முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி போத்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்றனர்.

 ஷ்யாம் நீயூஸ் 31.08.2022 தூத்துக்குடி போத்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்றனர்.   தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள போத்தி விநாயகர் கோவில் தர்மகர்த்தாவாக மறைந்த திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பெரியசாமி 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார். அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விநாயகர் சதுர்த்தி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் தலைமை பட்டர் செல்வம் என்ற கல்யாணசுந்தர சிவாச்சியார் மூலம் நான்குகால யாகசாலை பூஜை நடைபெற்று போத்தி விநாயகர் விமான கோபுரம் மற்றும் மூலஸ்தானம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் தரிசனம் செய்தனர். விழாவில் தொழிலதிபர்கள் மணி, தெய்வநாயகம், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, மகா கும்பாபிஷேக விழாக்குழு தலைவர் தர்மகர்த்தாவுமான ராஜா பெரியசாமி, செயலாளர்கள் செல்வராஜ், செல்வகுமார், பொருளாளர் வேல்ச...

தூத்துக்குடியில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ பிறந்தநாளை முன்னிட்டு முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

 ஷ்யாம் நீயூஸ் 30.08.2022 தூத்துக்குடியில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ பிறந்தநாளை முன்னிட்டு முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.      தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரநகரில் உள்ள நியூ பாசகரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு இன்று காலை உணவை தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் வழங்கினார்.      நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும் தமிழ்நாடு பனைபொருள் வாரிய உறுப்பினருமான காங்கிரஸ் எடிசன், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் முருகன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் முத்துராஜ், தனுஷ், மாநகர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் யூனியன் தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மாவட்ட மீனவரணி துணைதலைவர் கென்னடி ராஜ், தெற்கு மண்டலத்தலைவர் எஸ்டி ராஜன், மற்றும் வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூய்மை பணி மாப்பிள்ளையுரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

 ஷ்யாம் நீயூஸ் 30.08.2022  தூய்மை பணி  மாப்பிள்ளையுரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.      தூத்துக்குடி மத்திய அரசு இந்தியா முழுவதும் தூய்மை பாரதம் திட்டத்தை தொடங்கி கிராமங்கள் முதல் மாநகரம் வரை அனைத்து பகுதிகளும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று திட்டத்தை தொடங்கி வைத்து நடைபெற்று வருகின்றன. தமிழக அரசும் இதே போல் கிராம ஊராட்சி திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன.       இந்நிலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியான வடக்கு சோட்டையன் தோப்பு, பூபாண்டியாபுரம், சகாயமாதாபட்டிணம், இருதயம்மாள்நகர், ஆகிய பகுதிகளில் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் மூலம் தூய்மை பணியை ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.       நிகழ்ச்சியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, வசந்தகுமாரி, கதிர்வேல், திமுக ஒன்றிய பொருளாளர் ஆனந்தகுமார். மாப்பிள்ளையூரணி ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், மற்ற...

தூத்துக்குடி பிரையன்ட் நகர் விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழா அமைச்சர் கீதாஜீவன், மேயா ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

 ஷ்யாம் நீயூஸ் 29.08.2022 தூத்துக்குடி பிரையன்ட் நகர் விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழா அமைச்சர் கீதாஜீவன், மேயா ஜெகன் பெரியசாமி பங்கேற்பு  தூத்துக்குடி பிரையன்ட்நகர் கீழ்பகுதியில் பிரதிபெற்ற செல்வவிநாயகர் சுப்பிரமணியர் திருக்கோவில் 47வது ஆண்டு வருஷாபிஷேக விழாவையொட்;டி கணபதி ஹோமத்துடன் நடைபெற்று சிறுவர் சிறுமியர்கள் பால்குட்ம் எடுக்கும் பெரியவர்கள் முக்கூடல் தீர்த்த நீர் எடுத்து ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தது. வருஷாபிஷேக விழாவையொட்டி சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வருஷாபிஷேக விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பிரையண்ட்நகர் பகுதி திமுக செயலாளரும் மாநகராட்சி நகர் நல குழு தலைவருமான ராமகிருஷ்ணன், வட்டச்செயலாளர்கள் சிங்கராஜ், சுப்பையா, முன்னாள் வட்டச்செயலாளர் சாரதி, மாநகர திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் பிக் அப் தனபாலன், பிரையண்ட்நகர் பகுதி இளைஞர் அணி செயலாளர் ரவி, வட்டபிரதிநிதிகள் ரஜினிமுருகன், பாஸ்கர், சரவணன், வட்ட து...

தூத்துக்குடியில் பெண்கள் கபடி போட்டி கே.வி.கே.சாமி அணி வெற்றி பெற்றது.

