முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாநகராட்சியில் 29ல் தீர்மானம் 30ல் ஆய்வு மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி

 ஷ்யாம் நீயூஸ் 31.07.2022 தூத்துக்குடி மாநகராட்சியில் 29ல் தீர்மானம் 30ல் ஆய்வு மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற நாள் முதல் அனைத்து பகுதிகளின் வளர்ச்சிக்கும் முழுமையாக பணியாற்றி வருகிறாhர். தினமும் பொதுமக்களை சந்தித்து தனது அலுவலகத்திள்ள உதவியாளர் மூலம் வரும் மனுக்களுக்கு குறைகளை தீர்க்கும் வகையில் அதிகாரிகளுடன் இனைந்து பணியாற்றி வரும் மேயர் கவனத்திற்கு முத்தையாபுரம் ரவுண்டா பகுதியில் உப்பாத்து ஓடைக்கு அருகில் இரண்டரை ஏக்கர் மாநகராட்சியிடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தகவல் கிடைக்க பெற்றதையடுத்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு அந்த இடம் தற்போது மீட்கப்பட்டுள்ளது. கடந்த 29ம் தேதி மாநகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த இடத்தில் பல மாவட்டங்களிலிருந்து பாதசாரிகளாக திருச்செந்தூருக்கு நடந்து வரும் பக்தர்களுக்கும் வாகனங்களில் வருபவர்களுக்கும் ஓய்வு எடுக்கும் வகையில் அந்த இடத்தில் கழிப்பிட வசதி பூங்கா ஓய்வு அறை என அனைத்து கட்டமைப்பு வசதிகளும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க செய்து கொடுக்கப்படும் என்று மேயர் கொண்டுவந்த தீர்மானத...

மனிதர்களை கடத்தும் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு தூத்துக்குடி எம்பி கனிமொழி அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டனர்

 ஷ்யாம் நீயூஸ் 30.07.2022 மனிதர்களை கடத்தும் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு தூத்துக்குடி எம்பி கனிமொழி அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டனர் மனிதக் கடத்தலுக்கு எதிரான உலக தினமான இன்று (30/07/2022), தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் ஒருங்கிணைப்பில் சென்னை ராணிமேரி கல்லூரியில் நடைபெற்ற மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் சமுக நலன் மற்றும் பெண்கள் பாதுகாப்பு துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினார்கள். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் D.ரத்னா, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமரி விஜயகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

 ஷ்யாம் நீயூஸ் 30.07.2022 தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு 201 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முனியசாமி கோவில் கொடை விழாவை யொட்டி நேற்று காலை கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடைபெற்றது. இரவு மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம், பெருகவேண்டும், கொரோனா கொடிய நோயிலிருந்து விடுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும்  ஆகியவற்றிற்காக பஜனையுடன் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 5 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டு  அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் கொடைவிழாவை யொட்டி மகளிர் அணி சார்பில் நடைபெற்ற திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மகளிர் அணியினர் செய்திருந்தனர்.

கஞ்சா விற்ற 2பேர் குண்டர் சட்டத்தில் கைது!

ஷ்யாம் நியூஸ்  29.07.2022 தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில்  ஈடுபட்ட 2பேர் இன்று  குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.  தூத்துக்குடி அண்ணா நகர் ஜங்ஷன் பகுதியில் கடந்த 06.07.2022 அன்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர்களான கணேசன் மகன் பிரபு வினோத்குமார் (25), முகதூம் முகமது மகன் மேத்தாபிள்ளை மரைக்காயர் (25) மற்றும் மைதீன் அப்துல் காதர் மகன் ஜமால் (25) ஆகிய 3 பேரையும் தென்பாகம் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.  இவ்வழக்கில் கைதான பிரபு வினோத்குமார், மேத்தா பிள்ளை மரைக்காயர் ஆகிய இருவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 36 பேர் உட்பட 155 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்!

ஷ்யாம் நியூஸ்  29.07.2022 நீராவி புதுப்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம  ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.  தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டம் நீராவி புதுப்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம  ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2022-23 முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியார் அம்மாள் தலைமை வகித்து, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் நோக்கம் செயல்பாடு அதன் முக்கியத்துவத்தை பற்றியும் திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு கிடைக்க பெரும் நமைகள் குறித்தும்எடுத்து கூறினார். நீராவி புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அண்ணமகாராஜா முன்னிலை வகித்தார்.  துணை வேளாண்மை அலுவலர் முத்துசாமி தரிசு நில மேம்பாடு அதன் அவசியம் பற்றி...

குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கல்!

