ஷ்யாம் நீயூஸ்
01.02.2025
அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?
தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய பணியாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை பெற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கும் உள்ளது. பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர், சாலை வசதி, ஆகியவைகளை கண்காணிக்காமல் அலுவலகத்தில் இருந்து கொண்டு கள ஆய்வு செய்யாமல் பொதுமக்களுக்கும் அரசு உயர் அதிகாரிகளும் தவறான தகவலை வழங்கி வருகிறார் என்றும் தெரிய வருகிறது. இதனால் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்து பகுதிகளில் வாழும் கிராம மக்கள் சுகாதாரம் இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும், பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் அவல நிலையில் உள்ளனர்.
ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் பணிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானு, ஐகோர்ட் ராஜா ஆகியோர் ஓவர்சியர் முத்துராமன் தலைமையில் 50 சதவீதம் கமிஷனை வாங்குவதாக குற்றம் சாட்டப்படுகிறது. அவர் கீழ் பணி புரியும் அனைத்து ஊழியர்களும் ஊழலில் கொடி கட்டி பறக்கின்றனர்.
களப்பணி செய்து முறையாக கட்டிடங்கள் கட்டப்படுகிறதா? சரியான அளவுகளில் சாலைகள் அமைக்கப்படுகிறதா? என்று கண்காணிக்க வேண்டிய பணி மேற்பார்வையாளர்(ஓவர்சியர்) முத்துராமன் போடப்படாத 50 மீட்டர் சாலைக்கு சாலை போடப்பட்டதாக மெசர்மென்ட் புக் எழுதி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டும் உள்ளது. மேற்படி பஞ்சாயத்து பகுதிகளில் அரைகுறையாக போடப்படும் சாலைகளை கண்காணிக்காமல் கமிஷன் வாங்கியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல் பஞ்சாயத்து தலைவர் வாக்கு அரசியலுக்காக தரும் தகுதி இல்லாத நபர்களுக்கு இலவச வீடுகளை பணம் பெற்றுக் கொண்டு ஒதுக்குவதும் ,ஒதுக்கிய வீடுகள் அந்தந்த இடத்தில் கட்டப்படுகிறதா என்ற கண்காணிப்பு இல்லாமலும், இருந்து வருவதும் தெரிய வருகிறது. ஊழல்வாதியாக செயல்பட்ட ஓவர்சீர் முத்துராமனுக்கு மழை வெளத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சான்றிதழ் உதவி ஆட்சியர் வழங்கியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அதிக பணம் புரளும்பஞ்சாயத்துகளான மாப்பிள்ளையூரணி, கோரம்பள்ளம், அய்யநடப்பு, குமாரகிரி போன்ற பஞ்சாயத்துகளில் முத்துராமன் தன் கைவசம் அனைத்து வேலை பணிகளையும் வைத்துக்கொண்டு வறுமையில் உள்ள பஞ்சாயத்துகளை மற்ற 4 ஓவர்சீருக்கு ஒதுக்கி உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கி சேதாரம் ஆன வீடுகளை நேரில் ஆய்வு செய்து உரிய நபரின் ஆவணங்களை வாங்கி வீட்டுப் பணிகள் நடைபெறுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் ஆவணங்களை சரியாக சரி பார்க்காமல் பஞ்சாயத்து செயலர்கள் மூலம் கண்மூடித்தனமாக லஞ்சம் பெற்றுக் கொண்டு தகுதி இல்லாதவர்களுக்கு பணியை மேற்கொள்ள உதவியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
மேற்கூறிய அதிகாரிகளால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு திட்டங்கள் மக்களுக்கு கிடைக்காமலும் அதில் 50 சதவீதம் லஞ்சமாக பெற்றுக் கொள்வதால் தரம் இல்லாத பணிகள் நடைபெறுவதாலும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் ஊழலில் முதலிடம் ஆக உள்ளது. எனவே இவர்கள் மீது ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்கள் அரசு நலத்திட்டங்களை முழுமையாக பெற முடியும் என்ற சூழல் உள்ளது என தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆக தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் ஊழலில் முதல் இடத்தில் இருப்பதுவெட்ட வெளிச்சமாக தெரிகிறது!!!!!!!!!!