தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய திமுக செயலாளர் சரணவக்குமார் புதிய நிர்வாகிகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர்.
ஷ்யாம் நீயூஸ்
14.08.2022
தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய திமுக செயலாளர் சரணவக்குமார் புதிய நிர்வாகிகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர்.
தூத்துக்குடி திமுக 15வது கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்பிற்கு தேர்தல் நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய புதிய நிர்வாகிகள் பட்டியலை தலைமை கழகம் அறிவித்ததை புதிய கிழக்கு ஒன்றிய அவைத்தலைவராக ஜோதிடர் முருகன், செயலாளராக மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் துணைச்செயலாளர்களாக கணேசன் ராமசந்திரன் வசந்தகுமாரி பொருளாளராக மாரியப்பன், மாவட்ட பிரதிநிதிகளாக தர்மலிங்கம், சப்பானிமுத்து, சிவக்குமார், ஆகியோரை அறிவித்திருந்தனர். இதனையடுத்து தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கணேஷ்நகரில் உள்ள அலுவலக்த்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து புதிய நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர்.
அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கூறுகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தும் திட்டங்களை முழுமையாக மக்களுக்கு சென்றடையும் வகையில் பணியாற்றி கிழக்கு ஒன்றிய பகுதியை முழுமையாக திமுக கோட்டையாக மாற்றி அதிமுக இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் அதற்கு அனைவரும் இணைந்து பணியாற்றி கழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். என்றார். சந்திப்பின் போது மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, கிளை செயலாளர்கள் நிர்வாகிகள் காமராஜ், பொன்னுச்சாமி, ஆசைதம்பி, கோளராஜ், முருகன், வேல்ராஜ், ஆனந்தகுமார், ராயப்பன், முத்துராஜ், மாரியப்பன், சரவணன், சந்திரசேகர், அன்பு, ஆரோக்கியம், ஜெபராஜ், ராமசந்திரன், சுபாஷ், சுதாகர், கௌதம், கதிர்வேல், வேல்ராஜ், பழனி, சேகர், ஜீவாபாலமுருகன், மகாராஜன், குருசாமி, ராஜன், ஜெயசீலன், மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்