முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தென்காசி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனைமர விதை நடவுப்பணியை தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.ஏ.தாமோதரன் துவக்கி வைத்தார்.

 ஷ்யாம் நீயூஸ்

25.07.2022

தென்காசி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனைமர விதை நடவுப்பணியை  தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.ஏ.தாமோதரன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் பனைமர விதை விதைக்கும் திட்டம் துவக்க விழா சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் வைத்து நடைபெற்றது. சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் காளியம்மாள் செல்வகுரார்  தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் பண்டாரம் , தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு  கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.தனலெட்சுமி , பொருளாளர் திருநெல்வேலி எஸ்.நவீனா செல்வகுமாரி , கூட்டமைப்பின் சட்ட ஆலோசகரும் தென்காசி ஐ.சி.ஆர்.பி.யு அமைப்பின் தலைவருமான  இராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர்  திருவண்ணாமலை தமிழ்செல்வி அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் எம்.ஏ. தாமோதரன் கலந்து கொண்டு ஒரு லட்சம் பனைமர விதை நடவுப்பணியை துவக்கி வைத்தார்.  தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில இணைச்செயலாளர்  கிருஷணகிரி இராஜசேகர் , துணைத்தலைவர் திருப்பத்தூர் உத்திரகுமார் , தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு  அமைப்பு செயலாளர்கள் திருநெல்வேலி முத்துமாரி , தங்கஇசக்கியம்மாள் , செல்வி மற்றும் தென்காசி  ஐ.சி.ஆர்.பி.யூ அமைப்பு மாநில நிர்வாகிகளான எஸ்.பாலசண்மும் , எஸ்.முத்துக்குமாரசாமி , எம்.சண்முகம் , ஆர்.பாலையா , ஆர்.சிபி சக்கரவர்த்தி , எஸ்.முருகையா , எம்.கணேசன் , ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதன் பிறகு செயதியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.ஏ.தாமோதரன் , தமிழர்களின் பாரம்பரியமான தேசிய மரம் பனைமரமாகும். பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பனங்கற்கண்டு , பனைவெல்லம் , கருப்பட்டி , நுங்கு ,  பதநீர் , பனங்கிழங்கு , பனங்கிழங்கு மாவு போன்ற உடலுக்கு ஆரோக்கியமான பனை உணவு பொருட்களை உணவாக உண்டு பண்டைய தமிழர்கள் நீண்ட ஆயுளோடு வாழ்ந்து வந்தனர். கட்பகவிருட்சமான பனைமரங்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். கிராமச்சாலை ஓரங்கள் , பள்ளி வளாகங்கள் , விளைநிலங்களின் வரப்பு ஓரங்கள் , மயானப்பாதைகள் , குளக்கரைகள் போன்ற இடங்களில் பனைவிதைகளை நடவு செய்து பராமரிக்கலாம். பள்ளி கல்லூரி மாணவர்கள் , விவசாயிகள் , மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் ஆகியோருக்கு பனைமரங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தவும்  திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு  தென்காசி மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் பனைவிதைகளை நடவு செய்ய தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. என்று பேசினார். நிறைவாக தூத்துக்குடி பேரிடர் மேலாண்மை அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் தா.முருகேஸ்வரி நன்றி கூறினார். பின்னர்  தென்காசி வட்டாரத்தில் உள்ள பாட்டாகுறிச்சி ஊராட்சியில் பனைவிதை நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...