ஷ்யாம் நியூஸ்  29.07.2022   தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 14 நபர்களுக்கு தமிழக அரசின் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.  தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 14 நபர்களுக்கு இழப்பீட்டு தொகையாக (Victim Compensation Fund) தமிழக அரசு ரூ.8,17,000 வழங்கியுள்ளது. இந்த நிவாரணத் தொகையை வங்கி வரைவோலையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு  இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்கள் . இதில் சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் ரவிக்குமார் என்பவரை எதிரிகள் கொலை செய்த வழக்கு, புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதி மகன் மோகன் என்பவரை எதிரிகள் தாக்கி கொலை முயற்சி செய்த வழக்கு உட்பட 14 குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

திருச்செந்தூர் செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்காக ஓய்வறை : மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு !

ஷ்யாம் நியூஸ்  29.07.2022 தூத்துக்குடியில், திருச்செந்தூர் செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்காக ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார்.  தூத்துக்குடி மாநகராட்சி அவசர பொதுக்கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடந்தது. மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிதா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசும்போது "திருச்செந்தூரில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கிறார்கள் விழாக் காலங்களில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் நடந்து செல்கிறார்கள்.  பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்காக தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு உப்பாற்று ஓடை அருகே ஓய்வறை பூங்கா கட்டப்பட உள்ளது. இதில் பக்தர்களுக்கு தூங்குவதற்கான இடம், கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது என்றார்.  இதனை அனைத்து உறுப்பினர்களும் மேஜை தட்டி வரவேற்றனர். பின்னர் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஒவ்வொரு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட...

கோவில்பட்டி பாலத்தில் லாரி மோதி விபத்து!

ஷ்யாம் நியூஸ்  29.07.2022   கோவில்பட்டியில் சிறிய பாலத்தில் லாரி மோதி, டயர் வெடித்து விபத்துக்குள்ளானதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  தூத்துக்குடியில் இருந்து ஆலங்குளத்திற்கு சாம்பல் ஏற்றிக்கொண்டு லாரி  கோவில்பட்டி வழியாக வந்து கொண்டிருந்தது.  லாரியை மதுரையைச் சேர்ந்த டிரைவர் கலைச் செல்வம் ஒட்டி வந்தார். லாரி கோவில்பட்டி மெயின் சாலையான மாதாங்கோவில் தெரு,  மார்க்கெட் ரோடு, அண்ணா பஸ்  நிலையம் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய சாலையில்  வந்து கொண்டிருந்த போது சாலையின் ஓரத்தில் இருந்த சிறிய பாலத்தில் மோதியதால் லாரியின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.  இது காலை நேரத்தில் நடந்த விபத்து என்பதால் அப்பகுதியில் வந்த பள்ளி வாகனங்கள், வேலைக்கு செல்பவர்கள், மார்க்கட்டிற்கு காய்கறி வாங்க வந்தவர்கள் ஒரே இடத்தில் கூடியதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒரு வழி பாதையில் மாற்றி விட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.  இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்  ஏற...

தூத்துக்குடி இரயில் நிலையத்தில் அடிப்படை வசதி பற்றாக்குறை : பயணிகள் குற்றச்சாட்டு!

ஷ்யாம் நியூஸ்  29.07.2022 தூத்துக்குடி இரயில் நிலையத்தில் அடிப்படை வசதி என்பது கேள்விக்குறியாக உள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தென் மாவட்டங்களில் தூத்துக்குடி இரயில் நிலையம் அதிக வருவாய் ஈட்டும் இரயில் நிலையமாக உள்ளது. ஆனால், இந்த இரயில் நிலையத்திற்கு வரும் மக்களின் அடிப்படை வசதி என்பது கேள்விக் குறியாக உள்ளது. தூய்மை இந்தியா திட்டம் மூலம் இரயில் நிலையத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடி இரயில் நிலையத்தில் எங்கு பார்த்தாலும் குப்பைகளாக உள்ளது. மேலும், இரயில் நிலையத்திற்கு வரும் வாகனங்கள் உள்ளே செல்வதற்கும், வெளியே செல்வதற்கும் தனி, தனி வாசல்கள் உள்ளது. வெளியே செல்லும் வாசலில் மாநகராட்சி சார்பில் போடப்பட்ட கால்வாய் உயரமாக இருப்பதால் சிறியவகை கார்கள், ஆட்டோக்கள் வெளியேறுவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்யும் இடத்தில் நாய்கள் தொல்லை காணப்படுகிறது. இதுபோன்ற குறைகளை சரிசெய்து இரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

ஊராட்சி துணைத் தலைவர் வீட்டில் இரு ஆடுகள் திருட்டு

ஷ்யாம்  நியூஸ்  29.07.2022 சாத்தான்குளம் அருகே ஊராட்சித் துணைத் தலைவர் வீட்டில் இரு ஆடுகள் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தைச் சேர்ந்தவர் தடிக்காரன் மகன் சுந்தரராஜ் (37). ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் துணைத் தலைவரான இவர். ஆடு, மாடுகள் வளர்த்து மராமரித்து வருகிறார். கடந்த 26ஆம் தேதி வீட்டில் கட்டி போட்டியிருந்த இரு ஆடுகளை காணவில்லை.  இந்த ஆட்டின் மதிப்பு ரூ.28 ஆயிரம் ஆகும். ஆடுகள் மாயமானதால் அதன் குட்டிகள் மட்டும் பரிதவிப்பில் நின்றுள்ளது. இதனையடுத்து சுந்தரராஜ் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை!

