முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உகந்த உணவு குறித்து விழிப்புணர்வு நடை பயணம்!

ஷ்யாம் நியூஸ் 

12.08.2022

தூத்துக்குடியில்  உகந்த உணவு குறித்து 7.5 கி.மீ தூரம் விழிப்புணர்வு நடை பயணத்தினை, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கொடியசைத்து துவக்கி வைத்தார்.


தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக வளாகத்தில் உகந்த உணவு குறித்து 7.5 கி.மீ தூரம் நடைபெறவுள்ள விழிப்புணர்வு நடை பயணத்தினை, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் லோக.பாலாஜி சரவணன், ஆகியோர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் சார்பாக, உகந்த உணவு குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக விழிப்புணர்வு நடைபயணத்திஜனை தொடங்கி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். 

இந்நடைபணத்தின் நோக்கமானது அனைவரும் சுத்தமான, சுகாதாரமான, சத்தான  உணவுகளை உட்கொள்ள வேண்டும். கடைகளில் வாங்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் சமையல் பொருட்களில் காலவதியான தேதிகளை ஆராய்ந்து பொருட்களை வாங்க வேண்டும். உணவகங்ளில் பலகாரங்கள் பொட்டலம் இடும் போது செய்தித்தாள்களில் பொட்டலம் இடுவதை தவிர்த்து, வாழை இலைகள் உள்ளிட்ட சுகாதாரமான பொருட்களில் பொட்டலம் வலியுறுத்தப்படுகிறது.


மேலும், இன்று அங்கன்வாடி பணியாளர்களுகக்கு உணவு போட்டிகள் செப் தாமோதரன் அவர்களால் நடத்தப்படுகிறது. உணவின் தரங்கள், சத்தான உணவுகள் குறித்து சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணிக்கம் மஹாலில் நடைபெறுகிறது. பொது மக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயனடையும்படி கேட்டுக்கொள்ளகிறேன் என தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் , மாவட்ட நியமன அலுவலர் எஸ்.மாரியப்பன், கூடுதல் காவல் கண்காணிப்பு அலுவலர் கார்த்திக்கேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நடைபயிற்சியில் ஏபிசி மகாலெட்சுமி கல்லூரி, வ.உ.சி கல்லூரி, போப் கல்லூரி, நேஷனல் பொறியியல் கல்லூரி, எஸ்.எஸ்.பி.எம், காமராஜ் கல்லூரி, குமரகுருபரர் கல்லூரி, புனித மரியன்னை கல்லூரி, அரசு தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரி உட்பட 1300 மாணவ, மாணவியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இந்நடைபயணத்தில் பங்கேற்றிருப்பது மிகவும் பெருமைக்குரியது. இந்த நடைபயணம் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி  7.5.கி.மீ தூரத்தில் காமராஜ் கல்லூரி சென்று நிறைவடைந்தது.  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...