ஆடி அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் "10,008 கிலோ பச்சை மிளகாய் வழிபாடுகள் சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.
ஷ்யாம் நீயூஸ்
29.07.2022
ஆடி அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் "10,008 கிலோ பச்சை மிளகாய் வழிபாடுகள் சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர்நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் ஒரே கல்லால் உருவான மிகப்பிரமாண்டமான ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் ஆலயத்தில் ஆடி மாத ஸர்வ மஹாளய அமாவாசையை முன்னிட்டு 10,008 கிலோ பச்சை மிளகாய் சிறப்பு மஹா யாகம் நடைபெற்றது.
பக்தர்களின் வாழ்வில் மனக்குறைகள், கடன்தொல்லைகள், எதிரித்தொல்லைகள் யாவும் முற்றிலுமாக நீங்கிடவும், பணம் கொழித்து செல்வவளம் பெருகிடவும், நோயில்லாத நல்வாழ்வு அமைந்திடவும், கல்விவளம் சிறந்திடவும், திருமணவரன், குழந்தை பாக்யம் கிடைத்திடவும், தகுதிக்கேற்ப அரசு வேலை கிடைத்திடவும், கொரோனா போன்ற கொடியநோய்கள் இல்லாமல் முற்றிலுமாக ஒழிந்திடவும், நன்கு மழை பெய்து விவசாயம் செழிப்பாக நடைபெறவும் வேண்டி 10,008 கிலோ பச்சை மிளகாய் சிறப்பு மஹா யாக வழிபாடுகள் சீனிவாச சித்தர் தலைமையில் கணபதி, நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமத்துடன் தொடங்கி
தொடர்ந்து 10.30மணிக்கு "10,008 கிலோ பச்சை மிளகாய்" கொண்டு சிறப்பு மஹா யாக வழிபாடுகள் துவங்கி தொடர்ந்து மதியம் வரை நடைபெற்றது. இதில், பங்கேற்ற பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறவேண்டி யாக குண்டத்தில் குவியல் குவியலாக பச்சைமிளகாயை போட்டு வழிபட்டனர்.
யாக வழிபாடுகளைத் தொடர்ந்து மதியம் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவிக்கும், மஹா காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16வகையான அபிஷேகமும், மதியம் 1மணிக்கு மஹா தீபாரதனையும் நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை சித்தர் வழிபாட்டுக்குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.