முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பாராட்டு

 ஷ்யாம் நியூஸ்

16.04.2022

தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பாராட்டு

தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கமத்திற்க உட்பட்ட அனைத்து கிளை சங்கம் சார்பில் மணிநகரில் உள்ள சங்கத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு தலைவர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜலிங்கம் வரவேற்புரையாற்றினார்.

பாராட்டு விழாவில் திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி பேசுகையில்

 தமிழகத்தில் திமுக ஆட்சிதான் தொழில் வளம் பெருகுவதற்கு துணையாக இருக்கும் அரசு. கடந்த மாதம் தூத்துக்குடிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச பர்னிச்சர் பூங்கா அமைவதற்கு அடிக்கல் நாட்டி பல்வேறு புதிய தொழில்கள் தொடங்குவதற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

அதே போல் திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு தான் தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கிடவும், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க புதிய தொழில் கொள்கைகள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வெளிநாடு வாழ் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்குரிய மாநிலமாக உருவாகி வருகிறது. அதற்கும் அரசு விதிமுறைகளின் படி உதவிகள் செய்கின்றன. நாட்டின் வளர்ச்சி தொழில் வளம் பெருகும் போது தான் எல்லா நன்மைகளும் கிடைக்கும். அதே போல் தூத்துக்குடி மாநகரில் அனைத்து கட்டமைப்புகளும் உள்ளன.


      புதிய தொழில்கள் தொடங்குவதற்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்கும்; மாசு இல்லாத தொழிற்சாலைகளையும் தொழில் நிறுவனங்களையும் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மாநகர பகுதி முழுவதும் பசுமையான மாநகரமாக உருவாக்க எல்லா வகையில் வளர்ச்சியடைவதற்கும் சில ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்பதற்கும் நீங்களும் ஓத்துழைப்பு தரவேண்டும் வியாபாரிகளுக்கு தொழில் செய்வதற்கான விதிமுறைகள் அதற்கான அரசு சார்ந்த பணிகளை மாநகராட்சி சார்பில் விரைவாக வழங்கி உதவிடுவேன் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு எப்போதும்  வருவேன் என்று பேசினார்.

வியாபாரிகள் சங்கம் சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்தில் ஏற்கனவே இருந்த கடைகாரர்களுக்கு மீண்டும் அவர்களுக்கே கடைகள் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கையை மேயரிடம் வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த புதிதாக தோந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் இசக்கிராஜா, கண்ணன், கந்தசாமி, சரண்யா ராஜ்குமார், ராஜதுரை ஆகியோருக்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

விழாவில் சட்ட ஆலோசகர் வக்கீல் சொக்கலிங்கம், சங்கநிர்வாகிகள் பிஎஸ்கே. மாரியப்பன், ராஜா, செந்தில் ஆறுமுகம், பாலமுருகன், உள்பட அனைத்து வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...