ஷ்யாம் நியூஸ்  29.07.2022 தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ், தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிந்து, வேலைவாய்ப்பு கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருப்போருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.  இத்தொகை நேரிடையாக மனுதாரரின் (ஆதாா் இணைக்கப்பட்ட) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பயன்பெற விரும்புவோா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பதிவுசெய்து, 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். தொடா்ந்து பதிவைப் புதுப்பித்திருக்க வேண்டும். ஆதிதிராவிடா், பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவா்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுடையோா் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகி...

தூத்துக்குடி அருகே சாக்குமூட்டையில் முதியவர் சடலம்

 ஷ்யாம் நியூஸ்    29.07.2022 தூத்துக்குடி அருகே முதியவரை கொலை செய்து உடலை  சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீச முயன்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகிறார்கள்.  தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை வ.உ.சி. நகர் சிவன் கோவில் பகுதியில் உள்ள மொட்டை கிணறு அருகே சந்தேகப்படும்படியாக மர்ம நபர் ஒருவர் நிற்பதாக புதுக்கோட்டை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ஒரு லோடு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. கிணற்றின் அருகே சாக்கு மூட்டையுடன் அந்த மர்ம நபர் நின்று கொண்டிருந்தார்.   போலீசை பார்த்தவுடன் அந்த நபர் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் அந்த மூட்டையை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் சாயர்புரத்தை சேர்ந்த சிம்சன் என்பதும், அவரது உடலை கிணற்றி...

வளா்ச்சித் திட்டப் பணிகள் : வேளாண் இணை இயக்குநா் முகைதீன் ஆய்வு

ஷ்யாம் நியூஸ்  29.07.2022 கோவில்பட்டி பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் முகைதீன் ஆய்வு செய்தாா். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டாரத்தில் சின்னமலைக் குன்று, கடலையூா், குலசேகரபுரம், பாண்டவா் மங்கலம், பிச்சைத் தலைவன்பட்டி, ஜமீன் தேவா்குளம், சத்திரப்பட்டி, துறையூா், இளம்புவனம், தீத்தாம்பட்டி, மூப்பன்பட்டி, வடக்குப்பட்டி, சித்திரம்பட்டி, கொடுக்காம்பாறை, சிதம்பராபுரம், சிந்தலக்கரை, வெங்கடேஸ்வரபுரம் ஆகிய 17 ஊராட்சிகளில் அவா் ஆய்வு மேற்கொண்டாா். சின்னமலைக்குன்று, கடலையூா், குலசேகரபுரம் பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களைப் பாா்வையிட்டு, 15 ஏக்கா் அளவில் தொகுப்பு தோ்வு செய்யும் பணி ஆய்வு செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. பின்னா், திட்டங்குளம் பகுதியில் கம்பு சான்று விதைப் பண்ணையைப் பாா்வையிட்டு, விதை கொள்முதல், விதை சுத்திகரிப்பு நிலையப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அறிவுரை வழங்கப்பட்டது. ஊராட்சித் தலைவா்கள், வருவாய், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் அலுவலா்கள், விவசாயிகள் பங்கேற்றனா். ஏற்பாட...

தூத்துக்குடியில் கடல்நீர் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது !

ஷ்யாம் நியூஸ்  29.07.2022 தூத்துக்குடியில் கடல்நீர் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி கடல் பகுதியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) காலையில் இனிகோநகர், ரோச் பூங்கா, தெற்கு பீச்ரோடு பகுதிகளில் கடல் நீர் உள்வாங்கியது. திடீரென கடல் உள்வாங்கியதால் அப்பகுதில் பல அடி தூரத்துக்கு மண் திட்டுகள் வெளியே தெரிந்தன. சில மணி நேரத்துக்கு பிறகு கடல் நீர் மீண்டும் வழக்கம் போல இயல்பு நிலைக்கு வந்தது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  

ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அனைவரும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்!

