முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழகத்தில் போதை பொருளை ஒழிக்க தீவிரம் காட்ட வேண்டும்!!!

ஷ்யாம் நியூஸ்

12.08.2022

தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் கவலை அளிக்கிறது. இதனை ஒழிக்க அரசு தீவிரம் காட்ட வேண்டும் என   அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். 


இந்திய சுதந்திர 75 ஆவது ஆண்டை முன்னிட்டு எட்டயபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய மீன்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "பாரத பிரதமரின் வேண்டுகோளை ஏற்று அனைத்து வீடுகளிலும் வரும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடி ஏற்ற வேண்டும்.  

இளைஞர்கள் சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் இருப்பது கவலை அடிக்க கூடிய விஷயமாக இருக்கிறது. இதனை ஒழிக்க அரசு தீவிரம் காட்ட வேண்டும். மத்திய அரசு கொண்டுவர உள்ள மின்சார சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவசம் மின்சாரம் ரத்து செய்யப்படாது. ஆனால் அதில் பல புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தத் திட்டத்தில் சேருவதற்காக பதிவு செய்து வருகின்றனர்.  மத்திய மீன்வளத் துறையின் மூலமாக தமிழகத்தில் ராமநாதபுரத்தில் பெண்களுக்காக கடப்பாசி வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு அனுப்பி உள்ளது. 

அது குறித்து ஆய்வு செய்யப்பட்டு விரைவில் அந்தத் திட்டம் தொடங்கப்படும். காசிமேடு துறைமுகம் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மேம்படு துறைமுகம் மேம்பாட்டு திட்டம் உட்பட 20 க்கும் மேற்பட்ட திட்டங்கள் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். பேட்டியின் போது நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.   

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...