முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

 ஷ்யாம் நீயூஸ்

24.08.2022

தூத்துக்குடியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது


புதிய வடிவிலான ச.ட்ட விழிப்புணர்வு முகாம்; தேசிய சட்டப்பணிகள்  ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில  சட்டப்பணிகள்  ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம்  திருவைகுண்டம் தாலுகாவில் உள்ள கிராம உதய மைய அலுவலகத்தில் வைத்து இன்று 24.08.2022 தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாமானது  நடைபெற்றது.  அதில்  தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/ சார்பு நீதிபதி M.பீரித்தா, M.L.,  தலைமை தாங்கினார். திருவைகுண்டம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் உரிமையியல் நீதிபதி  முத்துலெட்சுமி முன்னிலை வகித்தார். மேற்படி விழிப்புணர்வு முகாமில் கிராம உதய தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன், திருவைகுண்டம் தாலுகா தொழிலாளர் நல ஆய்வாளர் சங்கரகோமதி,   தூத்துக்குடி மாவட்ட கிராம உதய தொண்டு நிறுவன பணியாளர்கள், 250 க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். மேற்படி முகாமில் தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் நலவாரியம் மூலம் 300 மக்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய அட்டைகள் தூத்துக்குடி  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் தலைமையில் வழங்கப்பட்டது.  மொத்தம் 300 வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இந்த  சட்ட விழிப்புணர்வு முகாம் மூலம் பயனடைந்தனர். தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழவின் செயலாளர்  தனது தலைமையுரையில இலவச சட்டத்திட்டத்தை பற்றியும்,  அரசு நலத்திட்டத்தை இலவச சட்ட உதவி மையம் மூலமாக எவ்வாறு பெறலாம் என்றும், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், குழந்தை திருமணம் பற்றியும்,  அமைப்பு சாரா தொழிலாளர் அட்டையின் பயன்பாடு பற்றியும்,  சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இலவச சட்ட உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு  கூறினார். மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு வேண்டியும் மற்றும் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில் முகாமிற்கு வந்த சுமார் 300க்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் மஞ்சபை மற்றும் மரக்கன்றுகளை வழங்கி  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேற்படி சட்ட விழிப்புணர்வு முகாமை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பணியாளர்கள் A.நம்பிராஜன், T.பால் செல்வம் மற்றும் கிராம உதய தொண்டு நிறுவன ஊழியர் செல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்திருந்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...