முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

ஷ்யாம் நியூஸ் 

22.07.2022


தூத்துக்குடியில் ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்களுக்கு சதுரங்க விளையாட்டு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்களுக்கு சதுரங்க விளையாட்டு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் பேசியதாவது: தமிழ்நாட்டின் சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. தமிழக அரசு சார்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 

இதில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 2 மாணவர்கள், 2 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் நடைபெற உள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பார்வையாளராக கலந்துகொள்ள அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ‘இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்” நீங்களும் வளர்ந்து செஸ் போட்டியில் கலந்துகொள்ளலாம். செஸ் போட்டி இந்தியாவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குப்தர் அரசவையில் அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டு. 

தமிழ்நாட்டின் சென்னையில் செஸ் போட்டி நடைபெறுவது சென்னைக்கே பெருமையாகும். தமிழ்நாடு முதலமைச்சர், ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து விழிப்புணர்வு பாடல் வெளியிட்டுள்ளார்கள். சென்னை மாமல்லபுரத்தில் சிறப்பு சதுரங்க விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஒவ்வொரு சட்டமன்ற அளவிலும் மைதானங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதியில் 6 மைதானங்கள் வர இருக்கின்றது. 

மாணவர்களாகிய உங்களுக்கு ஆர்வம் இருப்பதை படிக்கலாம். விளையாடலாம். அதில் பெரிதாக யோசிக்கனும். படிப்பாக இருந்தாலும், விளையாட்டாக இருந்தாலும் தொடர்ந்து முயற்சிகள் செய்ய வேண்டும். செஸ் விளையாடினால் ஞாபகசக்தி, திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான திறமைகளும், அனுபவங்களும் கிடைக்கும். எனவே எல்லோரும் செஸ் விளையாடுங்கள். தெரியாவிட்டால் கற்றுக்கொள்ளுங்கள். நாம் எங்கிருந்தாலும் சாதிக்க முடியும். மாவட்ட அளவிலான ஸ்குவாஷ் விளையாட்டு போட்டியில் நீங்கள் சாதிப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் ரத்தினராஜ், புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அருட்தந்தை ராயப்பன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், பயிற்சியாளர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...