முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீப ஓளி ஏற்ற வேண்டிய மாணவிகள் தேவையில்லாத பழக்கத்தில் ஈடுபடக்கூடாது ஏபிசி மகாலெட்சுமி கல்லூரி விழாவில் கூடுதல் எஸ்.பி, கார்த்திகேயன் அறிவுரை

 11.08.2022

தீப ஓளி ஏற்ற வேண்டிய மாணவிகள் தேவையில்லாத பழக்கத்தில் ஈடுபடக்கூடாது ஏபிசி மகாலெட்சுமி கல்லூரி விழாவில் கூடுதல் எஸ்.பி, கார்த்திகேயன் அறிவுரை


தூத்துக்குடி ஏபிசி மகாலெட்சுமி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு விழாவில் கல்லூரி முதல்வர் பால சண்முகதேவி வரவேற்புரையாற்றினார்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பேசுகையில் இன்று நீங்கள் மாணவி நாளை மனைவி அடுத்து குடும்ப தலைவி என்று உங்கள் வாழ்க்கையை வளப்படுத்தி கொள்ள இருக்கிறீர்கள் சமீப காலமாக நடைபெறுகின்ற பல சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யார் என்று பார்த்தால் அதை 75 சதவீதம் பேர் பல்வேறு போதை பொருள்களை உட்கொண்டு நாம் என்ன நிலையில் இருக்கின்றோம் என்பதை மறந்து அறியாமையில் தவறு செய்கின்றன.

     இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓருவார காலம் பள்ளி கல்லூரிகளி;ல் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் அந்த அறிவுரையை கூறுகிறேன். பல வெளிநாடுகளில் இது போன்ற பொருட்கள் சில தயாரிப்புகளுக்கு பயன்படுத்துகிறார்கள். அதை பல வழிகளில் இந்தியாவுக்குள் ஊடுருவி தமிழகத்திற்கும் வந்துள்ளது. அதை தடுப்பதும் தவிர்ப்பதும் நமது கடமை படிக்கும் காலத்தில் நாம் அனைவரும் நம்மை பெற்றெடுத்த தாய் தந்தையர் கஷ்டத்தை உணர்ந்து படிக்க வேண்டும். நீங்கள் பணம் கொடுத்து கல்வியையும் அறிவையும் பெறுகிறீர்கள் அந்த காலக்கட்டத்தில் உங்கள் என்னம் உங்கள் நலனை பாதுகாப்பதும். எதிர்கால வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்ற சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும் வாட்சப், முகநூல் போன்றவற்றில் தேவையில்லாத பதிவுகளுக்கு லைக் கொடுக்க கூடாது.

    கல்லூரி படித்த பின்பு நாம் கணவரை தேடும் போது நல்ல கல்வி படித்துள்ளாரா நல்ல பணிசெய்கிறாரா அவர் வாங்கும் சம்பளம் நம் குடும்பத்தை வழிநடத்துவதற்கு போதுமானதாக இருக்குமா என்று பல்வேறு வகையில் ஆராய்ந்து திருமணம் செய்து கொள்கிறோம். இதில் எப்படி கவனம் செலுத்திகிறோமோ அதே போல் நம்ம குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி உறவினர்கள் மத்தியில் தவறான வழிக்கு செல்பவர்கள் இருந்தால் அவர்களை  போதை பொருள்களினால் ஏற்படும் பாதி;ப்புகளை எடுத்துகூறி அதை உட்கொள்வதை தடுக்க வேண்டும். பல்வேறு போதை பொருள்களை உட்கொள்வதால் உடலுறுப்புகள் மூளை பாதிப்புகள் எற்பட்டு எல்லா வகையிலும் பாதிக்கப்படும் நிலைதான் வருகிறது.

    சில தவறுகளையும் செய்வதற்கு வழிவகுக்கிறது. இவையனைத்தும் முழுமையாக தடுப்பதற்கு இதுபோன்ற கல்லூரி பள்ளிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம் பலர் காலையிலிருந்து இரவு வரை நன்றாக உழைத்துகொண்டு கிடைக்கின்ற ஊதியத்தில் போதையில் மயங்கி தன் குடும்பத்தை கவணிக்காமல் விட்டுவிடுவதால் பல இழப்புகளும் ஏற்படுகின்றது. இது போன்ற நிலைகள் இனி தமிழகத்தில் வரக்கூடாது. என்று முதலமைச்சர் உத்திரவிட்டுள்ளார். அனைவரும் இதை தடுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

      விழாவில் மதுவிலக்கு காவல்துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு, மாணவர் பேரவை ஓருங்கிணைப்பாளர் போராசிரியர் மேரி சுபா, மாணவர் பேரவை பொறுப்பாளர் பேராசிரியர் பாலதீபஅரசி, கனிதத்துறை உதவி பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட ஓருங்கிணைப்பாளர் போராசிரியர் சண்முகப்பிரியா, பேராசிரியர் வசந்தசேனா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். உதவி பேராசிரியர் செல்வராணி நன்றியுரையாற்றினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...