ஷ்யாம் நீயூஸ்
21.08.2022
தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக சரவணக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி திராவிட முன்னேற்றக்கழக 15வது உட்கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் கிளைச்செயலாளர்கள் முதல் ஒன்றிய செயலாளர்கள் வரை நடைபெற்று முடிந்துள்ளது. அதில் தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் தேர்வு செய்யப்பட்டு நிர்வாகிகள் அறிவிப்பு தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கிழக்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட சரவணக்குமாருக்கு துணைத்தலைவர் தமிழ்செல்வி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலி;க்ஸ், ஸ்டாலின், வசந்தகுமாரி, தங்கபாண்டி, மகேஸ்வரி, ஜுனத்பீபி, பாலம்மாள், சக்திவேல், பாண்டியம்மாள், கதிர்வேல், உமாமகேஸ்வரி, ஜேசுராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் பாலன், தொம்மை சேவியர், கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், கிளைக்கழக செயலாளர்கள் திமுக பல்வேறு அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்களும் நேரில் சந்தித்து சால்வை மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.