முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டம் மங்களக்குறிச்சி ஊராட்சி மற்றும் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் ஆய்வு

 ஷ்யாம் நீயூஸ்

28.07.2022

தூத்துக்குடி மாவட்டம் மங்களக்குறிச்சி ஊராட்சி மற்றும் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  குடிநீர் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வாரியம், மூலம் மங்களக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் 43 45 கூட்டுக் குடிநீர் திட்டத்தை கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ மங்கள குறிச்சி நீரேற்று நிலையம் மற்றம் தாமிரபரணி ஆற்றுப்படுகை குரங்கணிக்கு அருகில் அமைந்துள்ள ஏழு எண்ணிக்கையிலான நீர்உறிஞ்சும் கிணற்றினை ஆய்வு செய்தனர்.


இத்திட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றித்தில் குரங்கணி அருகில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஏழு எண்ணிக்கை கொண்ட நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கப்பட்டு 5 ர்Pமேட்டார் மூலம் நீரேற்று நிலையம் மங்களக் குறிச்சியில் 2 லட்சம் கொள்ளளவு கொண்டுள்ள தரைமட்ட தொட்டியில் நீர் சேகரிக்கப்படுகிறது. பின்னர் 30 ர்Pமேட்டார் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு பிராதான குழாய் மூலம் 37.50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாப்பிளையூரணி ஊராட்சியில் உள்ள 1 லட்சம் லிட்டர் மற்றும் 2.25 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்டத் தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. மாப்பிளையூரணி ஊராட்சியில் 36 எண்ணிக்கை மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் (12 இலட்சம் லிட்டர்) மோட்டார் மூலம் இயக்கப்பட்டு பகிர்மான குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.


பின்னர் மாப்பிளையூரணி ஊராட்சிக்கு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய நிதியின் மூலம் கோரம்பள்ளம் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சும் கிணற்றினை ஆய்வுசெய்தார். மாப்பிளையூரணி ஊராட்சிக்கு குடிநீர் தேவைக்காக போதுமான நிதியினை அரசிடமிருந்து பெற்று குடிநீர் பிரச்சினைகளை போக்க வழிவகை செய்யப்படும் என்று உறுதியளித்தார்.


    ஆய்வின் போது தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாகப் பொறியாளர் செந்தூர்பாண்டி, மாப்பிளையூரணி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணக்குமார், உதவி நிர்வாகப் பொறியாளர் ராஜா, உதவிப் பொறியாளர் மகேஷ்குமார், ஊராட்சி துறை உதவி இயக்குநர் உலகநாதன், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், ஊராட்சி நாகராஜ், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...