 ஷ்யாம் நீயூஸ் 29.08.2022 தூத்துக்குடியில் பெண்கள் கபடி போட்டி கே.வி.கே.சாமி அணி வெற்றி பெற்றது. தூத்துக்குடி முத்துநகர் மற்றும் நேசக்கரங்கள் கபடி குழுக்கள் இணைந்து நடத்தும் 4ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட பெண்கள் ஒரு நாள் கபடி போட்டி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர்.      விழாவில் கே.வி.கே.சாமி அணியினருக்கு முதல் பரிசாக ரூ6000 கொல்லம்பரும்பு தங்கமாரியப்பன், சகாய மாதாபட்டிணம ஜான்சன்;, கோவில்பிள்ளைவிளை முத்துராஜ், மின்னல் ஸ்போட்ஸ் கிளப் அணியினருக்கு இரண்டாவது பரிசாக ரூ4000 பாலன் டிரேடர் பில்டிங் மெட்டிரியல் சப்லெயர். ஏ.பி.சி மகாலெட்சுமி கல்லூரி அணியினருக்கு மூன்றாம் பரிசாக ரூ2500 மாதாநகர் குரு மார்பில்;ஸ் குருராஜ், ரத்னா ஸ்போட்ஸ் கிளப் அணியினருக்கு நான்காம் பரிசாக ரூ2500 காமராஜ் நகர் ஜெனிபர் மார்பில்ஸ் அற்புதராஜ் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசினை வழங்கினார்கள். பின்னர் அனைத்து அணிகளுக்கும் நேசக்கரங்கள் கபடி குழு பரிசு கோப்பையை வழங்கியது

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெறுகின்றன. மாநகராட்சி கூட்டத்தில் ஜெகன் பெரியசாமி தகவல்

 நீயூஸ் நீயூஸ் 25.08.2022 தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெறுகின்றன. மாநகராட்சி கூட்டத்தில் ஜெகன் பெரியசாமி தகவல்       தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளுக்கு தேவையானது குறித்து பேசினார்கள்.      அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் தூத்துக்குடி மாநகர பகுதியில் சில இடங்களில் 3 நாட்களும் அதே போல் இரண்டு ஒன்று என நாட்களில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அனைத்து பகுதிகளுக்கும் தினசரி தண்ணீர் கொடுக்க வேண்டும். என்ற இலக்கோடு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே போல் முதல்வர் தளபதியார் தூத்துக்குடி பகுதியில் கடந்த காலத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அந்த பகுதிகளில் வரும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்னும் ...

தூத்துக்குடி மாவட்ட பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பணியிடைப்பயிற்சி நடைபெற்றது.

 ஷ்யாம் நீயூஸ் 25.08.2022 தூத்துக்குடி மாவட்ட பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பணியிடைப்பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றம் மற்றும் ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி இணைந்து தூத்துக்குடி மாவட்ட பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பணியிடைப் பயிற்சி 23.08.2022 மற்றும் 24.08.2022 ஆகிய இரண்டு நாட்கள் ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. முதுநிலை அறிவியல் மற்றும் வேதியியல் ஆராய்ச்சித்துறைத் தலைவர் மற்றும் பணியிடைப் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோகிலா சுபத்ரா கிறிஸ்டி  வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பால ஷண்முக தேவி தலைமையுரையாற்றினார். தூத்துக்குடி மாவட்டமுதன்மை  கல்வி அதிகாரி பாலதண்டாயுதபாணி வாழ்த்துரை வழங்கினார். பயிற்சி கையேடு ‘அடிப்படை அறிவியல்’ என்னும் நூலின் முதல் பிரதியை கல்லூரியின் முதல்வர் முனைவர் பால ஷண்முக தேவி வெளியிட மாவட்ட முதன்மை  கல்வி அதிகாரி பாலதண்டாயுதபாணி பெற்றுக் கொண்டார். பயிற்சியின் இறுதியில் தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் சொர்ணலெட்சுமி நன்றி கூறினார்.  இந்நிகழ்வில்...

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

 ஷ்யாம் நீயூஸ் 25.08.2022 பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம்; தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில  சட்டப்பணிகள்  ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து இன்று தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாமானது  நடைபெற்றது.  அதில் மாண்புமிகு  தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/ சார்பு நீதிபதி M.பீரித்தா, M.L.,   தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி,  மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் திருமதி.சுபாஷினி, குழந்தை நலக் குழுவின் உறுப்பினர் சிதி ரம்ஜான், மாப்பிள்ளையூரணி  ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார், செயலாளர் ஜெயக்குமார், வார்டு உறுப்பினர்கள் பாரதிராஜா மற்றும் ராணி, ச...

தூத்துக்குடியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் மற்றும் – குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு.

ஷ்யாய் நீயூஸ் 25.08.2022 தூத்துக்குடியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் மற்றும் – குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு. தூத்துக்குடியில் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று குழந்தை பாதுகாப்பு குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திருப்பு முனை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் கலை அரங்கத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதில் ரூபாய் 19.20 லட்சம் மதிப்பிலான 385 மிதிவண்டிகளை மாணவிகளுக்கு வழங்கினார்.  பின்னர் கலை அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திருப்பு முனை விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது, அமைச்சர் கீதா ஜீவன்  கலந்து கொண்டு விழிப்புணர்வு நிக...

மோடி ஆட்சியில் கூட்டு பலாத்காரத்துக்குள்ள பெண்ணுக்கு நீதிகேட்டு தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 ஷ்யாம் நீயூஸ் 24.08.2022 மோடி ஆட்சியில் கூட்டு பலாத்காரத்துக்குள்ள பெண்ணுக்கு நீதிகேட்டு தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் இனக்கலவரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இஸ்லாமிய பெண்ணுக்கு நீதி கிடைக்கவும், கற்பழித்து கொடூர கொலை செய்த கொலைக் குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்க வலியுறுத்தியும் தூத்துக்குடியில் பெரியாரிய உணவர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் விவிடி சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் விடியல் கட்சி தலைவர் சந்தனராஜ் தலைமை தாங்கினார். இதில், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். நிறைவாக தமிழ் புலிகள் மாவட்ட செயலாளர் தாஸ் நன்றி கூறினார் . 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு காவல்துறையினர் மற்றும் தாசில்தார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் கோரிக்கை!

