முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மக்கள் சமூக விரோதிகள் அல்ல! மனித உரிமை மீறலை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு வழக்கறிஞர் அதிசயகுமார் கோரிக்கை.

 ஷ்யாம் நீயூஸ்

22.08.20

 தூத்துக்குடி மக்கள் சமூக விரோதிகள் அல்ல! மனித உரிமை மீறலை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு வழக்கறிஞர் அதிசயகுமார் கோரிக்கை வைத்துள்ளர்.

தூத்துக்குடி வழக்கறிஞர் அதிசயகுமார் மாவட்ட கலெக்டர், காவல் கண்காணிப்பாளர், தென்மண்டல காவல் துறை தலைவர், துணைத்தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது

     தூத்துக்குடி மாவட்டமானது 20-10-1986ம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு வாரமும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட கலெக்டரை சந்தித்து கொடுத்து வருவது வழக்கமாக இருந்து வந்தது. இந்த மாவட்டத்தின் முதல் குடிமகனான மாவட்ட கலெக்டரை சந்திப்பதற்கு மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருந்து வந்தது.

      கடந்த 22-05-2018ல் மாவட்ட கலெக்டரை சந்திக்க வந்த மக்கள் மீது காவல்துறையினர் குருவிகளை சுடுவது போல சுட்டும், அடித்தும் 16 நபர்களை கொலை செய்தார்கள். அதன் பின்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பாதுகாப்பு என்ற பெயரில் காவல்துறையினர் சட்டத்திற்கு விரோதமாகவும், மனித உரிமை மீறல் செயலையும் செய்து, பல வகைகளில் மக்களை கலெக்டர்  அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் அப்புறபடுத்தி வருகின்றார்கள்.

     கடந்த சில வாரங்களாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றி தடுப்பு வேலைகளை அமைத்துள்ள காவல் துறையினர் தடுப்பு வேலியில் பொதுமக்கள் நிற்கும் முன் பகுதியில் முள் கம்பிகளை கட்டியும், காவல்துறையினர் நிற்கும் பின் பகுதியில் முள் கம்பிகள் இல்லாமலும் தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர். சர்வாதிகார நாட்டில் கூட பொதுமக்கள் அந்நாட்டின் அதிகாரிகளை சந்திக்க வரும் இடத்தில் முள் கம்பிகளை கட்டி தடுப்பது கிடையாது. நமது இந்திய நாட்டின் எல்லைகளில் தீவிரவாதிகள் ஊடுறுவதை  தடுப்பதற்காக இதுபோன்ற முள்வேலிகளை அமைப்பது உண்டு.                

    இங்கு தூத்துக்குடி மக்கள் தீவிரவாதிகளோ, சமூக விரோதிகளோ அல்ல. தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்களது மாவட்டத்தின் முதல் குடிமகனான மாவட்ட கலெக்டரை சந்திப்பதை தடுப்பதற்கு முள் கம்பி வேலிகளை அமைத்துள்ளதால் முள்கம்பியில் பொதுமக்களோ, பெண்களோ, குழந்தைகளோ, ஊனமுற்றவர்களோ கைகளால் பிடிக்கும் போதோ, தடுப்பு வேலியில் சாயும் போதோ, ரத்தகாயங்கள் கடுமையாக ஏற்படும். காவல்துறையினரின் இச்செயல் மனித உரிமை மீறல் செயலாகும். காவல்துறையினர் மாவட்ட கலெக்டர்  அலுவலகத்தை சுற்றி அமைத்துள்ள தடுப்பு வேளையில் கட்டி உள்ள முள் கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.

       ஆகவே மாவட்ட கலெக்டர் தூத்துக்குடி மக்கள் தங்களை சந்திக்க வருவதை பாதுகாப்பு என்ற பெயரில் தடுப்பு வேலியில் முள் கம்பிகளை அமைத்து உள்ளதை உடனடியாக அகற்றும் படி தூத்துக்குடி சமுக ஆர்வலரும்  வழக்கறிஞருமான அதிசயகுமார் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...