ஷ்யாம் நியூஸ்  29.07.2022 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வருகின்ற ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அனைவரும் தேசிய கொடி ஏற்றுவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் நடைபெற்றது.   தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வருகின்ற ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை அனைத்து அரசு அலுவலகங்கள், நினைவகங்கள், மணிமண்டபங்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் அனைவரும் தேசிய கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் லோக.பாலாஜி சரவணன் ,தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (28.07.2022) நடைபெற்றது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்ததாவது: இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு நிறைவடைவதையொட்டி ஆண்டு முழுவதும் பல்வேறு விதமான விழாக்கள் கொண்டாடப்பட்டு ...

ஆஷ் நினைவு மண்டபத்தை சீரமைக்க எதிர்ப்பு!

ஷ்யாம் நியூஸ்  29.07.2022 தூத்துக்குடி ஆஷ் நினைவு மண்டபத்தை மாநகராட்சி சார்பில் சீரமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்ட தூத்துக்குடி ஆஷ் நினைவு மண்டபத்தை மாநகராட்சி சார்பில் சீரமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் திரண்டனர். அங்கு வ.உ.சி. உருவச்சிலைக்கு மாலை அணிவித்தனர்.  இதில் மாநில பொதுச் செயலாளர் அரசுராஜா, மாநில செயலாளர் குற்றாலநாதன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சக்திவேலன், தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, மாவட்ட செயலாளர் ராகவேந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக செல்ல முற்பட்டபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, பாத யாத்திரையாக செல்ல அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் ஒரு வேன் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மாநகராட்சி அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.  அங்கு இந்து முன்னணி ந...

ஆடி அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் "10,008 கிலோ பச்சை மிளகாய் வழிபாடுகள் சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.

 ஷ்யாம் நீயூஸ் 29.07.2022 ஆடி அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் "10,008 கிலோ பச்சை மிளகாய் வழிபாடுகள் சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர்நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் ஒரே கல்லால் உருவான மிகப்பிரமாண்டமான ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் ஆலயத்தில் ஆடி மாத ஸர்வ மஹாளய அமாவாசையை முன்னிட்டு 10,008 கிலோ பச்சை மிளகாய் சிறப்பு மஹா யாகம் நடைபெற்றது. பக்தர்களின் வாழ்வில் மனக்குறைகள், கடன்தொல்லைகள், எதிரித்தொல்லைகள் யாவும் முற்றிலுமாக நீங்கிடவும், பணம் கொழித்து செல்வவளம் பெருகிடவும், நோயில்லாத நல்வாழ்வு அமைந்திடவும், கல்விவளம் சிறந்திடவும், திருமணவரன், குழந்தை பாக்யம் கிடைத்திடவும், தகுதிக்கேற்ப அரசு வேலை கிடைத்திடவும், கொரோனா போன்ற கொடியநோய்கள் இல்லாமல் முற்றிலுமாக ஒழிந்திடவும், நன்கு மழை பெய்து விவசாயம் செழிப்பாக நடைபெறவும் வேண்டி 10,008 கிலோ பச்சை மிளகாய் சிறப்பு மஹா யாக வழிபாடுகள் சீனிவாச சித்தர் தலைமையில் கணபதி, நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமத்துடன் தொடங்கி தொடர்ந்து 10...

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.

ஷ்யாம் நீயூஸ் 28.07.2022 தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் புதுக்கோட்டை அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு தலைவர் வசுமதி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியான கோரம்பள்ளம், திம்மராஜபுரம், மாப்பிள்ளையூரணி, முடிவைதானேந்தல், மேல கூட்டுடன்காடு, அள்ளிக்குளம், முள்ளக்காடு, உள்ளிட்ட பகுதிகளில் புதிய பணிகள் மேற்கொள்வதற்கும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் உள்பட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய கவுன்சிலர் அந்தோணிதனுஷ்பாலன், மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பூபாண்டியபுரத்தில் மழைநீர் தேங்காத வகையில் கால்வாய்கள் கட்டப்பட்டு வருகிறது. அதை விரைவாக முடித்து ராஜபாளையம் பகுதியில் பணிகளை தொடங்க வேண்டும். அதே போல் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதி;க்கு குப்பை அள்ளும் வாகனம் கூடுதலாக பத்து ஓதுக்க வேண்டும். என்று கோரி;க்கை வைத்தார். தலைவர் வசுமதி 10 வாகனத்திற்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படும் என்று கூறி மற்ற இரு பணிகளும் விரைவாக நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஓன்றிய குழு துணைத்தலைவர் ஆஸ்கர், தமிழக அரசின் சார்பி...

குளத்தின் கரையில் மருத்துவ கழிவுகள் எரிப்பு!