 ஷ்யாம் நீயூஸ் 24.08.2022 தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினர் மற்றும் தாசில்தார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்தனர் தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்கம் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார கூட்டமைப்பு தலைவர் தியாகராஜன் செயலாளர். கணேசன், துணைத் தலைவர் கல்லை ஜிந்தா மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் முருகன், நான்சி, துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலட்சுமி, ஒப்பந்ததாரர் லக்ஷ்மணன் ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது கூறுகையில்... ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சிலர், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மீது அபாண்டமான பலியை சுமத்துவதோடு, மீண்டும் மக்களிடையே தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த நபர்களால் தூத்துக்குடியில் மீண்டும் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவாமல் மக்களை ...

தூத்துக்குடியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

 ஷ்யாம் நீயூஸ் 24.08.2022 தூத்துக்குடியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது புதிய வடிவிலான ச.ட்ட விழிப்புணர்வு முகாம்; தேசிய சட்டப்பணிகள்  ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில  சட்டப்பணிகள்  ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம்  திருவைகுண்டம் தாலுகாவில் உள்ள கிராம உதய மைய அலுவலகத்தில் வைத்து இன்று 24.08.2022 தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாமானது  நடைபெற்றது.  அதில்  தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/ சார்பு நீதிபதி M.பீரித்தா, M.L.,  தலைமை தாங்கினார். திருவைகுண்டம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் உரிமையியல் நீதிபதி  முத்துலெட்சுமி முன்னிலை வகித்தார். மேற்படி விழிப்புணர்வு முகாமில் கிராம உதய தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன், திருவைகுண்டம் தாலுகா தொழிலாளர் நல ஆய்வாளர் சங்கரகோமதி,   தூத்துக்குடி மாவட்ட கிராம உதய தொண்டு நிறுவன பணியாளர்கள், 250 க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். மேற்படி முக...

தூத்துக்குடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நெல் சேமிப்பு புதிய கட்டிட பூமி பூஜை அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு.

ஷ்யாம் நீயூஸ் 24.08.2022  தூத்துக்குடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நெல் சேமிப்பு புதிய கட்டிட பூமி பூஜை அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு       தூத்துக்குடி மீளவிட்டானில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நான்கு மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு களம் 3 கோடியே 90 லட்சம் மதிப்பில் அமைக்கும் பணியை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூக நல மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டினார்.     விழாவில் மதுரை கோட்ட செயற்பொறியாளர் கே.ஆர்.முருகன், உதவி செயற்பொறியாளர் கே.மயில்வாகணன், உதவி செயற்பொறியாளர் கே.கவியரசன், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முத்துலட்சுமி, தரக்கட்டுப்பாடு ஆய்வாளர் பொன்னுச்சாமி, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், சிவில் சப்ளை தாசில்தார் ஜஸ்டிஸ், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், கவுன்சிலர் இசக்கிராஜா, வட்ட செயலாளர் பொன்பெருமாள், அவைத்தலைவர் செல்வம், வட்ட பிரதிநிதி பாஸ்கர், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி அல்பர்ட் மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாப்பிள்ளையூரணி பகுதியில் தூய்மை பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

 ஷ்யாம் நீயூஸ் 23.08.2022 மாப்பிள்ளையூரணி பகுதியில் தூய்மை பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.     தூத்துக்குடி மத்திய அரசு இந்தியா முழுவதும் தூய்மை பாரதம் திட்டத்தை தொடங்கி கிராமங்கள் முதல் மாநகரம் வரை அனைத்து பகுதிகளும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று திட்டத்தை தொடங்கி வைத்து நடைபெற்று வருகின்றன. தமிழக அரசும் இதே போல் கிராம ஊராட்சி திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியான ராஜபாளையம் தாளமுத்துநகர் மாதாநகர் வடக்கு சோட்டையன் தோப்பு ஆகிய பகுதிகளில் 2 கிலோ மீட்டர் தூரம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் மூலம் தூய்மை பணியை ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.       நிகழ்ச்சியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கபாண்டி, பெலிக்ஸ்,  மாப்பிள்ளையூரணி ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், மற்றும் கௌதம், பல்வேறு தூய்மை பணியாளர்...

அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி வழிகாட்டுதலின் படி 2024ல் தேர்தலில் பணியாற்றுவோம். என திமுக புதிய நிர்வாகிகள் முடிவு

 ஷ்யாம் நீயூஸ் 23.08.2022 அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி வழிகாட்டுதலின் படி 2024ல் தேர்தலில் பணியாற்றுவோம். என திமுக புதிய நிர்வாகிகள் முடிவு தூத்துக்குடி 15வது திமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட மாநகர திமுக புதிய நிர்வாகிகள் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிமுகப்படுத்தி அனைவரையும் கனிமொழி எம்.பி வாழ்த்தி பேசினார். இந்நிலையில் 44வது வார்டு திமுக புதிய நிர்வாகிகள் கூட்டம் அவைத்தலைவர் ஆறுமுககிளி தலைமை வகித்தார். பிரையண்ட்நகர் பகுதி திமுக செயலாளரும் நகர அமைப்பு குழு தலைவருமான ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு கூறுகையில் வரும் 2024ல் பாரளுமன்ற தேர்தலில் அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழிகாட்டுதலின் படி பிரையண்ட்நகர் பகுதி திமுகவிற்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் அதிகமான வாக்குகளை பெற்றுக் கொடுத்து நமது ஒற்றுமையை காட்டுவதற்கு களப்பணியாற்ற வேண்டும் என்றார். வட்டச்செயலாளர் சுப்பையா, வட்டப்பிரதிநிதிகள் மணி, வெற்றிராஜன், சுடலை...

