முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் ரூபிக் கன சதுரங்கள் மூலம் " பள்ளி மாணவர் தேசியக்கொடி வடிவத்தை குறைந்த நேரத்தில் உருவாக்கி வேர்ல்டு ஐகான் அவார்டு சாதனை.

 ஷ்யாம் நீயூஸ்

23.04.2022

தூத்துக்குடியில் ரூபிக் கன சதுரங்கள் மூலம் " பள்ளி மாணவர் தேசியக்கொடி வடிவத்தை குறைந்த நேரத்தில் உருவாக்கி வேர்ல்டு ஐகான் அவார்டு சாதனை.


தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை ராமச்சந்திரபுரம் ஸ்ரீ லலிதா வித்யாலயா பள்ளியில் பள்ளி மாணவர்கள் தேசியக்கொடி வடிவத்தை உருவாக்கி வேர்ல்டு ஐகான் அவார்டு சாதனையை நிகழ்த்தினர். தூத்துக்குடி அருகே தனியார் பள்ளியில் வேர்ல்ட் ஐகான் அவார்ட் சாதனைக்கான ரூபிக் கன சதுரங்கள் மூலம் பள்ளி மாணவர்கள் தேசியக்கொடி வடிவத்தை உருவாக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த 100க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இதில், சென்னை ஸ்பா ஜீனியர் கல்லூரி பள்ளியை சார்ந்த 5ம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவன் சபரீஷ் தக்‌ஷன் 25 ரூபிக் கன சதுரங்களை (3 X 3 X 3 ) 16.36 நொடியில் செய்து உலக சாதனை புரிந்துள்ளார் இதைப்போல தூத்துக்குடி ஸ்டார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வரும் 6 வயது மாணவன் ரோஷன் 5 ரூபிக் கன சதுரங்களை 9.11 நொடியில் செய்து  தேசியக்கொடி வடிவத்தை உருவாக்கி உலக சாதனை புரிந்துள்ளார். ஸ்கூல் இன்னோவட் அகடமியில் பயின்று வரும் இம்மாணவர்களின் சாதனையை இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வேர்ல்ட் ஐகான் அவார்ட் அலோசனைக்குழு கமிட்டி உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மண்டலத்தலைவர் சேகர் அருண் ஆகியோர் அங்கீகாரம் அழித்து இம்மாணவர்களின் சாதனையை அங்கீகரித்து மாணவர்கள் சபரீஷ் தக்‌ஷன், ரோஷன் ஆகிய இரண்டு பேருக்கும் மெடல்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள். சாதனை புரிய காரணமாக இருந்த ஸ்கூல் இன்னோவட் நிறுவனர் மாரியப்பனை பாராட்டினார்கள்.

இந்நிகழ்ச்சியில், சிவசேனா கட்சியின் தென்மண்டல தலைவர் கோமதிராஜ், டாக்டர். விக்னேஷ் பொன்னி இசக்கி பாண்டியன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் மெடல்களையும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...