முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க.தொடக்கப்பள்ளி ஆண்டு விழா வெகுசிறப்பாக நடந்தது.

 ஷ்யாம் நீயூஸ்

25.04.2022

தூத்துக்குடி பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க.தொடக்கப்பள்ளி ஆண்டு விழா வெகுசிறப்பாக நடந்தது.

தூத்துக்குடி பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க.தொடக்கப்பள்ளி ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, தூத்துக்குடி டூவிபுரம் சேகர தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் தாளாளர் ஆனந்த் சாமுவேல் ஜாண் தாமஸ் தலைமை வகித்தார். 

தூத்துக்குடி ஊரக வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஜெயபாலன் துரைராஜ் தேவாசீர், ஜெசுராஜன் செல்வக்குமார், கீதா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மேற்பார்வையாளர்(பொறுப்பு) சார்லஸ், ஆசிரியர் பயிற்றுநர் ஜெயா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் வரவேற்றார். ஆசிரியை பெல்சிபாய் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், சண்முகையா எம்.எல்.ஏ., சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

விழாவில், பள்ளி தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் பேசியதாவது, தூத்துக்குடி&நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட இந்த பள்ளியை மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக நாங்கள் நடத்தி வருகிறோம். இதற்கு திருமண்டலத்தினர், பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர்மக்கள் அனைவரும் எங்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளனர்.

பள்ளியில் மாணவர்களின் கல்வி நலனில் மிகுந்த அக்கறை எடுக்கப்பட்டு அதற்கேற்ப சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் அடிப்படைக்கல்வி சிறப்பாக அமைந்து விட்டால் அவர்களின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமைந்திடும் என்ற அடிப்படையில் கல்வி பயிற்சிகள் அளித்து வருகிறோம்.

சிறுவயதிலேயே மாணவ, மாணவியர்கள் கலெக்டராக, ஐ.பி.எஸ் அதிகாரியாக, விஞ்ஞானியாக, எழுத்தாளராக, தலைசிறந்த வல்லுநராக வரவேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் கல்வியோடு பிற பயிற்சிகளை அளிப்பதோடு, சமூகநலன் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்து வருகிறோம். 

எங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துவரும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நாங்கள் மிகுந்த நன்றி கடன்பட்டுள்ளோம் என்பதை தெரிவித்து, உங்களின் அன்பும், ஆதரவும் என்றும் தொடர்ந்திடவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதில், மாநகராட்சி கவுன்சிலர் காந்திமணி, தொழில்அதிபர் ஆறுமுகப்பாண்டியன், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் தனசேகரன், தனசிங், டெய்சிதெபோராள், இம்மானுவேல், சேகர பொருளாளர் தினகரன் ஜெயசிங், பண்டாரம்பட்டி ஊர் தலைவர்கள் குருநாதன், பிரதீப், பெற்றோர் ஆசிரியர் கழக திரவியராஜ், சேகர உறுப்பினர்கள் பொன்ராஜ், கனிஷ்டன், பயர் சூப்பர்வைசர் சுஜின், பண்டாரம்பட்டி ராஜ்குமார், காளீஸ்வரன், வன்னியராஜ், தலைமையாசிரியர்கள் சந்திரா, பியூலாஞானதங்கம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழா முடிவில், பள்ளி மாணவ, மாணவியர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டு கால கொரோனோ ஊரடங்கிற்கு பிறகு முதன்முதலாக பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்களை பள்ளி தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் தலைமையில் ஆசிரியை, ஆசிரியர்கள், ஊர்மக்கள் வீடு வீடாக, வீதி வீதியாக மேள தாளங்கள், வானவேடிக்கை முழங்க சென்று மாணவ, மாணவியர்களை பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தி வரவேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...