நிலத்தரகர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும் மாநில தலைவர் விருகை கண்ணன் கோரிக்கை

 ஷ்யாம் நீயூஸ் 23.08.2022 நிலத்தரகர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும் மாநில தலைவர் விருகை கண்ணன் கோரிக்கை    தூத்துக்குடி தேசிய ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ், நிலத்தரகர்கள் நலச்சங்கத்தின் 15ம் ஆண்டு விழா மாநில, மாவட்ட தொகுதி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இணைந்த முப்பெரும் விழா தூத்துக்குடி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு முத்துராமன் தலைமை வகித்தார். சேகர் முன்னிலை வகித்தார். சங்கர் வரவேற்புரையாற்றினார். மாநில தலைவர் விருகை கண்ணன் கூறுகையில் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் உள்ளது. ஆனால் நிலத்தரகர்களுக்கு எந்தவித அங்கீகாரமும் இல்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் அனைத்து தரப்பினருக்கு வீடு நிலங்கள் வாங்கி கொடுப்பது என்பது நிலத்தரகர்கள் தான். தற்போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தி இருக்கிறோம் நல்ல முடிவை நிச்சயமாக அவர் தருவார். எந்தெந்த பகுதிகளில் கைடு லைன் வேல்யூ அதிகமாக உள்ளதோ அதனை குறைக்க வேண்டும். நிலத்தரகர்கள் வாழ்வாதாரம் மேம்பாடு அடைய முதல்வர்...

படுகர் இன மக்களை தனி பழங்குடியினர் சமூகமாக கணக்கிட வேண்டும் ஒன்றிய அரசுக்கு ஆ.இராசா கடிதம் எழுதியுள்ளார்.

ஷ்யாம் நீயூஸ் 22.08.2022 படுகர் இன மக்களை தனி பழங்குடியினர் சமூகமாக கணக்கிட வேண்டும் ஒன்றிய அரசுக்கு  ஆ.இராசா கடிதம் எழுதியுள்ளார். நீலகிரி மலை கிராமங்களில் வசிக்கும் படுகர் இன மக்களை தனி பழங்குடியினர் சமூகமாக கணக்கிட வேண்டும் ஒன்றிய அரசுக்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா கடிதம்  எழுதியுள்ளார். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.இராசா ஒன்றிய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் . எனது தொகுதியில் இருந்து நீலகிரியில் உள்ள படுகர் சமூகத்தின் குறிப்பை இணைக்கிறேன், படுகர்களை தனி பழங்குடி சமூகமாக கணக்கிட வேண்டும் என்றும், முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தவறாக நடந்ததைப் போல அவர்களை கன்னடர்கள் என்று வகைப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் படுக மொழியை தனி மொழியாகவும், பேச்சு மொழியாகவும் கணக்கிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளின் மேற்கண்ட உண்மையான மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு தயவுசெய்து அறிவுறுத்தல்களை வழங்குமாறு கழக து...

சென்னை எத்திராஜ் கல்லூரி துவக்கவிழா கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு உரையாற்றினார்.

ஷ்யாம் நீயூஸ் 22.08.2022  சென்னை எத்திராஜ் கல்லூரி துவக்கவிழா கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு உரையாற்றினார். சென்னை எத்திராஜ் கல்லூரியில் இந்த ஆண்டிற்கான மாணவர் பேரவையின் துவக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பெண்கள் ஒரு இடத்திற்கு வருவது பொது இடத்தில் தங்களுக்கான இடத்தை பெறுவது ஒரு போராட்டமாக உள்ளது. நம்மை சுற்றி எது நடந்தாலும் அதில் அரசியல் உள்ளது என்றும் அரசியல் தெரிந்து கொள்ளுங்கள் அரசியல் பேசுங்கள் என்று சென்னை எத்திராஜ் கல்லூரி விழாவில் எம்பி கனிமொழி கூறியுள்ளார். அரசியலில் 50% பெண்களை கூடிய விரைவில் அடைவோம் என்றும் நலத்திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் வித்தியாசம் உள்ளது. அடித்தட்டு மக்களை முன்னேற்றத் தான் நலத்திட்டங்கள் உள்ளது என்று எம்பி கனிமொழி உரையாற்றியுள்ளார்.

தூத்துக்குடி மக்கள் சமூக விரோதிகள் அல்ல! மனித உரிமை மீறலை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு வழக்கறிஞர் அதிசயகுமார் கோரிக்கை.

 ஷ்யாம் நீயூஸ் 22.08.20  தூத்துக்குடி மக்கள் சமூக விரோதிகள் அல்ல! மனித உரிமை மீறலை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு வழக்கறிஞர் அதிசயகுமார் கோரிக்கை வைத்துள்ளர். தூத்துக்குடி வழக்கறிஞர் அதிசயகுமார் மாவட்ட கலெக்டர், காவல் கண்காணிப்பாளர், தென்மண்டல காவல் துறை தலைவர், துணைத்தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது      தூத்துக்குடி மாவட்டமானது 20-10-1986ம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு வாரமும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட கலெக்டரை சந்தித்து கொடுத்து வருவது வழக்கமாக இருந்து வந்தது. இந்த மாவட்டத்தின் முதல் குடிமகனான மாவட்ட கலெக்டரை சந்திப்பதற்கு மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருந்து வந்தது.       கடந்த 22-05-2018ல் மாவட்ட கலெக்டரை சந்திக்க வந்த மக்கள் மீது காவல்துறையினர் குருவிகளை சுடுவது போல சுட்டும், அடித்தும் 16 நபர்களை கொலை செய்தார்கள். அதன் பின்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பாதுகாப்பு என்ற பெயரில் காவல்துறையினர் சட்டத...

