முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் சிவன் கோவிலில்  சித்ராபௌர்ணமியை முன்னிட்டு 504 மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

ஷ்யாம் நியூஸ்

16.04.2022 

தூத்துக்குடியில் பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் சிவன் கோவிலில்  சித்ராபௌர்ணமியை முன்னிட்டு 504 மாவிளக்கு பூஜை நடைபெற்றது.


 தூத்துக்குடி ஆன்மிக சிறப்பு பெற்ற பாகம்பிரியாள் அம்பிகை உடனுறை சங்கரராமேஸ்வரர் சிவன் கோவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. சிவன்கோவிலில் சித்திரைத் பெருந்திருவிழா ஆண்டுதோறும் பக்தர்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. யானை மீது கொடி ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு விநாயகர் வழிபாடுடன் கொடியேற்றமும், தொடர்ந்து தேர்க்கால் முகூர்ந்த விழாவும் நடைபெற்றது.

திருவிழாவில் தினமும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், சுவாமி அம்பாள் காலை மற்றும் மாலையில் யானை, குதிரை, சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருதலும், ஆலய மண்டபத்தில் பக்தி சொற்பொழிவுகள், ஆன்மிக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத் பெருந்திருவிழா நேற்று காலை சிறிய தேரில் ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீமுருகப்பெருமானும், பெரிய தேரில் சுவாமி ஸ்ரீசங்கரராமேஸ்வரர் பாகம்பிரியாள் அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளி அதனைத்தொடர்ந்து தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

தேரோட்டத் திருவிழாவில் தேருக்கு முன்பாக யானை, ஒட்டகம் அணிவகுத்தும் சிலம்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்ட கலைஞர்கள் பாரம்பரிய கிராமிய சிறப்புடன் நடனமாடியது சிறப்புமிகு காட்சியாகும்.

தேரோட்டத்தை முன்னிட்டு திருக்கோவில் மற்றும் விழாக் குழுவினர் சார்பில் ரதவீதிகளிலுள்ள திருமண மண்டபங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 504 மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை தேரோட்ட பவனி விழா குழுவினரான முன்னாள் கவுன்சிலர்கள் கோட்டுராஜா, கந்தசாமி, மற்றும் ஆறுமுகம், சாந்தி, சோமநாதன், கங்காராஜேஷ், சந்தனராஜ், கோபால், மாரிமுத்து, நெல்லையப்பன், திருவனந்தல்மாரியப்பன், கல்யாணசுந்தரம், முத்துக்குமாரசுவாமி, கார்த்திகேயகுமார், வைரவநாதன், ராதாகிருஷ்ணன், கோவில் நிர்வாகத்தினர், செல்வம்பட்டர், விழாக் குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...