ஷ்யாம் நியூஸ்  28.07.2022   தூத்துக்குடி அருகே குளத்தின் கரையில் மருத்துவ கழிவுகளை கொட்டி எரித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   தூத்துக்குடி மாவட்டம்,  சேர்வைக்காரன்மடம் ஊராட்சி, தங்கம்மாள் புரத்திலிருந்து  பேய்குளம்  செல்லும் பாதையில் பொதுப்பணித் துறையின் திருவைக்குண்டம்  வடிகால் பாசன குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் மர்ம நபர்கள்  இரவு‌ நேரங்களில் மருத்துவக் கழிவை கொட்டி தீ வைத்து எரி்த்து வருவதாக கூறப்படுகிறது. இதுபோல் இன்று காலையிலும் மருத்துவக் கழிவைக் கொட்டி எரித்துள்ளனர்.  கையுறை போன்ற பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த கழிவுகள் தண்ணீரில் கலந்தால் விவசாயிகள் மற்றும்‌ குளத்தில் குளிக்கும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது தொடர்பாக வடிகால் பாசன‌ அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாடு‌ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் எனவும், மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரி...

தூத்துக்குடியில் டீக்கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு!

ஷ்யாம் நியூஸ்  22.07.2022 தூத்துக்குடி அருகே டீக்கடையின் பூட்டை உடைத்த பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  தூத்துக்குடி அருகேயுள்ள அந்தோணியார் புரத்தைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் முத்துக்குமார் (44), இவர் அங்குள்ள மெயின் ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது ஷட்டரின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்தது.  இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார் கடைக்குள் சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.11 ஆயிரம் பணம் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடியில் தெருக்குழாய் தகராறில் ஒருவருக்கு அருவாள் வெட்டு!

ஷ்யாம் நியூஸ்  28.07.2022 தூத்துக்குடியில் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை அரவாளால் வெட்டியவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி முத்தையாபுரம் பால்பண்ணை தெருவைச் சேர்ந்தவர் அய்யாசாமி மகன் ஆறுமுக நயினார் (40), இவரது மகள் தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றபோது பக்கத்து வீட்டில் வசிக்கும் சகாயம் மகன் அந்தோணி செல்வராஜ் (62) என்பவர்அவதூறாக பேசினாராம். இதனை ஆறுமுக நயினார் தட்டிக் கேட்டுள்ளார்.  இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தோணி செல்வராஜ் ஆறுமுக நயினாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.  இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆறுமுக நயினார் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சீலன், அந்தோணி செல்வராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பட்டதாரி இளம் பெண் திடீர் மாயம்:போலீசார் விசாரணை !

ஷ்யாம் நியூஸ்  28.07.2022 தூத்துக்குடியில் பட்டதாரி இளம்பெண் ஒருவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தூத்துக்குடி தாமஸ் நகரை சேர்ந்தவர் ஜான்சன் (55). இவரது மகள் கிறிஸ்டி ஸ்டெப்னி வயது (22), மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் படித்து  முடித்துள்ளார். இவர் 22 ஆம் தேதி கடந்த வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதரன் பின்னர் திரும்பி வரவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ஜான்சன் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  

பாலியல் புகாரில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் !

ஷ்யாம் நியூஸ்  28.07.2022 தூத்துக்குடி அருகே பாலியல் புகாரில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் நேற்று இரவு திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது சம்பந்தமாக போலீஸ் தரப்பில் கூறியதாவது: தூத்துக்குடி அருகே உள்ள குளத்தூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஆனந்த தாண்டவம். இவர் மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த போது அங்கு புகார் கொடுக்க வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்போது அந்தப் பெண் மதுரை ஐ.ஜி-யிடம் புகார் மனு அளித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையே அந்தப் பெண் கொடுத்த புகார் மீது நடத்தப்பட்ட விசாரணையில் அது உண்மை எனத் தெரியவந்தது. இது தொடர்பாக தென் மண்டல ஐஜி-யிடம் விசாரணை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்தனர். அதன் பெயரில் குளத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவத்தை சஸ்பெண்ட் செய்ய தென் மண்டல ஐஜி உத்தரவிட்டார். இந்த சம்பவம் காவல்துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வீடுபுகுந்து 55 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை!

ஷ்யாம் நியூஸ்  28.07.2022 ஆழ்வார்திருநகரி அருகே வீடுபுகுந்து 55 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள தங்கையாபுரம் வேத கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானமணி. இவரது மனைவி லலிதா (65). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் 3 பேரும் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மகள் செய்துங்கநல்லூரில் வசித்து வருகிறார். ஞானமணி இறந்துவிட்ட நிலையில், லலிதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு செய்துங்கநல்லூரில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றார். இன்று காலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த 55 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் கதவுகள் எதுவும் உடைக்கப்பட...

ஆறுகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த சொல்லி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்!