தூத்துக்குடியில் கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்றது.

ஷ்யாம் நீயூஸ் 22.08.2022  தூத்துக்குடியில் கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்றது. தூத்துக்குடி இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தூத்துக்குடி மேலூர் பங்காள தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று பின்னர் கோவில் வந்தடைந்து சிறப்பு பூஜையுடன் கோலாட்டம், நடைபெற்றது. பின்னர் கிருஷ்ணர் வேடமிட்டு ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வந்து பின்னர் கோவில் சென்றடைந்தது. முக்கிய நிகழ்வான உறியடி நிகழ்ச்சி அப்பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பக்தர்கள் திராளானோர் கலந்து கொண்டு உறியடி நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். பின்னர் பூஜையுடன் கிருஷ்ண ஜெயந்தி பூஜை நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ண கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக சரவணக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

 ஷ்யாம் நீயூஸ் 21.08.2022 தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக சரவணக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். தூத்துக்குடி திராவிட முன்னேற்றக்கழக 15வது உட்கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் கிளைச்செயலாளர்கள் முதல் ஒன்றிய செயலாளர்கள் வரை நடைபெற்று முடிந்துள்ளது. அதில் தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் தேர்வு செய்யப்பட்டு நிர்வாகிகள் அறிவிப்பு தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கிழக்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட சரவணக்குமாருக்கு துணைத்தலைவர் தமிழ்செல்வி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலி;க்ஸ், ஸ்டாலின், வசந்தகுமாரி, தங்கபாண்டி, மகேஸ்வரி, ஜுனத்பீபி, பாலம்மாள், சக்திவேல், பாண்டியம்மாள், கதிர்வேல், உமாமகேஸ்வரி, ஜேசுராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் பாலன், தொம்மை சேவியர், கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார்...

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கை - கருத்து செல்ல விரும்பவில்லை தூத்துக்குடியில் ஆளுநர் பேட்டி.

 ஷ்யாம் நீயூஸ் 20.08.2022 ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கை - கருத்து செல்ல விரும்பவில்லை தூத்துக்குடியில் ஆளுநர் பேட்டி.   ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கை -  நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. நான் ஆளுநராக வந்திருக்கிறேன். அரசியல்வாதியாக வரவில்லை தூத்துக்குடியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேட்டியளித்தார். நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் ஒண்டிவீரன் தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை ஆகியோர் தூத்துக்குடி விமான நிலையம் வந்தனர். காவல்துறையினரின் அனிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட பின்னர் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை விமான நிலையத்தில் கூடியிருந்த பாஜக தொண்டர்களை நேரில் சந்தித்து அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டா.ர்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சுதந்திரதினம் அமிர்த பெருவிழா ஒரு வருடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்னும் கொண்டாடப்படுகிறது. இது போன்று விழாக்கள் மூலமாகத்தான் வரலாற்றில் இருந்து அறியப்படாமல் உள்ள ஒதுக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் முழுமையான சரித்திரம்...

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 78வது பிறந்த நாள் விழா தூத்துக்குடி காங் சார்பில் கொண்டாடப்பட்டது.

 ஷ்யாம் நீயூஸ் 20.08.2022 முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 78வது பிறந்த நாள் விழா தூத்துக்குடி காங் சார்பில் கொண்டாடப்பட்டது. முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட அலுவலகத்தின் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது திரு உருவ படத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சி எஸ் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் செந்தூர்பாண்டியன்,ராஜன்,மாநகர் மாவட்ட துணை தலைவர்கள் A.D பிரபாகரன்,அருணாசலம், தனபால்ராஜ்,ஜெபராஜ்,குமாரமுருகேசன் மாவட்ட செயலாளர்கள் கோபால், கதிர்வேல்,காமாட்சிதனபால்,அந்தோணிகுரூஸ்,சின்னகாளை,மைக்கேல்,வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல்,சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன்,மாநில மகிளா காங்கிரஸ் துணை தலைவி கனியம்மாள், கலை பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ்,அம்மாகனி வெங்கடேசன்,தனுஷ்,மகாலிங்கம்,சண்முகசுந்தரம்,நடேஷ்குமார்,தாமஸ்,பொன்ராஜ், பெத்துரிதிஷ்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் சுதந்திரபோராட்ட வீரர் ஓண்டிவீரன் நினைவு நாளையொட்டி கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை செய்தனர்.

 ஷ்யாம் நீயூஸ் 20.08.2022 தூத்துக்குடியில் சுதந்திரபோராட்ட வீரர் ஓண்டிவீரன் நினைவு நாளையொட்டி கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை செய்தனர்.   தூத்துக்குடி சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் 251வது  நினைவு நாளையொட்டி  வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் ரோட்டிலுள்ள கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்ட ஓண்டிவீரன் படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனிமொழி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன்,  மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் கஸ்தூரிதங்கம், உமாதேவி, மரியதாஸ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அருனாதேவி, அந்தோணிகண்ணன், ராமர்,...

