முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருவள்ளூர் அருகே பள்ளி விடுதி அறையில் பிளஸ் 2 மாணவி தற்கொலை

ஷ்யாம் நியூஸ் 

26.07.2022

திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


 திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. திருத்தணி அடுத்ததெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசனம் மகள் சரளா (17), இந்த ப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அவர் பள்ளி விடுதியிலேயே தங்கி படித்து வந்தார். நேற்று காலை விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் சரளா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதுகுறித்து, தகவலறிந்ததும் திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் மப்பேடு போலீஸார் விரைந்து, மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

இதனிடையே, காஞ்சிபுரம் டிஐஜி சத்யபிரியா, திருவள்ளூர் எஸ்பி சீபாஸ் கல்யாண், சிபிசிஐடி டிஎஸ்பி செல்வகுமார், திருவள்ளூர் சார் ஆட்சியர் மகாபாரதி, வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளிக்கு வந்து மாணவிகள், விடுதி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் டிஐஜி சத்யபிரியா, எஸ்பி சீபாஸ் கல்யாண் கூறியதாவது:

காவல் மற்றும் வருவாய்த் துறையின் முதல்கட்ட விசாரணையில், மாணவி சரளா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், தங்கள் மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட சிபிசிஐடி ஆய்வாளர் திரிபுரசுந்தரி விசாரணை மேற்கொண்டு வருகிறார். தவறான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம். தேவையற்ற இடங்களில், மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மாணவி தற்கொலை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்வர்கீஸ் கூறும்போது, ‘‘இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

மாணவியின் சகோதரர் சரவணன் கூறும்போது, ‘‘சரளா விடுதி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக விடுதி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விடுதிக்கு வந்து பார்த்தால், அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக விடுதி நிர்வாகம் மற்றும் போலீஸார் தெரிவிக்கின்றனர். சரளாவின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.

இதனிடையே, மாணவியின் உறவினர்களும், தெக்களூர் கிராம மக்களும் பொதட்டூர்பேட்டை - திருத்தணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 4 பேருந்துகளை அவர்கள் சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டது. இதையடுத்து, திருத்தணி போலீஸாரும் எம்எல்ஏ சந்திரனும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க பள்ளி மற்றும்விடுதி வளாகத்திலும் தெக்களூர் கிராமம், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் 700-க்கும்மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...