முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கனிமொழி எம்.பி. கேள்விக்கு பதிலளிக்க திணறிய அதிகாரிகள்

 ஷ்யாம் நியூஸ்

27.09.2022

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கனிமொழி எம்.பி. கேள்விக்கு பதிலளிக்க திணறிய அதிகாரிகள்

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறைச்சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் 2021-2022ம் ஆண்டு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்து ஒவ்வொரு துறையின் சார்பிலும் நடைபெற்ற பணிகளை கனிமொழி எம்.பி. நேரடியாக அதிகாரிகளிடம் தங்களது துறைசார்ந்த பணிகளையும் நடைபெற வேண்டியவைகள் குறித்து வினா எழுப்பினார். அதற்கு ஒருசில அதிகாரிகள் மட்டும் பதிலுரையில் திருப்தி அடைந்த கனிமொழி பல்வேறு துறை சார்ந்தஅதிகாரிகளின் பதிலுரை திருப்தி இல்லாத நிலையில் அதிகாரிகள் மத்தியில் பேசும்போது இதுபோன்ற கூட்டத்திற்கு வரும்போது நடைபெற்ற பணிகள் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து முழுமையான திட்டத்தோடு கூட்டத்தில் பங்குபெற வேண்டும் என்றார். இருப்பினும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தங்களது துறைகளின் திட்டங்களை முழுமையாக எடுத்து வராத காரணத்தால் கலெக்டர் செந்தில்ராஜூம் சற்று எச்சரிக்கும் வகையில் பேசினார். திமுக ஆட்சி பொறுப்பேற்று பதினான்கு மாதங்கள் ஆகின்றன. இதற்கு முன்பு இதுபோன்ற ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்றதா இல்லையா என்ற சந்தேகம் அங்கிருந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கு எழுந்தது. காரணம் அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் கடந்த 10 ஆண்டுகளாக சுதந்திரமாக செயல்படுகிறோம் என்ற பெயரில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டார்களா இல்லையா? இதுபோன்ற அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் செய்கின்ற தவறுகளால் தான் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என்று கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக-வை சேர்ந்த ஒருவர் கருத்து தெரிவித்தார். மாவட்ட வளர்ச்சிக்கு முழுமையாக பணியாற்ற வேண்டிய அதிகாரிகளே மெத்தனப் போக்கால் இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஒவ்வொரு துறைவாரியாக கலந்துகொண்ட அதிகாரிகள் செயல்பாடுகளை கூறும்போது குறிப்பிட்டு தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பணிகளையும் நடைபெற இருக்கின்ற பணிகளுக்கும் விளக்கம் கேட்டார். அதற்கு கூட சரியான பதில்கள் இல்லாத நிலையே இருந்தது. இதுபோன்று தான் அனைத்து துறைகளிலும் இருக்குமோ? என்ற கேள்விக்கூட எழும்நிலை உருவானது. இச்சம்பவம் நடைபெற்றக் கொண்டிருக்கும் போது கூட்ட அரங்கில் இருந்த ஊடகத்துறையைச் சேர்ந்த செய்தியாளர்கள் புகைப்படக்காரர்கள் ஒளிப்பதிவாளர்களை வெளியேற்றினார்கள். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ. மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் கலெக்டர் வளர்ச்சி சரணவன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, நகர்நல அலுவலர் அருண்குமார், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் வசுமதி அம்பாசங்கர், ரமேஷ், உட்பட பல்வேறு துறை அலுலவர்களும் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...