முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செஸ் ஒலிம்பியாட் தீபத்துக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் வரவேற்பு!

ஷ்யாம் நியூஸ் 

27.07.2022


தூத்துக்குடியில் செஸ் ஒலிம்பியாட் தீபத்துக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு செஸ் ஒலிம்பியாட் தீபம் தமிழகம் முழுவதும் எடுத்து செல்லப்படுகிறது. அதன்படி செஸ் ஒலிம்பியாட் தீபம் நேற்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வரவேற்பு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த ஒலிம்பியாட் தீபத்துக்கு சமூநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் அரசு அதிகாரிகள், பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு ஒலிம்பியாட் தீபத்துக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கும் தீபம் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

செஸ்ஒலிம்பியாட் ஜோதி நேற்று விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு வந்தது. அங்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமையில் ஜோதிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கிருந்து பள்ளி மாணவர்களின் செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் நடைபெற்றது. இதை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து சிறிது தூரம் பள்ளி மாணவர்களுடன் தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ், தாசில்தார் சசிகுமார், மாவட்ட விளையாட்டு துறை அதிகாரிகள், மற்றும் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளத்திற்கு வந்த செஸ் ஒலிம்பியாட் சுடருக்கு சாத்தான்குளம் பழைய பஸ் நிலையம்  காமராஜர் சிலை அருகே உற்சாக  வரவேற்பு  அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் தங்கையா தலைமை வகித்தார். சாத்தான்குளம் டிஎஸ்பி அருள்,  யூனியன் சேர்மன் ஜெயபதி, பேரூராட்சி  செயல் அலுவளர் உஷா, சாத்தான்குளம் யூனியன் ஆணையாளர் ராணி,  வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், சாத்தான்குளம் ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...