முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்செந்தூர் முருகன் கோவில் பட்டா நிலங்களில் விடிய விடிய நடைபெறும் துணிகர மணல் கொள்ளை!! மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இசக்கிராஜா தேவர் பரபரப்பு புகார்!!

ஷ்யாம் நியூஸ்

06.09.2022

 திருச்செந்தூர் முருகன் கோவில் பட்டா நிலங்களில் விடிய விடிய நடைபெறும் துணிகர மணல் கொள்ளை!! மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இசக்கிராஜா தேவர் பரபரப்பு புகார்!!


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே மானாடு, தண்டபத்து பகுதியில் அரசு நிலங்கள் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில் பட்டா நிலங்களில் விடிய விடிய  துணிகரமாக  மணல் கொள்ளை நடந்து வருவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர்  கே.என். இசக்கிராஜா  தேவர் மனு அளித்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அவர் அளித்த மனுவில் தெரித்துள்ளதாவது: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி சமூக பணிகளை செய்து வருகிறேன். தூத்துக்குடி மாவட்டம் பிரசித்தி பெற்ற குலசேகரபட்டினம் உடன்குடி பவர் பிளாண்ட் அருகில் மானாடு தண்டுபத்து கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு நிலங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான பட்டா இடங்களிலும் கடந்த சில நாட்களாக ஒரு பெரிய மணல் மாபியா கும்பல், 20க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் மற்றும் சவுடி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. அந்த கும்பல் கீழ திருச்செந்தூர் கிராமத்தில் உள்ள புல எண் 91/1, 91/2 & 96A/1 ஆகிய பட்டா இடங்களில் 3 அடி ஆழத்திற்கு சவுடி மணல் உள்ள  அரசிடம் அனுமதி பெற்று, அந்த சீட்டினை வைத்துக் கொண்டு மேற்கண்ட மாநாடு தண்டுபத்து கிராமத்தில் 20 முதல் 25 அடி ஆழத்திற்;கு சவுடுமணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த தொழிலை மையமாக கொண்ட பகுதியாகும். 

அங்கு 25 அடி ஆழத்திற்கு மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் அடியோடு அழிக்கப்படுவதோடு, கால்நடைகளும், குழந்தைகளும் அதில் விழுந்து மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் உலக பிரசித்தி பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா வரும் நாட்களில் நடைபெற உள்ளதால் விழாவிற்கு வரும் வெளியூர் பக்தர்களும் மணல்  அள்ளிய பள்ளங்களில் தேங்கும் மழைநீர் ஆழம் தெரியாமல் இறங்கி மூழ்கி இறக்கும் அபாயமும் உள்ளது. மேற்படி மணல் கொள்ளை நாட்டிற்கே பெரிய அபாயம் என்றும், தற்போது அதனை தடுக்காவிட்டால் எதிர்கால சந்ததிகள் குடிக்க கூட தண்ணீர் இருக்காது என உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையிலும், ஒரு சில அரசு அதிகாரிகளின் துணையோடு மேற்படி கும்பல் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் மேற்படி பகுதி கடலோர பகுதி என்றும் பாராமல் 20 முதல் 25 அடி ஆழத்திற்கு மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதால் கடல்நீர் உட்புகும் அபாயமும் உள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் மணல் அள்ள மத்திய கடலோர பாதுகாப்பு அமைப்புகளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற விதிமுறைகளுக்கு புறம்பாக கீழதிருச்செந்தூர் பகுதியில் சவுடு மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி கீழ திருச்செந்தூர் கிராமத்தில் உள்ள புல எண் 91/1, 91/2 & 96A/1 ஆகிய பட்டா இடங்களில் சவுடு மணல் அள்ள வழங்கப்பட்டுள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்வதுடன், மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் நபர் மீீீது Tamilnad Mines & Minerals (Development & Regulation) Act 1957-ன் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். மேற்படி பொக்லைன் வாகனங்கள் மற்றும் லாரிகளை பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்க வேண்டும் எனவும் இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு   தனது  பரபரப்பான புகார் மனுவில்  தெரிவித்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...