முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள குறைகளை தீர்க்க 4 கோடியே 88லட்சம் ஒப்புதல் அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை

 ஷ்யாம் நீயூஸ்

15.08.2022

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள குறைகளை தீர்க்க 4 கோடியே 88லட்சம் ஒப்புதல் அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை 



மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள குறைகளை தீர்க்க 4 கோடியே 88லட்சம் ஒப்புதல் அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளேன் கிராமசபை கூட்டததில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தகவல் தெரிவித்தார்

தூத்துக்குடி 75வது சுதந்திரதின அமுத பெருவிழாவை யொட்டி மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராமசபை கூட்டம் மாதாநகர் மாதா கோவில் முன்புள்ள பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.

     இதில் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் வக்கீல் மாடசாமி பேசுகையில்  இந்த பகுதியில் இருக்கும் காவலர் குடியிருப்புக்கு வழங்கப்படும் மின்சார கட்டணத்தை செலுத்த கூடாது கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். அந்த பகுதியில் உள்ள 5 சாலைகள் ஒன்றியம் மூலம் போடப்பட்டுள்ளது. அதில் சில தவறுகளும் நடந்துள்ளன. அதை முறைப்படுத்த வேண்டும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக தார்சலை அமைக்க கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பேசினார்.

     சங்கரன் பேசுகையில் நமது ஊராட்சி பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்க வேண்டும். என்று பேசினார்.

    இந்த பகுதிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் 656 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு சமூக விரோதிகள் ஊடுருவதை தடுத்த காவல்துறைக்கும் பலர் நன்றி தெரிவித்தனர். கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களின் கேள்விகளுக்கு பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் அரசு சார்பில் நடைபெறும் திட்டத்தில் பயன்பெறுவது குறித்தும் பேசினார்கள்.  

ஊராட்சி மன்ற தவைலர் சரவணக்குமார் பேசுகையில் இந்த பகுதி வளர்ச்சியடைவதற்கு பல்வேறு வகையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அதிகாரிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிரந்தரமாக குடிதண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு 4 கோடியே 88 லட்சம் ஓப்புதல் பெறுவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 2024ல் ஊராட்சியின் அனைத்து பகுதிகளிலும் குடிதண்ணீர் தட்டுபாடு இல்லாமல் முழுமையாக எல்லோருக்கும் வழங்கப்படும் வகையில் பணிகள் நடைபெறவுள்ளன. பொதுமாயணம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 2 தூய்மை பணியாளர்களுக்கு சுதந்திர தினவிழாவில் கலெக்டர் சான்றிதழ் வழங்கியுள்ளார். இதுபோல் பல சாதனைகள் ஊராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ள இருக்கும் அனைத்து பகுதி மக்களும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும். என்னாலும் பொதுமக்களுக்காக தன்னலம் கருதாமல் உழைப்பேன் என்றார்.

ஊராட்சி பகுதியில் கொசு ஓழிப்பு டெங்கு காய்ச்சல் தடுப்பு குடிநீர் சிக்கணம் சுகாதாரம் பிளாஸ்டிக் ஓழிப்பு மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட கலை பண்பாட்டு துறை மூலம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

துணைத்தலைவர் தமிழ்செல்வி, வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலி;க்ஸ், ஸ்டாலின், வசந்தகுமாரி, தங்கபாண்டி, மகேஸ்வரி, ஜுனத்பீபி, பாலம்மாள், சக்திவேல், பாண்டியம்மாள், கதிர்வேல், உமாமகேஸ்வரி, ஜேசுராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் பாலன், தொம்மை சேவியர், சுகாதார ஆய்வாளர் வில்சன், உதவி காவல் ஆய்வாளர் செல்வன், நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளர் காசு உசேன் அகமத், தூய மரியன்னை கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் பரிபூரண செல்வி, மகாலட்சுமி கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகப்பிரியா, அலுவலர் வசந்தசேனா, வேளாண்மை துறை அலுவலர் ரோஹித்ராஜ், மீன்துறை ஆய்வாளர் பெல்சி ஷிபாணி, கால்நடை ஆய்வாளர் நிலை 1 நாகூர்மீரான், தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் உதவி பொறியாளர் மகேஷ்குமார், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு திட்ட அதிகாரி செல்வி புளோரன்ஸ், மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, இலவச சட்டபணிகள் ஆணைக்குழுவை சேர்ந்த வக்கீல் சந்தனசெல்வம், மற்றும் ரவி என்ற பொன்பாண்டி, சுதாகர், கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நன்றியுரையாற்றினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...