முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதல் தம்பதி வெட்டிக் கொலை.

ஷ்யாம் நியூஸ் 

26.07.2022

எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியரை வெட்டிக் கொன்ற வழக்கில் பெண்ணின் தந்தை மற்றும் தாயை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டி (50). இவரது மகள் ரேஷ்மா (20), கோவில்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான வடிவேல் மகன் மாணிக்கராஜ் (26) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜூன் மாதம் ரேஷ்மா திடீரென மாயமானார். காதலர்கள் இருவரும் ஜூன் 29-ந் தேதி திருமணம் செய்து கொண்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசித்து வந்தனர். 

கடந்த வாரம் அவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர். அவர்கள் மாணிக்கராஜின் தாய் பேச்சியம்மாள் என்பவருடன் தங்கி இருந்தனர். நேற்று வழக்கம் போல பேச்சியம்மாள் 100 நாள் வேலைக்காக சென்றுவிட்டார். வீட்டில் மாணிக்கராஜ் மற்றும் ரேஷ்மா மட்டும் இருந்தனர். அப்போது அங்கு சென்ற முத்துக்குட்டி மகள் மற்றும் மருமகனை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இது தொடர்பாக விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது, சப்-இன்ஸ்பெக்டர் முத்துவிஜயன், காவலர் கணேசன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை கோவில்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தப்பி செல்ல முயன்ற போது அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:  எனது மகளை நல்ல நிலைக்கு கொண்டுவர நினைத்து கல்லூரியில் படிக்க வைத்தேன். மேலும் உயர்ந்த இடத்தில் திருமணம் செய்து கொடுக்க நினைத்தோம். ரேஷ்மா காதலிப்பதை தெரிந்த கொண்ட நான் அதனை கண்டித்தேன். கடந்த மாதம் 29-ந் தேதி தேர்வு எழுத கல்லூரிக்கு செல்வதாக என்னிடம் ரேஷ்மா கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். பின்னர் அவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதாக எனக்கு போன் வந்தது. எனது எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று அவர்கள் வீட்டிற்கு சென்று திருமணம் தொடர்பாக பேசினேன். அப்போது வாக்குதாவம் முற்றவே ஆத்திரமடைந்த நான் அரிவாளால் மாணிக்கராஜை வெட்டினேன். அப்போது எனது மகள் ரேஷ்மா தடுக்க வந்தார். ஆத்திரத்தில் அவரையும் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டேன்.

போலீசார் தேடுவதை அறிந்ததும் கோவில்பட்டி உறவினர் வீட்டிற்கு செல்லமுயன்றேன். அப்போது போலீசார் கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொலைக்கு முத்துக்குட்டியின் மனைவி மகாலெட்சுமியும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரையும் கைது செய்தனர். கொலையாளிகளை 10 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...