முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 ஆயிரம் பனைமர விதைகள் நடவுத்திட்டம் துவக்கவிழா*

ஷ்யாம் நீயூஸ்
14.08.2022

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 ஆயிரம் பனைமர விதைகள் நடவுத்திட்டம் துவக்கவிழா

தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தூத்துக்குடி காமராஜ் கல்லூரி இணைந்து காமராஜ் கல்லூரியில் மாணவ மாணவியருக்கு பனைமரங்கள் குறித்தும் பனைபொருட்களின் பயன்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் டாக்டர். பூங்கொடி தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தாவரவியல் பேராசிரியர் டாக்டர்.குமரேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார். காமராஜ் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் நாகராஜன் பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் ஜேசுதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு பொதுச்செயலாளர்  எஸ்.தனலெட்சுமி நோக்கவுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் எம்.ஏ.தாமோதரன் கலந்து கொண்டு 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எழுபத்தைந்தாயிரம் பனை விதை நடவுத் திட்டத்தை துவக்கி வைத்து  பேசியதாவது : தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் மரம் பனைமரம் ஆகும். தாய்லாந்து , கம்போடியா , இலங்கை போன்ற நாடுகளில் பனைமரங்கள் இருந்தாலும் பனைமரத்தின் தாயகமே தமிழ்நாடுதான். தமிழர்களின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றான பனைமரத் தொழிலை பாதுகாத்திட ஒரு இயக்கமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பனைவிதைகள் நடவுப் பணிகளை சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்போடும் , அரசுத்துறை அலுவலர்களின் ஆதரவோடும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். தமிழர்களின் கற்பகவிருட்சமான பனைமரங்கள் குறித்தும் பனைமர தொழில் குறித்தும், இளைஞர் குழுக்கள் , இளையோர் மன்றங்கள் , மகளிர் சுயஉதவிக்குழுக்கள் விவசாயிகள் , பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தமிழகம் முழுவதும் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். 
பனை மரத்திலிருந்து அபூர்வமான ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் கிடைக்கப் பெறுகிறது. உதாரணமாக நுங்கு , பனங்காய் , பனம்பழம், பதநீர் , பனங்கருப்பட்டி , பனைவெல்லம் , சில்லுக்கருப்பட்டி , பனங்கற்கண்டு , பனங்கிழங்கு , பனங்கிழங்கு மாவு , பனங்கிழங்கு புட்டு , பனம்பழ ஜுஸ் மற்றும் பனஞ்சீனி போன்ற விலை மதிப்புமிக்க இயற்கையான உணவு பொருட்கள் கிடைக்கிறது. நுங்கு , பனங்கிழங்கு மற்றும் கருப்பட்டி இந்த மூன்று பனைப்பொருட்களை வைத்தே பல மதிப்பு கூட்டு உணவுப் பொருட்களை உருவாக்க முடியும். தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் , உடன்குடி பகுதிகளில் உள்ள கருப்பட்டி இந்தியா முழுமைக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது தூத்துக்குடி மாவட்டம் பனைமரங்களுக்கும் பனைமர தொழிலுக்கும் பெயர் பெற்ற மாவட்டமாகும். ஒரு சில இடங்களில் பனைமரத் தொழில் அழியும் தருவாயில் உள்ளது. அந்த நிலையை மாற்ற இளைஞர்கள் முன் வர வேண்டும். இம்மாவட்டத்தில் பனை பொருட்கள் தொழில் பூங்கா அரசு அமைத்து கொடுத்தால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பனைமரத் தொழிலலையும் மீட்டெடுக்க முடியும்.  தூத்துக்குடி மாவட்டத்தில் ஐந்து லட்சம் பனைமர விதை நடவு செய்ய திட்டமிட்டு களப்பணி செய்து வருகிறோம். அதில் தூத்துக்குடி  ஓட்டப்பிடாரம்  கருங்குளம் வட்டாரங்களில் மட்டும் 75 ஆயிரம் பனைவிதைகள்  நடவு செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதனை இக்கல்லூரியில் தொடங்குகியுள்ளோம்.  தற்போது நமக்கு இது நுங்கு , பதநீருக்கான பருவ காலம். அதனால் எங்கள் கூட்டமைப்பு நண்பர்கள் உதவியுடன் சேலம் , ஈரோடு மாவட்டங்களில் இருந்து பனைவிதைகளை சேகரித்து இப்பகுதிகளில் நடவு செய்து வருகிறோம். நம்ம பகுதியில் ஆவணியில் பனம்பழம் பருவம் தொடங்கிவிடும். அப்போது ஆங்காங்கே குழுக்கள் அமைத்து பனைவிதை சேகரிப்பு பணி ஒரு பக்கம் நடைபெறும். மற்றோரு மக்கம் பனைவிதை நடவுப்பணி நடைபெறும். தமிழர்களின் தேசிய மரமான பனைமரத்தையும் , பனைமரத் தொழிலலையும் பாதுகாத்திட நாம் அனைவரும் ஒரு இயக்கமாக செயல்படுவோம் என்று பேசினார்.  தாவரவியல் பேராசிரியர்கள் டாக்டர் பொன்ரதி , பேராசிரியர் டாக்டர் முத்துஷீபா , அலுவலக கண்காணிப்பாளர் சரவணன் ,  உதவியாளர் சிவராமன் மற்றும் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில இணைச்செயலாளர் ஜெயகனி நன்றி கூறினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...