முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இசையை ரசித்தால் மகிழ்ச்சி கிடைக்கும் தூத்துக்குடி மேயர் ஜெகன் பேச்சு.

ஷ்யாம் நீயூஸ்

19.07.2033

 இசையை ரசித்தால் மகிழ்ச்சி கிடைக்கும் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.


தூத்துக்குடி தமிழக அரசு கலை பண்பாட்டு துறை மண்டல கலை பண்பாட்டு மையம் திருநெல்வேலி மாவட்ட அரசு இசைபள்ளி தூத்துக்குடி சார்பில் 2022ம் ஆண்டு உலக இசை தின விழா தமிழ்நாடு தினத்தை கொண்டாடும் பெருவிழா 44வது சர்வதேச சதுரங்க விளையாட்டுவிழா ஆகிய முப்பெரும் விழா நிகழ்ச்சி ராஜாஜி பூங்காவில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமசெல்வி வரவேற்புரையாற்றினார். மாவட்ட அரசு இசைப்பள்ளி சார்பில் நாதஸ்வரம் பரதநாட்டியம் தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    அதில் கலந்து கொண்ட 150 பேருக்கு சான்றிதழ் மற்றும் பல்வேறு வகையில் சாதனை செய்தவர்களுக்கு ஊக்க தொகையும் வழங்கி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் நெய்தல் திருவிழா நடைபெற்றது. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மங்காத வகையில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதுபோல் கலை பண்பாட்டுதுறை சார்பில் தவில் நாதஸ்வரம் பரதநாட்டியம் குரளோசை என பல்வேறு கலைகள் உள்ளன.

இதில் 10 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இதில் பங்கேற்று இந்த கலைகளை கற்றுக்கொள்ளலாம். இன்பம் துன்பம் கலந்ததுதான் வாழ்க்கை அதையும் நாம் எதிர்கொண்டு வாழ பழகி கொள்ள வேண்டும். துன்பமான நேரங்களில் இசை நிகழ்ச்சிகளையும் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு வந்தால் மனம் மகிழ்ச்சியடையும். இது போன்ற நிகழ்வுகள் மாநகராட்சி பகுதிகளில் எம்.ஜி.ஆர் பூங்கா, கடற்கரை பூங்கா, போன்ற மக்கள் கூடு;ம் இடங்களில் வாரம் தோறும் நடைபெறும். அதற்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் பொதுமக்கள் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்று பேசினார்.

பின்னர் கூறுகையில் தமிழக அரசின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மன்வளம் தண்ணீர் நலம் பாதுகாக்கும் வகையில் மக்காதா பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் உபயோகபடுத்தாமல் துணிப்பை பயன்படுத்த வேண்டும். என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அதை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படும் வகையில் மீண்டும் மஞ்சபை அவமானம் அல்ல சுற்றுச்சுழலை காப்பவரின் அடையாளம் பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு தூத்துக்குடி மாநகராட்சி என்ற அடையாளத்துடன் மறுபுறம் ஸ்பான்சர்கள் மூலம் 5லட்சம் துணிப்பைகள் மாநகராட்சி பகுதி முழுவதும் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதற்க்கும் ஓத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  

விழாவில் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் கோபால கிருஷ்ணன், கவுன்சிலர்கள் கனகராஜ், விஜயலட்சுமி, தென்னக வில்லிசை கிராமிய கலைஞர்கள் மறுமலர்ச்சி சங்கத்தை சேர்ந்த கலைசுடர்மணி ஜெயலலிதா மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர் போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் வட்டப்பிரதிநிதி துரை, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ் ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...