ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கை - கருத்து செல்ல விரும்பவில்லை தூத்துக்குடியில் ஆளுநர் பேட்டி.
ஷ்யாம் நீயூஸ்
20.08.2022
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கை - கருத்து செல்ல விரும்பவில்லை தூத்துக்குடியில் ஆளுநர் பேட்டி.
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கை - நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. நான் ஆளுநராக வந்திருக்கிறேன். அரசியல்வாதியாக வரவில்லை தூத்துக்குடியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேட்டியளித்தார்.
நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் ஒண்டிவீரன் தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை ஆகியோர் தூத்துக்குடி விமான நிலையம் வந்தனர். காவல்துறையினரின் அனிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட பின்னர் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை விமான நிலையத்தில் கூடியிருந்த பாஜக தொண்டர்களை நேரில் சந்தித்து அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டா.ர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சுதந்திரதினம் அமிர்த பெருவிழா ஒரு வருடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்னும் கொண்டாடப்படுகிறது. இது போன்று விழாக்கள் மூலமாகத்தான் வரலாற்றில் இருந்து அறியப்படாமல் உள்ள ஒதுக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் முழுமையான சரித்திரம் வெளியே வர வாய்ப்புள்ளது.
இன்றைய காலகட்டத்தில் இப்படிப்பட்ட விழாக்கள் தேவை. அதனால் தான் ஒண்டிவீரன் விழாவில் கலந்து கொள்ள இரண்டு ஆளுநர்கள் இங்கு வந்துள்ளோம்.
இப்படிப்பட்ட வீரர்களினால் தான் நாம் இன்று சுதந்திரமாக நடமாடிக் கொண்டு இருக்கிறோம்.இளைஞர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை இன்னும் அதிகமாக படிக்க வேண்டும்.பாட புத்தகங்களில் இத்தகைய வீரர்களின் வரலாறு இன்னும் அதிகமாக இடம்பெற வேண்டும் என்றார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து தங்களின் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதில் நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. நான் ஆளுநராக வந்துள்ளேன். அரசியல்வாதியாக வரவில்லை என்றார்.
( கடந்த பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது)