முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.

 ஷ்யாம் நியூஸ்

20.04.2022

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.

தூத்துக்குடி அதிமுகவின் உட்கட்சி அமைப்புத் தேர்தல் மூன்று கட்டமாக நடைபெற்று அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த ஏப் 16ம் தேதி அதிமுக 3ம் கட்ட அமைப்பு தேர்தல் தனியார் ஹோட்டலில் வைத்து மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி, கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணமுரளி ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலை நடத்தி அதன் விவரங்களை அதிமுக தலைமைக்கு அனுப்பி வைத்தனர். அதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தேர்வு செய்து புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தனர்.

அதன்படி தூத்துக்குடி மாநகர வடக்கு பகுதி செயலாளராக பொன்ராஜ், தெற்குப் பகுதி செயலாளராக மாநகராட்சி கவுன்சிலர் வழக்கறிஞர் ராஜா, மத்திய வடக்கு பகுதி செயலாளராக ஜெய்கணேஷ், மத்திய தெற்கு பகுதி செயலாளராக நட்டார் முத்து, கிழக்குப் பகுதி செயலாளராக சேவியர், மேற்கு பகுதி செயலாளராக முருகன் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளராக மாவட்ட கவுன்சிலர் அழகேசன், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளராக காசிராஜன், உடன்குடி ஒன்றிய செயலாளராக தாமோதரன், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளராக விஜயகுமார், ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய செயலாளராக செம்பூர் ராஜ்நாராயணன், சாத்தான்குளம் ஒன்றியச் செயலாளராக சௌந்தரபாண்டி, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளராக இராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளும், திருச்செந்தூர் நகர  செயலாளராக மகேந்திரன்,  காயல்பட்டினம் நகர செயலாளராக டாக்டர் காயல் மளொலானா உள்ளிட்ட நிர்வாகிகளும், ஆறுமுகநேரி பேரூராட்சி செயலாளராக ரவிச்சந்திரன், ஆத்தூர் பேரூராட்சி செயலாளராக சோமசுந்தரம், கானம் பேரூராட்சி செயலாளராக செந்தமிழ் சேகர், நாசரேத் பேரூராட்சி செயலாளராக கிங்ஸ்லி ஸ்டார்லிங், தென்திருப்பேரை பேரூராட்சி செயலாளராக ஆறுமுகநயினார், உடன்குடி பேரூராட்சி; செயலாளராக கோபாலகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி செயலாளராக காசிராஜன், சாயர்புரம் பேரூராட்சி செயலாளராக துரைசாமி ராஜா, பெருங்குளம் பேரூராட்சி செயலாளராக வேதமாணிக்கம், ஏரல் பேரூராட்சி செயலாளராக அசோக்குமார், சாத்தான்குளம் பேரூராட்சி செயலாளராக குமரகுருபரன், ஆழ்வார்திருநகரி பேரூராட்சி  செயலாளராக செந்தில் ராஜகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகர பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனை  பண்டாரவிளையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து  பெற்றனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் வாழ்த்து கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் குறித்து அவரிடம் கேட்ட போது வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெறுவதாக கூறினார்.

இதே போல் பகுதி செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள சேவியர், முருகன், அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியனை சிதம்பரநகரில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...