ஷ்யாம் நியூஸ்
05.08.2022
ஏரல் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 132 மதுபாட்டில்கள், மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று வாழவல்லான் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, புதுக்கோட்டை கூட்டாம்புளி பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் முருகேசன் (39) மற்றும் ஏரல் அம்மாள் தோப்பு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் குணபால் (37) ஆகிய இருவரும் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 132 மதுபாட்டில்கள், ரொக்க பணம் ரூ.5,180 மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஏரல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.