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் போல் பலர் உருவாக வேண்டும் .கனிமொழி எம்பி பாராட்டு!

 ஷ்யாம் நீயூஸ் 20.08.2022 தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் போல் பலர் உருவாக வேண்டும் .கனிமொழி எம்பி பாராட்டு! தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் போல் பலர் உருவாக வேண்டும் என கனிமொழி எம்.பி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார்.      தூத்துக்குடி மாநகர திமுக புதிய நிர்வாகிகள் அறிமுககூட்டம் எட்டையாபுரம் ரோடு கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ் தலைமை வகித்தார். புதிய நிர்வாகிகளை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிமுகம் செய்து வைத்தார். மாநில மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி தொகுதி எம்.பியுமான கனிமொழி பேசுகையில் தமிழகத்தில் மாவட்ட செயலாளர்களாக பலர் இருந்தாலும் பெண் மாவட்ட செயலாளராக அமைச்சர் கீதாஜீவன் மட்டும் பணியாற்றி வருகிறார். இவரை போல் பணியாற்றுவதற்கு 10 அல்லது 20 பெண்கள் வரவேண்டும். திமுக பல்வேறு சோதனைகள் மிசா சட்டம் என எல்லாவற்றையும் கடந்து வந்த கட்சி. 13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தோம் நமது தலைவர் கலைஞர் செய்த பணிகள் ஏராளம் திமுக தொண்டர்கள...

தூத்துக்குடி மாநகராட்சி மயானம் பகுதியிலுள்ள முட்புதர்கள் அகற்றும் பணி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

 ஷ்யாம் நீயூஸ் 19.08.2022 தூத்துக்குடி மாநகராட்சி மயானம் பகுதியிலுள்ள முட்புதர்கள் அகற்றும் பணி   மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.  தூத்துக்குடி தமிழ்வழிச் சாலையில் உள்ள மயானம் பகுதியில் அனைத்து தரப்பினருக்கும் தனித்தனியாக மயானம் இருந்து வருகிறது. அப்பகுதியில் கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற பல்வேறு வகையான செடி கொடிகள் படர்ந்த நிலையில் கிடந்தன. அதில் பல்வேறு மயான நினைவு இடங்கள் பலருக்கும் தெரியாத வகையில் இருந்த அனைத்து செடி கொடி வகைகளையும் அகற்றி ஏற்கனவே அமைக்கப்பட்ட மின் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் எரியப்படாத நிலையில் இருந்து வருகிறது சரி செய்து கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திற்கு மேயருக்கும் பல்வேறு அரசியல் கட்சிகள் பொதுநல அமைப்புகள் சார்பில் கோரிக்கை வரப்பெற்றதையடுத்து பொது மயானத்தில் இரண்டு ஜேசிபி மூலம் கருவேல மரங்கள் பல்வேறு செடிகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தனர். இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வரும் அனைத்து மயானத்தையும் முழுமைய...

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

 ஷ்யாம் நீயூஸ் 18.08.2022 தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயற்குழு கூட்டம் சி.எஸ்.ஐ.மாடரேட்டரின் ஆணையாளர் பிஷப் தீமோத்தேயு தலைமையில் நடைபெற்றது.  நிகழ்வில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலர் டி. எஸ். எப். கிப்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், உதவி தலைவர் தமிழ்செல்வன், குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக், மேல்நிலைப்பள்ளிகள் மேலாளர் பிரேம்குமார், ஆரம்பப்பள்ளி மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், செயற்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார் ரூபன், வட்டக் கோவில் ஜான்சன், சாயர்புரம் ராஜேஷ் ரவிச்சந்தர் உள்ளிட்ட திருமண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டி சி95 தூத்துக்குடி மாவட்டம் மகாத்மா காந்தி தொழிலாளிகள் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

 ஷ்யாம் நீயூஸ் 16.08.2022 டி சி95 தூத்துக்குடி மாவட்டம் மகாத்மா காந்தி தொழிலாளிகள் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது டி சி95 தூத்துக்குடி மாவட்டம் மகாத்மா காந்தி தொழிலாளிகள் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது தலைவர் கணேசன் அவர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார் இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் R.சுந்தரவேல் நீலமேகம்,பாலமுருகன் ,மகேஸ்வரன்,பொன்செல்வி,கற்பகம் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

டி சி95 தூத்துக்குடி மாவட்டம் மகாத்மா காந்தி தொழிலாளிகள் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

 ஷ்யாம் நீயூஸ் 16.08.2022 டி சி95 தூத்துக்குடி மாவட்டம் மகாத்மா காந்தி தொழிலாளிகள் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடபட்டது.. டி சி95 தூத்துக்குடி மாவட்டம் மகாத்மா காந்தி தொழிலாளிகள் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடபட்டது. தலைவர் கணேசன் அவர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார் இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் R.சுந்தரவேல் நீலமேகம்,

மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் கொண்டுவரவேண்டும் அமைச்சர் கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை

 மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் கொண்டுவரவேண்டும் அமைச்சர் கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது கிராமங்கள் தான் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பாரத பிரதமர் தமிழகம் முதலமைச்சர் ஆகியோர் கூறி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் பல்வேறு கிராமங்கள் அடிப்படை வசதிகள் முழுமை அடையாமல் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியா வல்லரசு ஆகுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று சமீபத்தில் கூட பிரதமர் நரேந்திர மோடி ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இந்த காலக்கட்டத்தில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று கடந்த காலத்திலும் திகழ வேண்டும் என்று இந்த காலத்திலும் இரு முதலமைச்சர்களும் பேசியுள்ளனர். இது எந்த அளவிற்கு செயல்பாடுகளில் உள்ளன என்று கிராமவளர்ச்சிக்கு என்று இருக்கும் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டார்களா என்றால் கேள்விக்குறி தான். ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு உத்தரவு பிறப்பிப்பதும் அதை நடைமுறைப்படுத்த வேண்டிய இரண்டாம் கட்ட அதி...

