முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு காவல்துறையினர் மற்றும் தாசில்தார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் கோரிக்கை!

 ஷ்யாம் நீயூஸ்

24.08.2022

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினர் மற்றும் தாசில்தார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்தனர்

தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்கம் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார கூட்டமைப்பு தலைவர் தியாகராஜன் செயலாளர். கணேசன், துணைத் தலைவர் கல்லை ஜிந்தா மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் முருகன், நான்சி, துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலட்சுமி, ஒப்பந்ததாரர் லக்ஷ்மணன் ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது கூறுகையில்...

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சிலர், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மீது அபாண்டமான பலியை சுமத்துவதோடு, மீண்டும் மக்களிடையே தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த நபர்களால் தூத்துக்குடியில் மீண்டும் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவாமல் மக்களை பாதுகாக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. இந்த அசம்பாவிதங்களுக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை மாண்புமிகு நீதியரசர் அருணா ஜெகதீசன் அவருடைய ஒரு நபர் ஆணைய விசாரணை கமிட்டி, மிக தெளிவாக விளக்கி உள்ளது. அதுபோன்று துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு எதிராக காவல்துறை துப்பாக்கி வீடு நடத்தியது மிகப்பெரிய தவறு என்றும்.

இது தொடர்பான உண்மை தன்மையை உலகறிய செய்த மாண்புமிகு நீதியரசர் அவர்களுக்கு ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு  சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உண்மை தன்மை இவ்வாறு இருக்க, ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் என்ற மாய தோற்றத்தில் இருக்கக்கூடிய சில நபர்கள் தொடர்ந்து இந்த ஆலைக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். மேலும் அவதூறு பரப்பினவர்கள், பொது மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்;

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சிலர் சொன்னது போன்று, காற்று மாசு ஏற்படவில்லை என்பது அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வு அறிக்கை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகரின் காற்று மாசுபாட்டுக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை என்பது இந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் காற்று  மாசுபடுவதால் புற்றுநோய் ஏற்படுகிறது என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கூறியிருந்தனர். ஆனால் சமீபத்திய (RTI) தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அறிக்கையில் தூத்துக்குடி காற்று மாசுபாட்டிற்கும் புற்று நோய்க்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை ஆனது தூத்துக்குடி சுகாதாரத்துறை இணை இயக்குனரால் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு பொய்க்குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்டதால் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளம் பாதிக்கப்பட்டுள்ளது, பொது மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

எனவே அரசு, அவதூறு பரப்பினவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் என்று கூறினர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...