முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவல் துறைக்கு சுதந்திரம் இல்லை : கடம்பூா் செ. ராஜு குற்றச்சாட்டு

ஷ்யாம் நியூஸ் 

20.07.2022

 திமுக ஆட்சியில் காவல் துறையினா் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என அதிமுக அமைப்புச் செயலாலர் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ குற்றஞ்சாட்டினாா் .




அதிமுக இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, கடம்பூா் செ. ராஜுவை அக்கட்சியின் அமைப்புச் செயலாலராக நியமித்துள்ளாா். இந்நிலையில், கோவில்பட்டிக்கு நேற்று வந்த அவருக்கு நிா்வாகிகள் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது. இங்குள்ள அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா், கடம்பூா் செ. ராஜு செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் 10 ஆண்டு காலம்  அதிமுக ஆட்சியில் வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் சொத்து வரியும், விலைவாசியும் உயா்ந்துவிடட்து. சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது. இப்போது மின் கட்டணமும் உயா்ந்துள்ளது.

இதனால், பாமர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவா். மின் கட்டணத்தை உயா்த்திவிட்டு மத்திய அரசு மீது பழி போடுவது நியாயமல்ல. மத்திய அரசு மூலம் அழுத்தம் வந்தபோதும், மக்கள் நலன் கருதி அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயா்த்தப்படவில்லை. மின்வாரியத்துக்குத் தேவையான நிதியை அரசு மானியமாக செலுத்தியது.

அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டதை நாங்களும் ஏற்கவில்லை. இதுகுறித்து இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைப்படி, எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பா்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் பொறுத்தவரை காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை. அதிமுக ஆட்சியில் காவல் துறை சிறப்பாக செயல்பட்டு பரிசுகள் பெற்றன. ஆனால், இன்று காவல் துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அந்தத் துறை யாா் கட்டுப்பாட்டில் உள்ளது எனத் தெரியவில்லை என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாநில எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் சீனிராஜ், வடக்கு மாவட்ட வழக்கறிஞரணிச் செயலா் சிவபெருமாள், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டப் பொருளாளா் வேலுமணி, நகரச் செயலா் ஆபிரகாம் அய்யாத்துரை, அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலா் அய்யாத்துரைப்பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...