ஷ்யாம் நியூஸ்
22.07.2022
தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி கணபதி நகரை சேர்ந்தவர் பெனிடிக் மகன் கவாஸ்கர் (42). இவர் தினமும் மதுகுடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இதனால் மனைவி அவரை விட்டு பிரிந்து அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனையில் இருந்த கவாஸ்கர் நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.