முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எஸ்எம்எஸ் அனுப்பி மோசடி!

ஷ்யாம் நியூஸ் 

12.08.2022

 தூத்துக்குடி மாவட்டத்தில் PAN CARD UPDATION என்ற குறுஞ்செய்தி அனுப்பி அதன் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சத்தை சைபர் குற்றப்பிரிவு போலீசார் மீட்டனர். 


தூத்துக்குடி, பாளையங்கோட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த பழனிகுமார் என்பவரது மகளின் செல்போனிற்கு கடந்த 29.07.2022 அன்று PAN CARD UPDATION செய்ய சொல்லி குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க் வந்துள்ளது. மேற்படி லிங்கை தொட்டவுடன் username மற்றும் password கேட்டுள்ளது. இதில் பழனிகுமார் உபயோகித்து வந்த internet banking password-ஐ அந்த லிங்கில் பதிவு செய்து, பின்னர் உடனே செல்போனுக்கு வந்த ஒரு OTP யையும் அந்த லிங்கில் பழனிகுமார் பதிவு செய்துள்ளார். 

இதனையடுத்து பழனிகுமாரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.49,990/- எடுக்கபட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளளது. அதனைத் தொடர்ந்து உடனடியாக மறுபடியம் ரூ. 49,986/- பணம் எடுக்கப்பட்டதாக மீண்டும் குறுஞ்செய்தி வந்துள்ளளது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்து அன்றைய தினமே சைபர் குற்றப்பிரிவு help line 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மேற்படி மோசடி விபரங்கள் குறித்து பழனிக்குமாரின் மகள் புகார் பதிவு செய்துள்ளார்.

மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அச்சுதன், சுதாகர் உட்பட போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்பேரில் தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக மேற்படி பழனிக்குமார் வங்கியிலிருந்து பணம் சென்ற வங்கியின் தலைமையிடத்திற்கு தொடர்பு கொண்டு மோசடி பணத்தை முடக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதின் தொடர்ச்சியாக மோசடியாக பணம் வரவு வைக்கப்பட்ட வங்கியில் மோசடி பண பரிமாற்றம் நிறுத்தப்பட்டு அந்த வங்கியிலிருந்து பழனிகுமார் வங்கி கணக்கிற்கு கடந்த 06.08.2022 அன்று ரூ.1 லட்சம் பணத்தை திரும்ப வரவு வைக்கப்பட்டது. 

மேலும் மேற்படி வழக்கு குறித்து மேற்படி தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் மேற்படி போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு பண மோசடியில் பாதிக்கபட்டவர் வங்கி கணக்கிற்கே மீண்டும் பணத்தை வரவு வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொண்ட தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமயிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்   எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...