முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வரும் 27ம் தேதி தூத்துக்குடி  டாஸ்மாக் அலுவலகம் முன்பு போராட்டம் !டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் அறிவிப்பு.

 ஷ்யாம் நியூஸ்

12.04.2022

வரும் 27ம் தேதி தூத்துக்குடி  டாஸ்மாக் அலுவலகம் முன்பு போராட்டம் !டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் அறிவிப்பு.

டாஸ்மாக் கிட்டங்கியில் பணி புரியும் ஊழியர்களை கடைகளுக்கு அனுப்பாமல் இருப்பதை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக டாஸ்மாக் ஏஐடியூசி பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் அறிவித்துள்ளார்

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏ ஐ டி யு சி  தூத்துக்குடி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. 08 .04 .2022 வெள்ளிக்கிழமை   தூத்துக்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ கட்சி அலுவலகத்தில் நடைபெற்றத கூட்டத்தில் டாஸ்மாக் ஏஐடியுசி மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் தலைமையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ )கட்சியின் மாவட்ட செயலாளர் அமரர் அழகுமுத்து பாண்டியன் அவர்களுக்கு இரங்கல் அனுசரித்தல்       

மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கொடுக்கப்பட்ட கோரிக்கை கள் நிறைவடையாத கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்துக்கான செயல்பாடுகளை உறுதி செய்தல்

கடைகளில் வெள்ளையடித்தல், கொரானா காலகட்டத்தில் வேலி அமைத்தல்,  கடைகளுக்கான மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் செலவினங்களுக்கு இதுவரை நிதி வழங்காமல் தொழிலாளர்களுக்கு பணம் கஷ்டத்தையும் மன உளைச்சலையும் உண்டு பண்ணுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க கூறுதல்

அவ்வப்போது கடை பணியாளர்களிடம் ஏற்படும் பிரச்சனைகளை சங்கவேற்றுமையின்றி பணத்துக்கு அடிபணியாமல் நேர்மையான முறையில் பாரபட்சமின்றி தீர்ப்பு காண்பது 

 எல்லா அரசு அலுவலகங்களிலும் அறிவுலக மேதை இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் படத்தை அலுவலகத்தில் திறந்து வைக்க மத்திய மாநில அரசுகள் முனைப்புடன் இருப்பதால் தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வற்புறுத்தல் போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மற்றும் நெல்லை நெப்போலியன் செய்தியாளர்களிடம் கூறியபோது  நீண்ட நாள் மது குடோனில் பணிபுரியும் பணியாளர்களை  கடைகளுக்கு அனுப்பாமல் தொடர்ந்து சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகம் மறுத்து வருகிறது இதனை கண்டித்து  வரும் 27ம் தேதி தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் காளிமுத்து முன்னிலை வகித்தார் சகாயம் நன்றியுரையாற்றினார் மற்றும் ஏஐடியுசி டாஸ்மாக் பணியாளர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...