ஷ்யாம் நியூஸ்  28.07.2022 காவேரி - வைகை - குண்டாறு - வைப்பாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தூத்துக்குடி அருகே புதியம்புத்தூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு இரண்டு நாள்கள் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ராகவன் தலைமை வகித்தாா். மாநாட்டு கொடியை தே. கிருஷ்ணன் ஏற்றினாா். மாநிலப் பொருளாளா் கே.பி. பெருமாள் மாநாட்டை தொடங்கி வைத்தாா். மாவட்டச் செயலா் பா. புவிராஜ் மாநாட்டு அறிக்கையை வாசித்தாா். மாநில பொதுச் செயலா் சண்முகம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலா் ஆா். ரசல், விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலா் ரவீந்திரன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினா். மிளகாய், பாசி உள்ளிட்ட விடுபட்ட அனைத்து பயிா்களுக்கும் 2020-21ஆம் ஆண்டுக்கான பயிா் காப்பீடு வழங்க வேண்டும். காவேரி-வைகை-குண்டாறு-வைப்பாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். கொம்பாடி ஓடையின் குறுக்கே அணை கட்ட வேண்டும். விவசாயிகளின் நிலங்களுக்கு நிபந்தனை இல்லாமல் கரம்பை மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வே...

ஸ்டெர்லைட் ஆலையை அடைத்தபின்பு மாதந்தோறும் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி !

ஷ்யாம் நியூஸ்  28.07.2022 ஸ்டெர்லைட்  ஆலையை அடைத்தபின்பு மாதந்தோறும் மழை பெய்வதால்  விவசாயிகள் மகிழ்ச்சி ! கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட்ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் பொதுமக்கள் 13 நபர் காவல்துறையால் சுட்டு கொல்லப்பட்டனர் .இதனை தொடர்ந்து மக்கள் போராட்டத்திற்கான காரணம் ஸ்டெர்லைட்ஆலையால் மாசு ஏற்படுவதாக தெரியவந்ததால் ஆலையை தமிழக அரசால் நிரந்தரமாக மூடப்பட்டது .அதன்பின்னர் ஸ்டெர்லைட்நிர்வாகம் சுப்ரீம் கோர்ட் வரை சென்றும் ,இதுவரை ஆலையை திறப்பதற்க்கான எந்தவிதமான அறிகுறியும் தெரியவில்லை .இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட்ஆலையை விற்பனை செய்வதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட்நிர்வாகம் அறிவித்திருந்தது . ஆலை மூடப்பட்டதிலிருந்து பழங்காலத்தை கொன்று மாதந்தோறும் மழைபெய்து வருகிறது .இதனால் தூத்துக்குடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் நீர்வளம் பெருகியுள்ளது .இதனைத்தொடர்ந்து விவசாயம் செழித்து வருகிறது .ஸ்டெர்லைட்ஆலையை மூடியதால்தான் மாதம் மும்மாரி மழை பொழிகிறது என்று தூத்துக்குடி சுற்றுவட்டார விவசாயிகள் தெரிவித்தனர் .

அமைச்சர் கீதாஜீவன் மாணவிகளுக்கு அறிவுரை !

ஷ்யாம் நியூஸ்  28.07.2022 பெண் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும். தொலைக்காட்சித் தொடா்களை பாா்க்கக் கூடாது என அமைச்சா்  கீதாஜீவன் அறிவுரை வழங்கினார். தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை சமூக நலன், மகளிா் உரிமைத் துறை  அமைச்சா் கீதாஜீவன் தொடக்கி வைத்து பேசியது: பெண் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும். தொலைக்காட்சித் தொடா்களை பாா்க்கக் கூடாது.  தொலைக்காட்சி தொடா்களில் பெண்கள் தவறான தோற்றத்திலும், வில்லியாகவும் காட்டப்படுகின்றனா். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாதோருடன் தொடா்புகொள்ளும்போது நண்பா்களாக அங்கீகரிக்கக் கூடாது. சமூக வலைதளங்களால் ஏராளமான பெண் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எனவே, கைப்பேசியை நல்ல விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில், 236 பேருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் நிகழ் கல்வியாண்டில் 16,498 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேயா் ஜெகன் பெரியசாமி, ம...

தூத்துக்குடி மாவட்டம் மங்களக்குறிச்சி ஊராட்சி மற்றும் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் ஆய்வு

 ஷ்யாம் நீயூஸ் 28.07.2022 தூத்துக்குடி மாவட்டம் மங்களக்குறிச்சி ஊராட்சி மற்றும் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  குடிநீர் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் ஆய்வு தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வாரியம், மூலம் மங்களக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் 43 45 கூட்டுக் குடிநீர் திட்டத்தை கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ மங்கள குறிச்சி நீரேற்று நிலையம் மற்றம் தாமிரபரணி ஆற்றுப்படுகை குரங்கணிக்கு அருகில் அமைந்துள்ள ஏழு எண்ணிக்கையிலான நீர்உறிஞ்சும் கிணற்றினை ஆய்வு செய்தனர். இத்திட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றித்தில் குரங்கணி அருகில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஏழு எண்ணிக்கை கொண்ட நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கப்பட்டு 5 ர்Pமேட்டார் மூலம் நீரேற்று நிலையம் மங்களக் குறிச்சியில் 2 லட்சம் கொள்ளளவு கொண்டுள்ள தரைமட்ட தொட்டியில் நீர் சேகரிக்கப்படுகிறது. பின்னர் 30 ர்Pமேட்டார் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு பிராதான குழாய் மூலம் 37.50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாப்பிளையூரணி ஊராட்சியில் உள்ள 1 லட்சம் லிட்டர் மற்...

