முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மழைநீர் வடிகால் பணிகள் மழைக்காலத்திற்கு முன்பாக முடிக்கப்படும் என்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி கூறியுள்ளார்.

ஷ்யாம் நியூஸ்

09.09.2022

மழைநீர் வடிகால் பணிகள் மழைக்காலத்திற்கு முன்பாக முடிக்கப்படும் என்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை மழை பெய்தாலே மாநகரிலுள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும், முக்கிய சாலைகளிலும் மழைநீர் குளம் போல தேங்கி விடுவது என்பது  வழக்கத்தில் இருந்து வருகிறது. இதனால், மழைக்காலங்களில் மாநகர மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய மேயராக பொறுப்பேற்றுள்ள ஜெகன்பெரியசாமி தமிழக முதல்அரைமச்சரின் அறிவுறுத்தல்படி மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கிடாத வகையிலான அடிப்படை பணிகளை முதல்கட்டமாக துவங்கி அவற்றை துரிதமாக மேற்கொண்டு வருகிறார். அதோடு இப்பணிகளை நாள்தோறும் நேரில் சென்று ஆய்வு செய்து துரிதப்படுத்தியும் வருகிறார்.

இதன்படி மாநகரிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் வரும் பருவமழையினை கருத்தில்கொண்டு அதற்கான முன்னேற்பாடு பணிகளாக குடியிருப்புகள், முக்கிய சாலைகள் போன்ற இடங்களில் மழைநீர் தேங்கிடாத வகையில் புதியதாக மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதன்படி, தூத்துக்குடி மாநகராட்சியின் நந்தகோபாலபுரம், ரஹ்மத் நகர், எஸ்.கே.எஸ்.ஆர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மேயர் ஜெகன்பெரியசாமி கூறியதாவது, தூத்துக்குடி மாநகரில் மழைக்காலத்தை கருத்தில்கொண்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் தமிழக முதல்வரின் அறிவுறுத்தல்படி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதற்காக மாநகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்கள் புதியதாக அமைக்கப்பட்டு வருவதுடன், ஏற்கனவே புழக்கத்திலுள்ள கால்வாய்கள் தூர் வாரப்பட்டுள்ளது.

 இந்தப்பணிகள் அனைத்தையும் வரும் மழைக்காலத்திற்கு முன்பாக முடித்திட ஒப்பந்ததாரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்அடிப்படையில் மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் அனைத்தும் மழைக்காலத்திற்கு முன்பாக முற்றிலும் முடிக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது, மாநகராட்சி அதிகாரிகள்,  திமுக வட்ட செயலாளர் பி.என்.ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சி.எஸ். ராஜா, மாநகர தொண்டரணி அமைப்பாளர் ராமர்,   மேயரின் உதவியாளர்கள் ஜேஸ்பர், பிரபாகர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...