ஷ்யாம் நியூஸ்
25.09.2022
தூத்துக்குடியில் அனைத்து அம்மன்களின் சப்பரபவணி இந்து முன்னனி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகர் சப்பரப்பேரணி 40ம் ஆண்டு விழா சம்பந்தமாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி பாகம்பிரியாள் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் இந்து முன்னனி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு அனைத்து அம்பாள்களின் சப்பரப் பேரணி கமிட்டி தலைவர் தனபாலன், துணைத் தலைவர் வன்னியராஜ் ஒருங்கிணைப்பாளர் மாயக்கூத்தன், பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம், செயலாளர் ஆதிநாதஆழ்வார், பொருளாளர் இசக்கி முத்துக்குமார், அமைப்பாளர் சிவகுமார் அனைத்து கோவில் தர்மகர்த்தாக்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் மாவிளக்கு ஊர்வலம் மற்றும் பாரதமாதா ஊர்வலத்தின் தலைவராக கனகராஜ் தலைமை ஏற்க முடிவு செய்யப்பட்டது.
சப்பர பேரணி விழா சிறப்பாக நடைபெற ஆலோசனை கூட்டத்தில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் மற்றும் மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் கீதாசெல்வ மாரியப்பன், கிருஷ்ணராஜபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் சார்பாக ஆறுமுகபாண்டி, மாடசாமி தங்ககுமார், கீழசண்முகபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் சார்பாக பழனிவேல், முத்துகிருஷ்ணாபுரம் ஆதி பரமேஸ்வரி கோவில் யாதவர் சமுதாயம் சார்பாக சிவராமகிருஷ்ணன் மற்றும் நாராயண ராஜ், ராகவேந்திரா, சரவணகுமார் , செல்லப்பா, பாலசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்