முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய தூத்துக்குடி பர்னிச்சர் பூங்காவில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் கிராமசபை கூட்டத்தில் முடிவு!

 ஷ்யாம் நீயூஸ்

24.04.2023

முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய தூத்துக்குடி பர்னிச்சர் பூங்காவில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

 தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் இடத்தில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி கூட்டம் தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் திருநங்கைகள் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கீழ அழகாபுரி தலைவர் வக்கீல் மாடசாமி, உள்பட பலர் ஊராட்சி வளர்ச்சிகள் குறித்து கோரிக்கைகள் எழுப்பினார்கள். அதற்கு கிராமநிர்வாக அலுவலர் விக்னேஷ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, வேளாண்மை துறை அதிகாரி மீனாட்சி, ஆகியோர் பதிலளித்தனர்.

கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய பர்னிச்சர் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள 59 கிராம மக்களுக்கும் முன் உரிமை அளித்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டும். வறுமை இல்லாத ஊராட்சி என்பது யாரும் மீண்டும் வறுமை நிலைக்கு சரிக்கி விடாத அளவிற்கு சமூக பாதுகாப்பு கொண்டிருக்க வேண்டும். அனைவருக்கும் மேல்மட்ட வாழ்க்கை சூழல் வளர்ச்சி மற்றும் செழிப்பு என்ற நிலையை ஏற்படுத்தி கிராம ஊராட்சியாக அமைத்தல் அனைத்து வயதினரும் உடல் நலத்துடன் நல வாழ்வு வாழ தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுதல் நிலைத்த வளர்ச்சியை ஏற்படுத்தி அதன் பயன்களை பெரும் வகையில் இடை வெளிகளை குறித்து தரமான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தை தயாரித்து அதனை திறம்பட செயல்படுத்துவது நிலைத்த வளர்ச்சியை அடைவதில் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிக பங்கு உள்ளது. அவர்களை முழு வேகத்துடன் முடிவெடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்தி அவர்கள் வாழ்வில் மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தும் பிரச்சனைகளை குறித்து நடவடிக்கை எடுத்தல். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் ஊரகம் 2018 19ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆவாஸ் பிளஸ் கணக்கெடுப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள தகுதியுள்ள பயனாளிகளின் பட்டியல்களை கிராமசபையில் வைத்து ஓப்புதல் பெற வேண்டும். 2021 22ம் ஆண்டிற்கு 289887 வீடுகள் மத்திய அரசால் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் அந்த அந்த மாவட்டத்திற்கு ஊராட்சி வாரியாக மத்திய அரசால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில் நாளது வரை அனுமதி ஆணை வழங்கப்பட்ட பயனாளிகளில் பட்டியலையும் மீதம் வழங்கப்பட வேண்டிய பட்டியலையும் கிராமசபையில் வைத்து ஓப்புதல் பெறுவது என இயற்கை வழங்கல் மற்றும் பசுமையை நம்முடைய எதிர்கால சந்ததிகளுக்கு கொடுக்கும் வகையில் பாதுகாக்கவும் மாற்று எரிசக்தியை பயன்படுத்துதல் தூய்மையை கடைபிடித்தல் மற்றும் சுற்றுசூழலை பாதுகாத்து பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல் உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக நிலைத்த வளர்ச்சிக்கு மையமாக இருப்பது மக்களே என்பதை நாங்கள் உணர்கிறோம். மக்கள் அனைவரும் ஓருங்கிணைந்து செயல்பட்டு எங்களுக்கு பயன்தரக்கூடிய அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியையும சமூக மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பை மேம்படுத்துவோம். உள்ளிட்ட ஏழு உறுதிமொழிகளை அனைவரும் எடுத்துக்கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசுகையில் தமிழகத்தில் மிகப்பெரிய ஊராட்சியாக உள்ள மாப்பிள்ளையூரணியை தமிழகத்தில் முன்மாதிரி ஊராட்சியாக விளங்கிட அனைவரும் ஓத்துழைப்பு அளிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார். கிராமசபை கூட்டத்தில் மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, மகேஸ்வரி காமராஜ், தங்கமாரிமுத்து, மற்றும் கௌதம், சுதாகர், சப் இன்ஸ்பெக்டர்கள் மரிய இருதயம், பால்மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.  ஊராட்சி செயலர் ஜெயக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...