முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புன்னைக்காயல் ஊர்மக்கள் சார்பாக  முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

 ஷ்யாம் நீயூஸ்

25.04.2022

புன்னைக்காயல் ஊர்மக்கள் சார்பாக  முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

புன்னைக்காயலில் பிறந்து தஞ்சை மறைமாவட்டக் குருவாகப் பணியாற்றும் அருள்முனைவர் அமுதன் அடிகளின் குருத்துவப் பொன் விழா, புன்னைக்காயல் பங்குத்தந்தை பிராங்கிளின் பர்னாண்டோவின் குருத்துவ வெள்ளி விழா, எழுத்தாளர் நெய்தல் யூ அண்டோ எழுதிய அமுதன் அடிகளின் வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா புன்னைக்காயல் ஊர்மக்கள் சார்பாக, 23.4. 2022 அன்று கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு சிவகங்கை மேனாள் ஆயர் சூசை மாணிக்கம் தலைமை தாங்கினார். 

இரு அருள்பணியாளர்களின் பணிகளை நினைவுகூர்ந்து அருள்பணி பென்சன், அருள்பணி இரவீந்திரன் பர்னாந்து ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

அமுதன் அடிகளின் வாழ்வும் பணியும் நூலை மேதகு ஆயர் சூசைமாணிக்கம் வெளியிட்டுத் தலைமையுரை ஆற்றினார். நூலை அருள்பணி சகாயம் பர்னாந்து, அருள்பணி செல்வன் பர்னாந்து, அருள்பணி சுதர்சன் பர்னாந்து ஊர்த்தலைவர் அமல்சன் பீரிஸ், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் மிக்கேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.நூலை ஆழி புத்திரன் அறிமுகம் செய்து பேசினார். எழுத்தாளர் நெய்தல் அண்டோ ஏற்புரை நிகழ்த்தினார். வெள்ளி விழா காணும் அருள்பணி பிராங்கிளின் பர்னாண்டோ, பொன்விழா காணும் முனைவர் அருள்பணி அமுதன் அடிகள் ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர்.


நிகழ்வில் ஊர்க் கமிட்டி மற்றும் ஊர்மக்கள் சார்பில் *அமுதன் அடிகளுக்கு* *இதழியல் இமயம்* என்ற பட்டமும்,


 *நெய்தல் அண்டோவின் எழுத்துப்பணியைப் பாராட்டி* *சமூகப் பேரொளி* என்ற பட்டமும் வழங்கப்பட்டது.



முன்னதாக வந்தோரை ஊர்த்தலைவர்  அமல்சன் பீரிஸ் வரவேற்றார். புனித  ஜோசப் மேனிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் செபஸ்டின் ராஜா நன்றியுரை கூறினார். நிகழ்வை புனித ஜோசப் மேனிலைப்பள்ளி ஆசிரியப் பெருமக்கள் தொகுத்து வழங்கினர்.


விழாவுக்கான ஏற்பாட்டை ஊர்க் கமிட்டியுடன் இணைந்து ஊரிலுள்ள அனைத்துக் கமிட்டியினரும் செய்து இருந்தனர்.

இந்நிகழ்வில் புன்னையம்பதி மக்கள், மாணவ-  மாணவியர், கோரமண்டல் சமூக நற்பணி மன்றத்தினர், சேவியர்ஸ் ஆசிரியப் பெருமக்கள், அன்னை பரதர் நலச்சங்கத்தினர், அருட்சகோதரிகள் பலர் கலந்து கொண்டனர். ஊர் சிறார்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...