முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெறுகின்றன. மாநகராட்சி கூட்டத்தில் ஜெகன் பெரியசாமி தகவல்

 நீயூஸ் நீயூஸ்

25.08.2022

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெறுகின்றன. மாநகராட்சி கூட்டத்தில் ஜெகன் பெரியசாமி தகவல்  


    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளுக்கு தேவையானது குறித்து பேசினார்கள்.

     அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் தூத்துக்குடி மாநகர பகுதியில் சில இடங்களில் 3 நாட்களும் அதே போல் இரண்டு ஒன்று என நாட்களில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அனைத்து பகுதிகளுக்கும் தினசரி தண்ணீர் கொடுக்க வேண்டும். என்ற இலக்கோடு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே போல் முதல்வர் தளபதியார் தூத்துக்குடி பகுதியில் கடந்த காலத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அந்த பகுதிகளில் வரும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்னும் ஓரு மாதகாலத்திற்குள் மழை காலம் ஆரம்பித்து விடும் விரைவாக கால்வாய் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மாநகர வளர்ச்சிக்கு பொதுமக்கள் நலன் கருதி எடுக்கும் அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும் அனைவரும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றார். பல்வேறு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஆணையர் சாருஸ்ரீ, செயற்பொறியாளா ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், ரங்கநாதன், உதவி ஆணையாளர் சேகர், சுகாதர அலுவலர் அருண்குமார், சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், உள்ளிட்டோர் பதிலளித்தனர்.

       சாதாரண கூட்டத்தில் தூத்துக்குடி மாநகரில் காற்று மாசு படுவதையும் அதை தடுப்பது கட்டுபடுத்துவது உள்ளிட்ட 16 தீர்மானங்களும் அவசர கூட்டத்தில் 4 தீர்மானங்களும் என தூத்துக்குடி மாநகர் முழுவதும் பொதுமக்கள் வளர்க்கும் மாடுகளால் பல்வேறு விபத்துகளும் இடையூறுகளும் ஏற்படுகின்றன. அதை தடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்தவர்களும் பொதுநல அமைப்பினரும் ஊடகத்துறையினரும் விடுத்துள்ள கோரிக்கையை கருத்தில் கொண்டு மாடுகள் பிடிக்கப்பட்டு மாநகராட்சி காசோலை பகுதியில் அடைக்கப்படுகின்றன. அதற்கு விதிக்கப்படும் அபராத தொகையை கட்டி மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை மீட்டு செல்கின்றனர் மீண்டும் அதே போல் சம்பவம் தொடர்வதால் அதை தடுக்கும் வகையில் கூடுதல் அபராத தொகை விதிப்பது உள்பட 16 தீர்மானங்களும் முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் அறிவித்திருப்பதையொட்டி நான்கு மண்டலங்களிலும் காலை உணவு திட்டத்தை முறைப்படுத்தி செயல்படுத்துவது உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் என மொத்தம் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, உதவி ஆணையர்கள்  தனசிங், காந்திமதி, கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், சரவணக்குமார், விஜயகுமார், ராமர், கண்ணன், ஜாக்குலின்ஜெயா, வைதேகி, முத்துவேல், தனலட்சுமி, பவானி மார்ஷல், மெட்டில்டா, மரியகீதா, பாப்பாத்தி, சரண்யா, தெய்வேந்திரன், கந்தசாமி, சுயம்பு, பச்சிராஜ், ராஜதுரை, ரெங்கசாமி, மும்தாஜ், முத்துமாரி, ஜான், ஜாண்;சிராணி, ராமுத்தம்மாள், கனகராஜ், ரிக்டா, பேபிஏஞ்சலின், சந்திரபோஸ், கற்பககனி, நாகேஸ்வரி, ஜெயசீலி, எடின்டா, பொன்னப்பன், சரண்யா, சோமசுந்தரி, அதிமுக கவுன்சிலர்கள் வக்கீல் மந்திரமூர்த்தி, விஜயலட்சுமி, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...