முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

 ஷ்யாம் நீயூஸ்

26.04.2022

சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மோகன்தாஸ் சாமுவேல் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

வழக்கறிஞர்கள் சேமநல நிதியை 7 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒன்பது மாடி நிர்வாக பிரிவு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நாமக்கல் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் முதலாவதாக சென்னையில் வணிக நீதிமன்றங்களை துவக்கி வைத்து, கொரோனாவுக்கு பலியான வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு தலா 7 லட்சம் ரூபாய் சேமநல நிதியை வழங்கினார்.

    ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பொறுப்புக்கு வந்து ஓராண்டை நிறைவு செய்கிறார் எனவும் தான் முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டை அடுத்த மாதம் பூர்த்தி செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டார் முதல்வரான பின் முதல் முறையாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வதாகக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் நீதி நெறிமுறையை சட்டத்தின் ஆட்சியை பின்பற்றும் ஆட்சியை வழங்கிக் கொண்டிருப்பதாக பெருமையோடு தெரிவித்தார்.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, சட்டத்தின் குரலாக மட்டுமல்லாமல் மக்களின் குரலாகவும் விளங்குகிறார் எனத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆண்டு 64 கீழமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டது, வணிக நீதிமன்றங்கள் துவங்க உத்தரவிடப்பட்டது, திருவண்ணாமலை, திருவாரூரில் சார்பு நீதிமன்றங்கள் துவங்கியது, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் புதிய கட்டிடம் கட்ட 20.24 கோடி ரூபாய் ஒதுக்கியது, 4.24 ஏக்கர் நிலம் நீதித்துறைக்கு ஒதுக்கியது குறித்தும் பட்டியலிட்டார்

     மேலும், காரைக்குடியில் புதிய சட்டக் கல்லுரி துவங்க இருப்பதாகவும், வாடகை கட்டிடத்தில் இயங்கும் நீதிமன்றங்களுக்கு கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படும் எனவும் அப்போது அவர் உறுதியளி;த்தார் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதியை ஏழு லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்தார். மேலும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

   தென்மாநில மக்கள் நலனுக்கான நீண்ட கால கோரிக்கையான உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார் தனது இந்த கோரிக்கைகளுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் தமிழகத்தில் இருந்து உச்ச நீதிமன்றம் சென்ற நீதிபதிகள் உதவியாக நிற்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார் அதன்பிறகு, நீதிமன்றங்கள் அமைப்பதற்கு நிலத்தை வழங்குவது தொடர்பான உத்தரவை முதலமைச்சர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழங்கினார்

    முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், 467 வழக்கறிஞர்கள் குடும்பங்களுக்கு சேமநல நிதியாக 32.6 கோடி வழங்கப்படுவதாக குறிப்பிட்டார் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி பேசுகையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நீதி பரிபாலனத்துக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் என்றார்.

இதனையடுத்து தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளரும் மாவட்ட அரசு வழக்கறிஞருமான மோகன்தாஸ் சாமுவேல் தலைமையில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன.

நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர்கள் பாலசுப்பிரமணி, பூங்குமார், எல்லம்மாள், மாலாதேவி, ஆழ்வார் கார்த்திகேயன், திமுக மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் வக்கீல் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வக்கீல் செல்வகுமார், மற்றும் வக்கீல்கள் சங்கர், பாலசுப்பிரமணியன், குபேர் இளம்பரிதி, திலக், மகேந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...