அமலாக்கதுறையை கண்டித்து தூத்துக்குடி காங் நூதன போராட்டம் நடத்தினர்..

 ஷ்யாம் நீயூஸ் 27.07.2022 அமலாக்கதுறையை கண்டித்து தூத்துக்குடி காங் நூதன போராட்டம் நடத்தினர். இன்று 3வது நாளாக  சோனியாகாந்தியை  விசாரனைக்கு அழைத்த அமலாக்கதுறையை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மதியம் 12மணி முதல் தொடர்ந்து வாயில் கருப்பு துணி கட்டி மத்திய மோடி அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. மத்திய மோடி அரசு பாராளுமன்றத்தில் எதிர் கட்சி உறுப்பினர்களை பேச விடாமல் தடுப்பது,மக்கள் மன்றத்திலும் போராட்டம் நடத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை காவல்துறை மூலம் தாக்குதல் நடத்தி பேச விடாமல் தடுப்பது போன்ற செயலில் தொடர்ந்து மத்திய மோடி அரசு செயல்படுவதை குறிக்கும் வகையில் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடந்தது.இந்த அறப்போராட்டத்தில் மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா ,சேகர் ,எஸ். பி.ராஜன்,ஐ. என்.டி.யு.சி.தொழிற்சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்,மாவட்ட துணை தலைவர் மார்க்கஸ்,மாவட்ட செயலாளர்கள் கோபால்,கதிர்வேல்,இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் நடேஷ்குமார் ,இளைஞர் காங்கிரஸ் செயலாளர் மாடக்கண்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கல்லூரி விழா மற்றும் போட்டிகள்

ஷ்யாம் நியூஸ்  27.07.2022   தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கல்லூரி விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.  தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி விழா நடைபெற்றது. மாணவர் சங்கத் துணைத் தலைவர் சா.ஆதித்தன், சங்கத்தின் ஆண்டறிக்கையை (2021-22) வாசித்தார். துணைவேந்தர் கோ.சுகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மீன்வள மேம்பாட்டு ஆணையர் (ஓய்வு), பி.பால்பாண்டியன், கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.  கல்லூரி விழாவை முன்னிட்டு வினா-விடை, முக சித்திரம் வரைதல், நெருப்பில்லாமல் சமைத்தல், காய்கனி செதுக்குதல், ஓவியம் வரைதல், மெஹந்தி, சிகை அலங்காரம் மற்றும் தமிழ் கவிதை எழுதுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. மேலும் பரத நாட்டியம், மேற்கத்திய நடனம், குழு நடனம், மிஸ்டர் மற்றும் மிஸ் மீன்வளம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.  இதில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் முதலிடத்தை பிடித்து வெற்றி  கோப்பையையும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் அறிவியல் கழக செயலாளர் ஜெயபிரிதாவரவேற்புரை நிகழ...

கல்லூரி மாணவி திடீர் மாயம்!

ஷ்யாம் நியூஸ்   27.07.2022 தூத்துக்குடியில் கல்லூரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தூத்துக்குடி முத்தையாபுரம் கணேஷ் நகர் செல்வகுமார். இவரது மகள் ஜெபா மெர்லின் ஜாக்கோஸ் (19). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 25ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்பு வீடு திரும்ப வில்லை. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இது குறித்து அவரது தந்தை செல்வக்குமார் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெய்சீலன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மகள் இறந்த துக்கத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை !

ஷ்யாம் நியூஸ்  27.07.2022 மகள் இறந்த துக்கத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை . தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் கருப்பசாமி (48). இவரது மகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டாராம். மகள் இறந்ததால் கருப்பசாமி மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதா தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

55 ஆடுகளை திருடிச்சென்ற மர்மநபர்கள்!

ஷ்யாம் நியூஸ்  27.07.2022   திருச்செந்தூர் அருகே 55 ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தெற்கு புதுத் தெருவைச் சேர்ந்தவர் பிச்சைமணி மகன் பாலாஜி (27). இவர் திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரத்தில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அங்கிருந்த 55 ஆடுகளை காணவில்லை.  மர்ம நபர்கள் லாரியில் ஆடுகைள கடத்திச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.  இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் நிலையத்தில் பாலாஜி புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகிறார். 

