ஷ்யாம் நீயூஸ்
24.08.2022
தூத்துக்குடியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
புதிய வடிவிலான ச.ட்ட விழிப்புணர்வு முகாம்; தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகாவில் உள்ள கிராம உதய மைய அலுவலகத்தில் வைத்து இன்று 24.08.2022 தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாமானது நடைபெற்றது. அதில் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/ சார்பு நீதிபதி M.பீரித்தா, M.L., தலைமை தாங்கினார். திருவைகுண்டம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் உரிமையியல் நீதிபதி முத்துலெட்சுமி முன்னிலை வகித்தார். மேற்படி விழிப்புணர்வு முகாமில் கிராம உதய தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன், திருவைகுண்டம் தாலுகா தொழிலாளர் நல ஆய்வாளர் சங்கரகோமதி, தூத்துக்குடி மாவட்ட கிராம உதய தொண்டு நிறுவன பணியாளர்கள், 250 க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். மேற்படி முகாமில் தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் நலவாரியம் மூலம் 300 மக்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய அட்டைகள் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் தலைமையில் வழங்கப்பட்டது. மொத்தம் 300 வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இந்த சட்ட விழிப்புணர்வு முகாம் மூலம் பயனடைந்தனர். தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழவின் செயலாளர் தனது தலைமையுரையில இலவச சட்டத்திட்டத்தை பற்றியும், அரசு நலத்திட்டத்தை இலவச சட்ட உதவி மையம் மூலமாக எவ்வாறு பெறலாம் என்றும், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், குழந்தை திருமணம் பற்றியும், அமைப்பு சாரா தொழிலாளர் அட்டையின் பயன்பாடு பற்றியும், சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இலவச சட்ட உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கூறினார். மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு வேண்டியும் மற்றும் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில் முகாமிற்கு வந்த சுமார் 300க்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் மஞ்சபை மற்றும் மரக்கன்றுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேற்படி சட்ட விழிப்புணர்வு முகாமை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பணியாளர்கள் A.நம்பிராஜன், T.பால் செல்வம் மற்றும் கிராம உதய தொண்டு நிறுவன ஊழியர் செல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்திருந்தனர்.