தமிழகத்தில் தூத்துக்குடி மாநகராட்சி சிறந்த மாநகராட்சி என்று உருவாக்குவது தான் எங்களுடைய இலக்கு மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கை
ஷ்யாம் நீயூஸ்
24.07.2022
தமிழகத்தில் தூத்துக்குடி மாநகராட்சி சிறந்த மாநகராட்சி என்று உருவாக்குவது தான் எங்களுடைய இலக்கு மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கை
தூத்துக்குடி பரிசுத்த பனிமய மாதா ஆலயம் மிகவும் பழமையானது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் திருவிழா நடத்தப்படும். அதே போல் வரும் 26ம் தேதி 440வது ஆண்டை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்ற பத்தாவது நாளான ஆகஸ்ட் 5ம் தேதி திருவிழா நடைபெறுகிறது.
திருவிழாவை காண வெளிநாடு, வெளி மாவட்ட, மாநிலங்களை தாண்டியும் அங்கிருந்து மக்கள் வந்து கலந்து கொள்வர். ஏராளமான மக்கள் கூடும் இடம் என்பதால் அதனை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு மாநகராட்சி நிர்வாகத்திடம் இருக்கிறது. எனவே இந்த முறை வரும் பக்தர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வதற்கும், சுத்தமாக வைத்திருக்கவும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். தேவையான அத்துனை பணிகளை நேரடியாக பார்வையிட்டு முடுக்கி விட்டு வருகிறார். அதன் மூலம் மாநகராட்சியின் பெரும்பாலான பகுதி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு சுத்தமாகி வருகிறது.
தெற்கு கடற்கரை சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் கூட்டு துப்புரவு பணியினை மேற்கொள்ள 130 தூய்மை பணியாளர்கள், 30 வாகனங்கள், முழுமையாக ஈடுபடுவதை மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழச்சியில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், மாதா கோவில் உதவி பங்குதந்தை பால்ரோமன், கவுன்சிலர் ரிக்டா, மாநகர திமுக மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது, சுகாதார அலுவலர் ராஜசேகர், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் ஜோஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் பொதுமக்களின் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்று தமிழக முதலமைச்சர் தளபதியாளர் வழிகாட்டுதலின் படி பணியாற்றி வருகிறோம். பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கவனம் செலுத்துவது மாநகராட்சியின் கடமை என்பதை உணர்ந்து செயல்படும் நிலையில் பனிமயமாதா பேராலய திருவிழாவிற்கு லட்சக்கணக்கில் மக்கள் வந்து செல்வார்கள். இந்த திருவிழாவானது ஜாதி மதம் மொழி அனைத்தையும் கடந்து அனைவரும் வந்து செல்லும் ஒரு மிகப்பெரிய திருவிழா அப்பகுதி மாநகராட்சி கிழக்கு மண்டலம் பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் முழுமையான தூய்மையான பகுதியாக இருப்பதற்கு கூட்டு தூய்மை பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமை தோறும் தூய்மை பணிகள் எல்லா பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. அதே போல் இந்த பகுதிக்குட்பட்ட இரயில்வே ஸ்டேஷன் ரோடு, வஉசி மார்க்கெட் அருகில் பல மாதங்களாக மாநகராட்சி சார்பில் செயல்பட்ட கழிவறை மற்றும் குளியலறை செயல்படாமல் சில குறைபாடுகளால் முடப்பட்டிருந்தது. அதை தற்போது சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டிருந்தது. மாநகராட்சி முழுவதும் பொது கழிவறை குளியலறை அனைவருக்கும் இலவசமாக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை மாநகராட்சி நிர்வாகம் கண்காணித்து வருகிறது. பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்தால் எந்த நேரமும் என்னை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் தூத்துக்குடி மாநகராட்சி எல்லா வகையிலும் நல்ல முறையில் பணியாற்றி சிறந்த மாநகராட்சியாக உருவாக்குவதுதான் எங்களது இலக்கு என்று கூறினார்.