முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாசரேத்தில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை.


ஷ்யாம் நியூஸ் 

25.07.2022




 நாசரேத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பைக், டி.வி. போன்ற பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் கதீட்ரல்ரோட்டில் வசித்து வருபவர் அகஸ்டின் ஸ்பர்ஜர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். மகன் நாசரேத் வீட்டில் இருந்து ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அகஸ்டின் ஸ்பர்ஜர் மனைவி இறந்து விட்டதால் இறப்புக்கு வந்த மகள் தனது தந்தையை அமெரிக்காவிற்கு கூட்டி சென்றுள்ளார்.

நாசரேத் வீட்டில்மகன் சில்வான்ஸ் வசித்து வருகிறார். இவர்  தனது மனைவியுடன்  சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது சென்னையிலும் இவருக்கு சொந்தமான  ஒரு வீடு உள்ளது. தனது வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என்பதால் சென்னை வீட்டை அடைத்து விட்டு நாசரேத்திலுள்ள தனது தந்தை வீட்டில் இருந்து அவரும் அவரது மனைவியும் பணி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 23ம் தேதி சனிக்கிழமை சென்னையில் உள்ள வீட்டை பார்ப்பதற்காக மனைவியுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை சென்றார். 

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவில் வீட்டின் கேட்டை உடைத்து உள்ளே சென்று தேக்கு மரத்திலான முன் கதவையும் கம்பியால் உடைத்து வீட்டுக்குள் இருந்த 55" டி.வி, விலை மோட்டார் பைக், 3 பவுன் தங்க நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இன்று காலையில் வீட்டு முற்றத்தை பெருக்குவதற்காக வந்த முத்து மணி என்பவர் வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு, கேட் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு, அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அகஸ்டின் ஸ்பர்ஜர் மாமா மகன் ஆஸ்டின் மைக்கேல் நாசரேத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில்  நாசரேத் சப் இன்ஸ்பெக்டர் ராய்ட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்தளு. 




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...