75வது ஆண்டு சுதந்திர தின விழா. தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசிய கொடி மற்றும் காங்கிரஸ் கொடியினை கையில் ஏந்தி பாதயாத்திரை நடைபெற்றது.

 ஷ்யாம் நீயூஸ் 16.08.2022  75வது ஆண்டு சுதந்திர தின விழா. தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசிய கொடி மற்றும் காங்கிரஸ் கொடியினை கையில் ஏந்தி பாதயாத்திரை நடைபெற்றது.  தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்  கே.எஸ் அழகிரி அவர்கள் அறிவித்த படி 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேசிய தோழர்கள் பாதயாத்திரை மேற்க்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பேரில்.   75வது ஆண்டு சுதந்திர தின  விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை வகித்தார். 5க்கும் மேற்பட்ட அலங்கார வண்டியில் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளின் வரலாற்று மற்றும்  காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நாட்டிற்காக பாடுபட்ட வரலாறு பொருத்தபட்டு வாகனங்களில் தேசபக்தி பாடல்கள் ஒளிபரப்பபட்டு 200க்கும் மேற்பட்ட தேசியத் தோழர்கள் தேசிய கொடி மற்றும் காங்கிரஸ் கொடியினை கையில் ஏந்தி, பீச் ரோட்டில் உள்ள அன்னை இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் மாநில காங்கிரஸ் துணை தலைவர் A...

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள குறைகளை தீர்க்க 4 கோடியே 88லட்சம் ஒப்புதல் அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை

 ஷ்யாம் நீயூஸ் 15.08.2022 மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள குறைகளை தீர்க்க 4 கோடியே 88லட்சம் ஒப்புதல் அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை  மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள குறைகளை தீர்க்க 4 கோடியே 88லட்சம் ஒப்புதல் அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளேன் கிராமசபை கூட்டததில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தகவல் தெரிவித்தார் தூத்துக்குடி 75வது சுதந்திரதின அமுத பெருவிழாவை யொட்டி மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராமசபை கூட்டம் மாதாநகர் மாதா கோவில் முன்புள்ள பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.      இதில் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் வக்கீல் மாடசாமி பேசுகையில்  இந்த பகுதியில் இருக்கும் காவலர் குடியிருப்புக்கு வழங்கப்படும் மின்சார கட்டணத்தை செலுத்த கூடாது கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். அந்த பகுதியில் உள்ள 5 சாலைகள் ஒன்றியம் மூலம் போடப்பட்டுள்ளது. அதில் சில தவறுகளும் நடந்துள்ளன. அதை முறைப்படுத்த வேண்டும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக தார்சலை அமைக்க கிராமசபை கூட்டத்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 ஆயிரம் பனைமர விதைகள் நடவுத்திட்டம் துவக்கவிழா*

ஷ்யாம் நீயூஸ் 14.08.2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 ஆயிரம் பனைமர விதைகள் நடவுத்திட்டம் துவக்கவிழா தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தூத்துக்குடி காமராஜ் கல்லூரி இணைந்து காமராஜ் கல்லூரியில் மாணவ மாணவியருக்கு பனைமரங்கள் குறித்தும் பனைபொருட்களின் பயன்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் டாக்டர். பூங்கொடி தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தாவரவியல் பேராசிரியர் டாக்டர்.குமரேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார். காமராஜ் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் நாகராஜன் பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் ஜேசுதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு பொதுச்செயலாளர்  எஸ்.தனலெட்சுமி நோக்கவுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் எம்.ஏ.தாமோதரன் கலந்து கொண்டு 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எழுபத்தைந்தாயிரம் பனை விதை நடவுத் திட்டத்தை துவக்கி வைத்து  பேசியதாவது : தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் மரம் பனைமர...

மறைந்த எழுத்தாளர் கி.ரா வின் மணிமண்டபம் அமைக்கும் பணியை மேற்பார்வையிட்டார் கனிமொழி. க.ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும்

ஷ்யாம் நீயூஸ் 14.08.2022 மறைந்த எழுத்தாளர் கி.ரா வின் மணிமண்டபம் அமைக்கும் பணியை மேற்பார்வையிட்டார் கனிமொழி. கி.ரா என சுருக்கமாக அழைக்கப்படும் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணுக்கு  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேற்று நடந்த நிகழ்வில்(13.08.22)  சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய திமுக செயலாளர் சரணவக்குமார் புதிய நிர்வாகிகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர்.

