முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆர்பிஐ-இன் முன்னாள் ஆளுநருக்கு மோடி அரசு வழங்கிய முக்கிய பதவி.. ஓய்வு பெற்ற உடனே அடுத்த பதவி!

 SHYAM NEWS

22.02.2005

ஆர்பிஐ-இன் முன்னாள் ஆளுநருக்கு மோடி அரசு வழங்கிய முக்கிய பதவி.. ஓய்வு பெற்ற உடனே அடுத்த பதவி!


இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான சக்தி காந்த தாஸ் பிரதமர் நரேந்திர மோடியின் பிரின்சிபல் செக்ரெட்டரியாக (2) நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய தேர்வுக்கு அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதலும் வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை அப்பாயின்மென்ட் கமிட்டி ஆஃப் தி கேபினேட் (DoPT) சனிக்கிழமையன்று பிறப்பித்தது. 2019 ஆம் ஆண்டின் செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் பி.கே மிஸ்ரா பிரதமரின் பிரின்சிபல் செக்ரட்டரியாக (1) இருந்து வருகிறார். DoPT-யின் உத்தரவின்படி சக்தி காந்த தாஸின் நியமனம் பிரதமரின் பதவி காலத்துடன் இணைந்து அல்லது மறு உத்தரவு வரும் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சக்தி காந்த தாஸ் 2018-ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பேற்றார். அப்போது மூன்று வருட காலத்திற்கு கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவின் மத்திய வங்கியான ஆர்பிஐயின் தலைவராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். கோவிட்-19 தொற்று போன்ற உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் ரஷ்ய உக்ரைன் போர் உட்பட பல்வேறு சவால்களை எதிர்கொண்டவர் இவர். "ரூ.227 கோடி மோசடி பண்ணீட்டாங்க சார்..ரிசர்வ் வங்கியிடம் பிரபல நிறுவனத்தின் மீது புகார் கொடுத்த வங்கி.." சக்தி காந்த தாஸை ஆர்பிஐ-இன் கவர்னராக நியமித்தபோது பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். டிபிஎஸ் பேங்க்-இன் மார்க்கெட்டிங் ஹெட் ஆஷிஷ் வைத்யா ஐஏஎஸ் பின்னணி கொண்ட முந்தைய ஆளுநர்களான ஒய். வேணுகோபால் ரெட்டி மற்றும் துவ்வூரி சுப்பாராவ் வெற்றிகரமாக தங்கள் பொறுப்பை நிர்வகித்ததாகவும், தாஸும் அதே போன்ற நல்லுறவை அரசாங்கத்துடன் வளர்ப்பார் என்றும் பாராட்டினார். அதற்கு ஏற்ப தனது பதவிக்காலம் முழுவதும் திறம்பட செயல்பட்டார். Advertisement Powered By Brics செத்துப் போய்விட்டது - பிரிக்ஸ் நாடுகளை மீண்டும் மீண்டும் சீண்டும் Trump கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாகத் துறைகளில் அவருக்கு பரந்த அனுபவம் உள்ளது. நிதி, வரிவிதிப்பு, தொழில், உள்கட்டமைப்பு போன்ற தொழில்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இளமை காலம்: புவனேஸ்வரில் பிறந்த சக்தி காந்த தாஸ் டெமான்ஸ்ட்ரேஷன் மல்டி பர்ப்பஸ் ஸ்கூலில் கல்வி பயின்றார். பின்னர் டெல்லியில் உள்ள சயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பிஏ மற்றும் எம்ஏ பட்டம் பெற்றார். 2021-ஆம் ஆண்டில் உத்கல் பல்கலைக்கழகத்தால் அவருக்கு லிட்ரேச்சர் பட்டம் வழங்கப்பட்டது. 



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...