SHYAAM NEWS
19.07.2022
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாமிரபரணிக் கரை ஓரத்தில் அமைந்துள்ளது சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டு தோறும் தை மற்றும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஆடி அமாவாசைத் திருவிழா இன்று காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 30-ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. தினசரி சுவாமி திருக்கோயில் வளாகத்தில் பல்வேறு கோலங்களில் எழுந் தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வருகிற 28-ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு மேல் சுவாமி உருகு பலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, அபிசேக ஆராதனை, மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோல பவனி, இரவு 11 மணிக்கு 1-ம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடக்கிறது.
29-ம் தேதி காலை 4 மணிக்கு 2-ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிசேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், அதன்பின் ஏரல் நகர வீதி தரிசனம், ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவிலில் மாலை 6 மணிக்கு தாகசாந்தி, ஏரல் நகர் வீதிகளில் தரிசனம், 30-ம் தேதி 12-ம் திருவிழாவுடன் ஆடி அமாவாசை திருவிழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்