முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு

 ஷ்யாம் நீயூஸ்

12.07.2022

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாருக்கு  பொதுமக்கள் பாராட்டு

25 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாருக்கு  பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி 58 குக்கிராமங்களை உள்ளடக்கிய பகுதி. வளர்ந்து வரும் ஊராட்சியில் பெரிய ஊராட்சி ஆகும். 

இந்த பகுதியில் மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் மின் தடை அடிக்கடி ஏற்படுவதாகவும், கனரக வாகனங்கள் சில பகுதிகளில் செல்ல முடியாத நிலையில் மின் வயர்கள் இடையூறாகவும் இருந்து வந்தது.  இதற்கு தீர்வு காண வேண்டுமென்று பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள், வியாரிகள், வாகன உரிமையாளர்கள் கடந்த 25 ஆண்டுகளாக அரசிற்கு கோரிக்கை வைத்து வந்தனர். 

இந்நிலையில் தற்போது பொறுப்பில் உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை மின் வாரிய அதிகாரிகளிடம் ஊராட்சி மன்றம் சார்பில் செய்ய வேண்டிய பணிகளை எடுத்து கூறியிருந்தார். 

அவரது கோரிக்கையை ஏற்று, ஊராட்சி மன்ற பகுதிக்குட்பட்ட ராஜபாளையம், தாளமுத்துநகர் மெயின்ரோடு, சுனாமிகாலனி ஆகிய பகுதிகளில் தாழ்வாக உள்ள பழைய மின் கம்பங்களை அகற்றி உயரமான புதிய மின் கம்பங்கள் கிரேன் மூலம் 12 இடங்களில் புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் இனிவரும் காலங்களில் மின் தடை இல்லாத நிலை உருவாகும். தாழ்வான பகுதிகள் அனைத்தும் உயர்வான மின்வயர்கள் மூலம் அமைக்கப்படுவதால்,  போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் அமையும்.

மின்கம்பம் நடும் பணியை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் பார்வையிட்டார். நகர்புற மின்வாரிய செயற்பொறியாளர் பி.ராம்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, பெலிக்ஸ், திமுக கிளை செயலாளர் மாரியப்பன், சமூக ஆர்வலர் தொம்மை உட்பட மின்வாரிய ஊழியர்கள் உடனிருந்தனர். 

25 வருடமாக அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறாமல் இருந்ததை, திமுக ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் நிறைவேற்றிக் கொடுத்துள்ள அவருக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், வாகன உரிமையாளர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...