 ஷ்யாம் நீயூஸ் 14.08.2022 தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய திமுக செயலாளர் சரணவக்குமார் புதிய நிர்வாகிகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர். தூத்துக்குடி திமுக 15வது கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்பிற்கு தேர்தல் நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய புதிய நிர்வாகிகள் பட்டியலை தலைமை கழகம் அறிவித்ததை புதிய கிழக்கு ஒன்றிய அவைத்தலைவராக ஜோதிடர் முருகன், செயலாளராக மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் துணைச்செயலாளர்களாக கணேசன் ராமசந்திரன் வசந்தகுமாரி பொருளாளராக மாரியப்பன், மாவட்ட பிரதிநிதிகளாக தர்மலிங்கம், சப்பானிமுத்து, சிவக்குமார், ஆகியோரை அறிவித்திருந்தனர். இதனையடுத்து தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கணேஷ்நகரில் உள்ள அலுவலக்த்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து புதிய நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர்.    அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களிட...

தூத்துக்குடி கின்ஸ் அகாடமி மாணவ மாணவிகளுக்கு மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ பாராட்டு

 ஷ்யாம் நீயூஸ் 14.08.2022 தூத்துக்குடி கின்ஸ் அகாடமி மாணவ மாணவிகளுக்கு மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ பாராட்டு தூத்துக்குடி கின்ஸ் அகாடமி என்ற பெயரில் அரசுத்துறை சார்ந்த பணிகளில் சேர்வதற்கு பல்வேறு வகையான இலவச கல்வியை பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் வழிகாட்டுதலின்படி போல்பேட்டையில் உள்ள கின்ஸ் அகாடமி நிறுவனத்தலைவர் பேச்சிமுத்து அனைவருக்கும் இலவச கல்வியை வழங்குவது மட்டுமின்றி அவர்களுக்கு தேவையான பல உதவிகளையும் எவ்வித எதிர்பார்ப்பு இன்றி நாட்டின் நலன் மக்கள் பலனடைய வேண்டும். என்ற தொலைநோக்கு பார்வையோடு பல ஆண்டுகளாக செய்து வருகிறார். தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்ற கின்ஸ் அகாடமி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கின்ஸ் அகாடமி மாணவ மாணவிகள் சுவர்களில் பல்வேறு வகையான சித்திரங்களை வரைந்தனர். அந்த மாணவ மாணவிகளை ஆணையர் சாருஸ்ரீ நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தது மட்டுமி;ன்றி கின்ஸ் அகாடமி மென்மேலும் பல சாதனைகள் புரியவேண்டும் என்று வாழ்த்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏ.பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் “75வது சுதந்திர தினவிழா" கொண்டாடப்பட்டது.

ஷ்யாம் நீயூஸ் 14.08.2022  தூத்துக்குடி மாவட்டத்தில் ஏ.பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் “75வது சுதந்திர தினவிழா" கொண்டாடப்பட்டது. இந்திய மக்களின் உணர்வுகளில் முதன்மையானது ‘ஒற்றுமை உணர்வு’ அதை பறைசாற்றும் விதமாக அன்புப் பரிமாற்றமான ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் 12.08.2022 அன்று 75வது சுதந்திர தினவிழா 'உருவாக்கம் 75' சிறப்பாக நடைபெற்றது.  75வது சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும் நோக்கில் 'உருவாக்கம் 75' ஆனது கல்லூரியில் பயிலும் 750 மாணவியர்களைக் கொண்டு நடத்தப்பட்டது, மற்றும் 75 வினாடி கைதட்டல்கள், 75 வினாடி சுதந்திர உணர்ச்சியைத் தூண்டும் பாடல், 75 வினாடி தியான நிலை மற்றும் 75 எண்ணிக்கையுள்ள தேசிய கொடிகளின் அலங்கரிப்பு போன்ற நிகழ்வுகள் சிறப்பான விதத்தில் உருவாக்கப்பட்டது. 75 வகையான பாரம்பரியமிக்க உணவு வகைகள் முனைவர் வனிதா மற்றும் முனைவர் ஜோதிலெட்சுமி  மேற்பார்வையில் மாணவியர்களால் தயாரிக்கப்பட்டது. 75வது சுதந்திர தினத்தைச் சிறப்பிக்கும் விதத்தில் மாணவியர்களின் பேரணி கல்லூரி முதல்வர் முனைவர் பால ஷண்முக தேவியால் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை வேதியியல் த...

சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15ஆம் தேதி மது விற்க தடை:ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு!

ஷ்யாம் நியூஸ்   12.08.2022  தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15ஆம் தேதி மதுபானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.08.2022 அன்றைய தினம் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள், 2003 பிரிவு 12 துணை விதி (1)-இன் படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் எப்.எல்.2, எப்.எல்.3 உரிமஸ்தலங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு தமிழகம் வழிகாட்டியாக திகழச் செய்தவர் கலைஞர் நலத்திட்ட உதவி வழங்கி அமைச்சர் தாமோ அன்பரசன் புகழாரம்

 ஷ்யாம் நீயூஸ் 12.08.202 இந்தியாவிற்கு தமிழகம் வழிகாட்டியாக திகழச் செய்தவர் கலைஞர் நலத்திட்ட உதவி வழங்கி அமைச்சர் தாமோ அன்பரசன் புகழாரம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி கலைஞர் அரங்கில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன்பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.       தையல் இயந்திரம் 33, சைக்கிள் 5, கிரைண்டர் 2, இஸ்திரி பெட்டி 12, ஊனமுற்றோர் மூன்று சக்கரம் சைக்கிள் 3, போக்குவரத்து கழகத்திற்கு வெல்டிங் மிஷின் ஏர் பிரஷர் கன் ஆகியவற்றை வழங்கி     காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை நகர்புற வாழ்விட மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தாமோ அன்பரசன், நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில் மறைந்தாலும் நம் இதயமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் முத்தமிழ்...