முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி சந்திப்பு

ஷ்யாம் நீயூஸ்

23.04.2022

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி சந்திப்பு.

தூத்துக்குடி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் திமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றது. மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்று பணி செய்து வருகிறார். இந்நிலையில் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாணிய கோரிக்கை நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி பதிலுக்கு பதிலுரை வழங்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். திமுக பொதுக்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி முதலைமைச்சர் முகாம் அலுவலகத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மற்றும் சுதன்கீலர் உடனிருந்தனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் தாமதமாக நடைபெற்று வந்தன. உள்ளாட்சி தேர்தலுக்கு பின் தாமதமாக நடைபெற்ற பணிகளை மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற பின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவாக பணிகள் செய்து முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களிடம் தெரிவித்துள்ளார். மாநகர் முழுவதும் பசுமையான நகரமாக இருப்பதற்கு எல்லா பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. பிரதான சாலைகள் சிமென்ட் சாலைகளாக அமைக்கப்பட்டு சில இடங்களில் பேவர்பிளாக் பதிக்கப்பட்டுள்ளது. 6 மாத காலத்திற்குள் சாலைகள் பணி முழுமையாக முடிக்கப்பட்டு தூய்மையான மாநகரமாக விளங்குவதற்கான பணிகளை வேகப்படுத்தி வருகின்றன. இதை ஒழுங்குப்படுத்தும் விதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை கண்டறியப்பட்டு மாநகராட்சி மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் புதிய தார்சாலை குறிப்பாக எஸ்எஸ் மாணிக்கபுரம், கீழ ரெங்கநாதபுரம், அண்ணாநகர், பகுதிகளில் போடப்பட்டுள்ளது. இது போல் போர்கால அடிப்படையில் பணிகள் மக்கள் நலன் கருதி விரைவாக நடைபெற்று வருகின்றன ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெற்று வரும் பணிகள் முடிந்தவுடன் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். விரைவில் அண்ணாநகர் 12வது தெரு பகுதியை திறந்துவிட்டால் புதிய பேருந்துநிலையம் 4ம் கேட் பகுதி வழியாக வரும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம், பி அண்டி காலணி, மடத்தூர், வரை செல்லலாம். அதற்கேற்றாற் போல் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியின் அதிரடி நடவடிக்கையால் ஆமை வேகத்தில் நடைபெற்ற அனைத்து பணிகளும் அசுர வேகத்தில் நடைபெறுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...