ஷ்யாம் நியூஸ்
12.08.2022
தூத்துக்குடி மாவட்டத்தில் PAN CARD UPDATION என்ற குறுஞ்செய்தி அனுப்பி அதன் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சத்தை சைபர் குற்றப்பிரிவு போலீசார் மீட்டனர்.
தூத்துக்குடி, பாளையங்கோட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த பழனிகுமார் என்பவரது மகளின் செல்போனிற்கு கடந்த 29.07.2022 அன்று PAN CARD UPDATION செய்ய சொல்லி குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க் வந்துள்ளது. மேற்படி லிங்கை தொட்டவுடன் username மற்றும் password கேட்டுள்ளது. இதில் பழனிகுமார் உபயோகித்து வந்த internet banking password-ஐ அந்த லிங்கில் பதிவு செய்து, பின்னர் உடனே செல்போனுக்கு வந்த ஒரு OTP யையும் அந்த லிங்கில் பழனிகுமார் பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து பழனிகுமாரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.49,990/- எடுக்கபட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளளது. அதனைத் தொடர்ந்து உடனடியாக மறுபடியம் ரூ. 49,986/- பணம் எடுக்கப்பட்டதாக மீண்டும் குறுஞ்செய்தி வந்துள்ளளது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்து அன்றைய தினமே சைபர் குற்றப்பிரிவு help line 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மேற்படி மோசடி விபரங்கள் குறித்து பழனிக்குமாரின் மகள் புகார் பதிவு செய்துள்ளார்.
மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அச்சுதன், சுதாகர் உட்பட போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக மேற்படி பழனிக்குமார் வங்கியிலிருந்து பணம் சென்ற வங்கியின் தலைமையிடத்திற்கு தொடர்பு கொண்டு மோசடி பணத்தை முடக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதின் தொடர்ச்சியாக மோசடியாக பணம் வரவு வைக்கப்பட்ட வங்கியில் மோசடி பண பரிமாற்றம் நிறுத்தப்பட்டு அந்த வங்கியிலிருந்து பழனிகுமார் வங்கி கணக்கிற்கு கடந்த 06.08.2022 அன்று ரூ.1 லட்சம் பணத்தை திரும்ப வரவு வைக்கப்பட்டது.
மேலும் மேற்படி வழக்கு குறித்து மேற்படி தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் மேற்படி போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு பண மோசடியில் பாதிக்கபட்டவர் வங்கி கணக்கிற்கே மீண்டும் பணத்தை வரவு வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொண்ட தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமயிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.