முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் போல் பலர் உருவாக வேண்டும் .கனிமொழி எம்பி பாராட்டு!

 ஷ்யாம் நீயூஸ்

20.08.2022

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் போல் பலர் உருவாக வேண்டும் .கனிமொழி எம்பி பாராட்டு!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் போல் பலர் உருவாக வேண்டும் என கனிமொழி எம்.பி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார்.

     தூத்துக்குடி மாநகர திமுக புதிய நிர்வாகிகள் அறிமுககூட்டம் எட்டையாபுரம் ரோடு கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ் தலைமை வகித்தார். புதிய நிர்வாகிகளை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிமுகம் செய்து வைத்தார்.

மாநில மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி தொகுதி எம்.பியுமான கனிமொழி பேசுகையில் தமிழகத்தில் மாவட்ட செயலாளர்களாக பலர் இருந்தாலும் பெண் மாவட்ட செயலாளராக அமைச்சர் கீதாஜீவன் மட்டும் பணியாற்றி வருகிறார். இவரை போல் பணியாற்றுவதற்கு 10 அல்லது 20 பெண்கள் வரவேண்டும். திமுக பல்வேறு சோதனைகள் மிசா சட்டம் என எல்லாவற்றையும் கடந்து வந்த கட்சி. 13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தோம் நமது தலைவர் கலைஞர் செய்த பணிகள் ஏராளம் திமுக தொண்டர்கள் ஓவ்வொருவருக்கும் உரம் ஏற்றப்பட்டு தியாகம் மொழி இவையெல்லாம் கடந்து உரு ஏற்றப்பட்டு வளர்ந்த இயக்கம் சுயமரியாதைக்காக பாடுபட்ட கட்சி எல்லோரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். என்றகொள்கையை வளர்த்ததால் அனைவராலும் வாழ்த்து பெற்ற கட்சி திமுக அண்ணா பெரியார் கலைஞர் வழியில் தற்போது முதல்வர் ஸ்டாலின் வழியில் வழிநடத்தப்படுகிறது. ஹிந்தி மொழியை எதிர்த்து போராட்டம் தூப்பாக்கி சூடு என பல போராட்டத்தை கடந்து வந்த இயக்கம் மொழி பாதுகாக்கப்பட வேண்டும். இன்னொரு மொழியை கட்டாயமாக தினிக்க கூடாது. இட ஒதுக்கீடு சமூகநீதி, ஆகியவற்றை நாம் பாதுகாத்து வைத்துள்ளோம். இதற்கு எதிராக ஒன்றிய அரசு எல்லாவற்றையும் அழித்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் கல்வியின் இட ஓதுக்கீடு பொது அதை பின்பற்றாமல் ஒன்றிய அரசு எஸ்சிஎஸ்டி பிரிவில் இட ஓதுக்கீடு செய்கிறது. 50 சதவீதம் முன்னேறிய சாதி வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்கிறது. சமூக நீதி காக்கப்படாமல் இருந்து வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக சிந்தித்து செயல்பட்டது தான் திராவிட மாடல் ஆட்சி ஒன்றிய அரசு ஜாதி மதம் இவற்றை பிரித்து ஆட்சி செய்கிறது. நாம் கட்டிய கட்டிடத்தை எல்லாம் தகர்த்தெறிய முயற்சி எடுக்கிறது. நம் குழந்தைகள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். முந்தைய இடத்திற்கு நம்மை தள்ளி விட கூடாது. இந்த மாவட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் எப்படி எல்லாம் பணியாற்றுகிறார் என்று நம் பணி இருக்க வேண்டும் எதிர்கட்சிகள் பொய் பிராச்சாரம் மூலம் வாட்சப் களில் தகவல்களை பரப்பி வருகின்றன. அதை நம்புகிறவர்களும் இருக்கின்றன. மற்றவர்கள் மணம் புண்படும் படி பேசுவதை தடுக்க வேண்டும். இந்த பணிகளையும் நீங்கள் செய்ய வேண்டும். சிலர் நாம் செய்த பணிகளை மீண்டும் நினைவு படுத்தாமல் விட்டுவிடுகின்றனர். வெளியில் சொல்லி அதை நினைவு படுத்த வேண்டும். வரும் 2024 தேர்தலில் தமிழ்நாட்டை பாதுகாக்கும் கடமை நமக்கு உள்ளது என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும்.

அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் ஓவ்வொரு வார்டு பகுதிகளிலும் எதிர்கட்சிகள் செய்கின்ற பணிகளை எனக்கு தெரியப்படுத்த வேண்டும். காரணம் அவர்கள் கூறுகின்ற குற்றச்சாட்டுகளுக்கும் பொய் பிராச்சாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அண்ணாமலை என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் பேசி வருகின்றார். உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறிவரும் இது போன்ற எதிர்கட்சியினருக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். இடைபட்ட காலத்தில் சற்று சோர்ந்து போய் உள்ளவர்கள் அப்படி இல்லாமல் களப்பணியை வேமாக செய்ய வேண்டும் என்றார்.

மேயர் ஜெகன்பெரியசாமி பேசுகையில் நம் இயக்கத்தை பற்றியும் முதல்வரை பற்றியும் பலர் முகநூல் வாட்சப் போன்றவைகளில் தவறான கருத்துகளை எல்லாம் பரப்பி வருகின்றன. இதற்கெல்லாம் நம் கட்சியினர் உடனடியாக தக்க பதிலடி கொடுக்க வேண்டும் யார் யார் என்ன பேசுகின்றார்கள் என்ன செய்கிறார்கள் என்று நான் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். ஆட்சி நம்ம ஆட்சி ஆகிவே எல்லோரும் நம் இயக்கத்தையும் முதல்வரையும் குறை சொல்பவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் துறைமுகம் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணிஸ்டாலின், அன்பழகன், கஸ்தூரிதங்கம், உமாதேவி, அபிராமிநாதன், மரியதாஸ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள்  பிரதீப், முத்துத்துரை, அந்தோணிகண்ணன், சின்னத்துரை, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், மாநகர அணி அமைப்பாளர்கள் முருகஇசக்கி, ஜெயக்கனி, அருண்குமார், டேனி, துணை அமைப்பாளர்கள் கிறிஸ்டோபர் விஜயராஜ், டைகர் வினோத், செல்வின், தனபால், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், கீதாசெல்வமாரியப்பன், சுப்பையா, ரவீந்திரன், ரவிசந்திரன், பாலு, கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், முத்துவேல், ராஜதுரை, பவாணி மார்ஷல், மெட்டில்டா, பொன்னப்பன், இசக்கிராஜா, கண்ணன், நாகேஸ்வரி, ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ் மார்ஷல், ஜாக்குலின் ஜெயா, முன்னாள் கவுன்சிலர்கள் செல்வகுமார், செந்தில்குமார், மற்றும் கருணா, பிரபாகர், அல்பட், மணி, லிங்கராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மறைந்த கழக பிரமுகர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஓரு நிமிடம்  மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...