேங்கியுள்ள மணல்களால் பாதிப்பு ஏற்படுவதாகவும் சாலையும் சுருங்கியுள்ளதாகவும் அதை முழுமையாக அப்புறப்படுத்தி விரிவான சாலையை ஏற்படுத்தி தரவேண்டும். என்று கோரிக்கை வரப்பெற்றதையடுத்து கலெக்டர் பங்காள முதல் தெற்கு கடற்கரை சாலை 3வது மைல் பாலம் முதல் பழைய துறைமுகம் வரை முதற்கட்டமாக சாலையின் இருபுறங்களில் இருக்கும் தேவையற்ற மணல்கள் முட்புதர்கள் செடிகள் அப்புறப்படுத்தி விரிவான சாலையை பொதுமக்கள் வசதிக்கேற்ப செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் மற்ற பகுதிகளிலும் இதுபோன்று முழுமையாக மக்கள் நலன் கருதி அந்தபணிகளை செய்துகொடுக்க உள்ளோம். பாதசாரிகளுக்கு நடந்து செல்வதற்கென்று அமைக்கபப்பட்டுள்ள அந்த வழிதடத்தில் நடந்துசெல்ல வேண்டும். பிரதானசாலைகள் அனைத்தும் போக்குவரத்து இடையூறு இல்லாத மாநகராட்சியை உருவாக்கி கொடுப்பதுதான் எங்களுடயை இலக்கு என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...