ஏரலில் 6ம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா !

 ஷ்யாம் நியூஸ்   27.07.2022 ஏரல் விஸ்வகர்மா பேரவை சார்பில் 6ம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா நடந்தது. ஏரல் அரசு மருத்துவமனை கண் பரிசோதகர் ஆசைத்தம்பி தலைமை வகித்து விஸ்வகர்மா சமுதாய ஐவர்ண அனுமன் கொடியேற்றினார். நகை மதிப்பீட்டாளர் அருணன், சாத்தான்குளம் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் தாமரைக்கண்ணன், விஸ்வகர்மா விக்கிரத்திற்கு ஆராதனை செய்தார். கவிஞர் ராஜன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தென்கரை மகாராஜன், வானமாமலை, பெருமாள், கணேசன், குருஹரணி, சிவா மோகன் உட்பட பலர் பேசினர். விழாவில் மூக்காண்டி, இசைக்குமணி, அருணாசலம் ஆகியோருக்கு சமூக சேவகர் விருது மற்றும் தலா ரூ.ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. ஏரல் ராஜனின் கம்மாளரின் சாஸ்தா கோயில்கள் என்ற நூல் வெளியிடப்பட்டது. மேலும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகையும், பாராட்டு மடலும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆர்எஸ்எஸ் பிரமுகர் மந்திரக்குமார், யோகா ஆர்வலர் தென்கரை மகாராஜன், கணேசன், அழகுமுருகன், ஏரல் ராஜன் மற்றும் விஸ்வகர்மா பேரவையினர் செய்திருந்தனர்.

தூத்துக்குடியில் கலப்பட கருப்பட்டி தயாரித்த ஆலைக்கு சீல்!

ஷ்யாம் நியூஸ்  27.07.2022 உடன்குடி பகுதியில் கலப்பட கருப்பட்டி தயாரித்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த ஆலையில் இருந்து 70 மூட்டை சீனி, வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன், தோட்டக்கலைத்துறை அலுவலர் ஆனந்த், பனை கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் உடன்குடி பகுதியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு கருப்பட்டி தயாரிப்பு ஆலையில் கரும்பு வெல்லம், சீனி ஆகியவற்றை கொண்டு கருப்பட்டி என்ற பெயரில் கலப்பட கருப்பட்டி தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அங்கு இருந்த 28 மூட்டை சீனி, 42 மூட்டை கரும்பு வெல்லம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த ஆலையை பூட்டி சீல் வைத்தனர். இதே போன்று அந்த பகுதியில் உள்ள பனங்கற்கண்டு தயாரிப்பு ஆலையை ஆய்வு செய்தனர். அப்போது கற்கண்டில் சீனி கலந்ததாக சந்தேகத்தின் பேரிலும், சுகாதாரமற்ற நிலையில் இருந்ததாலும், சுமார் 15 ஆயிரம் கிலோ அளவுள்ள கூழ பதநீர், 300 கிலோ பனங்கற்கண்டு ஆகி...

செஸ் ஒலிம்பியாட் தீபத்துக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் வரவேற்பு!

ஷ்யாம் நியூஸ்  27.07.2022 தூத்துக்குடியில் செஸ் ஒலிம்பியாட் தீபத்துக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு செஸ் ஒலிம்பியாட் தீபம் தமிழகம் முழுவதும் எடுத்து செல்லப்படுகிறது. அதன்படி செஸ் ஒலிம்பியாட் தீபம் நேற்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வரவேற்பு அளித்தனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த ஒலிம்பியாட் தீபத்துக்கு சமூநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் அரசு அதிகாரிகள், பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு ஒலிம்பியாட் தீபத்துக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கும் தீபம் கொண்ட...

உப்பள தொழிலாளர்களுக்கு ரூ.4¼ கோடி மழைக்கால நிவாரணம் :தொழிலாளர்கள் மகிழ்ச்சி !

ஷ்யாம் நியூஸ்  27.07.2022 உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க தமிழக அரசு ரூ.4¼ கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.   இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவில் உப்பு உற்பத்தி நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு ஆகும். இதில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிலில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் மழைக்காலங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்படுவதால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர்.  இதனால் தொழில் பாதிக்கப்படும் மழைக்காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு மழைக்கால நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று உப்பள தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் உப்பள தொழிலாளர்களுக்கு பணி இல்லாத காலங்களில் மழைக்கால நிவாரணம் வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தமிழக அரசு வெளியிட்டு உள்ள அரசாணையில், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் 8 ஆயிரத்து 465 உப்பள தொழிலாளர்கள் பதிவு செய்து உள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு உப்பள தொழில் நடைபெறாத மழைக்காலங்களான அக்டோபர், நவம்பர், ட...